December 23, 2009

எங்கே பிராமணன் (நீங்கள் ஆத்திகரா?) (பகுதி 4/5)

கொள்கையில் பிடிப்பு நம்மில் ஏறக்குறைய அனைவருக்கும் அதி தீவிரமாய் இருப்பதில்லை. அரசியல்வாதிகள் கட்சி விட்டு கட்சி தாவுவதற்கும், கொள்கை மாற்றிக்கொள்வதற்கும் கேலிக்கும் நாம், நம் சொந்த விடயங்களில், எவ்வளவு முறை கொள்கையை விட்டுக்கொடுத்திருக்கிறோம் வளைந்து கொடுத்திருக்கிறோம் என்பதை நினைவு கொணர வேண்டும். "The only constant is change" என்பது பிரபல வழக்குமொழி மட்டுமல்ல, உண்மயாதும் கூட. பல பரிணாமங்களில், விகிதத்தில் நம் உடலில், உணர்வில், கொள்கைப் பிடிப்பில், சிந்தனையில் அறிவில் மாற்றம் நிகழ்ந்தவண்ணம் இருக்கும்.

அதனாலேயே உண்மையான ஆத்திகனோ உண்மையான நாத்திகனோ கிடைத்தற்கறியவன். நிறைய நாத்திகர்களிடமும், குறைந்தபட்ச நம்பிக்கை அவ்வப்பொழுதோ, அல்லது தன்னை மிஞ்சியதொரு ஷக்தியை எதிர்நோக்கும் போதோ, இழை போல் மெல்லியதாய் தலையெடுக்கும். அதே போல் உண்மை ஆத்திகன் என்று எவரும் இல்லை. சோதனை காலத்தில் "இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா" என்று துவளும் ஆத்திகர்கள் ஏராளம்.

மின்னஞ்சல் மூலம் வந்த மனதைத் தொட்ட கதை ஒன்று. அதனை தமிழாக்கம் செய்தால் சுவை குறைந்து விடுமோ என அஞ்சி, உங்களுக்காக அதை அப்படியே ஆங்கிலத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

As drought continued for what seemed an eternity, a small community of farmers was in a quandary as to what to do। Rain was important to keep their crops healthy and sustain the towns people's way of life. As the problem became more acute, a local pastor called a prayer meeting to ask for rain.

Many people arrived. The pastor greeted most of them as they filed in. As he walked to the front of the church to officially begin the meeting he noticed most people were chatting across the aisles and socializing with friends. When he reached the front his thoughts were on quieting the attendees and starting the meeting.

Eyes scanned the crowd as he asked for quiet। He noticed an eleven year-old girl sitting quietly in the front row। Her face was beaming with excitement. Next to her, poised and ready for use, was a bright red umbrella. The little girl's beauty and innocence made the pastor smile as he realized how much faith she possessed. No one else in the congregation had brought an umbrella. All came to pray for rain, but the little girl had come expecting God to answer.

இக்கதையில் வரும் சிறுமியின் நம்பிக்கை, ஆத்திகன் நம்மவரில் எத்தனை பேருக்கு இறைவனிடம் இருக்கிறது? - சிந்திக்க வேண்டிய கேள்வி। சுத்த நாத்திகனாகவும் இல்லாமல், ஆத்திகனாகவும் இல்லாமல் நம் அறிவும் மனமும் பெண்டுலம் போல் இப்படியும் அப்படியும் ஆடிக்கொண்டிருக்கிறது. அதனால் தான் ஆத்திகன் நாத்திகன் ஆவதும், நாத்திகன் ஆத்திகன் ஆவதும் அடிக்கடி நடைபெறுகிறது.


நம்பிக்கை எத்தனை பரிசுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்கு குமரில பட்டரின் கதை சான்று. கர்ம யோகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள இவர், பௌத்த மதத்தை அறிந்து கொள்ள, தம்மை சீடனாக அறிமுகப்படுத்திக்கொண்டு பாடம் பயின்று வருகிறார். ஞானமார்க்கத்தின் வழியை பின்பற்றும் அவர்களால் வேதங்கள் நிந்திக்கப்படுவதை சகிக்க முடியாதவராய் கண்ணீர் உகுக்கிறார். இவரைப் பற்றிய உண்மை தெரிந்ததும் இவருக்கு தண்டனை விதிக்கும் வகையில் மலை உச்சியில் இருந்து குதிக்க ஆணையிடுகின்றனர். அப்போது அவர் "வேதம் உண்மையாய் இருந்தால் அது என்னைக் காக்கும்" என்று கூவிக்கொண்டே குதித்தும் அவருக்கு பெரியதாய் அடி ஏதும் படவில்லை. எனினும் கல்லடி பட்டு ஒரு கண் குருடானது. வேதம் உண்மையாய் இருந்தும் எனக்கேன் இந்த கதி? என்று அவர் நினைக்கையில் அசரீரி ஒலிக்கிறது "வேதம் உண்மையானால்" என்ற சிறு சந்தேகத்தை வைத்ததனால், உனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை" என்றது. சிறு இழையேனும் நம்பிக்கை இல்லாதிருந்தால், பக்தியின் பலன் முழுமையாக கிட்டாது என்பது தெள்ளத் தெளிவாகிறது.

http://www.statemaster.com/encyclopedia/Kumarila-Bhatta

http://www.kamakotimandali.com/blog/index.php?p=512&more=1&c=1&tb=1&pb=1

(diff versions of the same story)


வேதங்களின் முறைப்படி வர்ணரீதியாக ஒருவனும் பிராமணனே அல்ல என்று அஷோக் சொன்னதை பாகவதர் வித்தியாசமான கோணத்தில் நாதன் தம்பதியருக்கு விளக்குகிறார். அஷோக் செய்தது "நான் யார்" என்ற இலக்கை நோக்கிப் போவதற்கு ஒரு சிறு ஊந்துகோல், ஒவ்வொருவரும் தன்னைத் தானே பரீட்சை செய்து கொள்ள வேண்டிய ஆன்ம விசாரம். ஆன்ம விசாரத்தில் ஈடுபடுவதனால் ஒருவன் உசத்தி என்றோ, ஆன்மவிசாரத்தில் ஈடுபாடாததானால் இன்னொருவன் மட்டுபட்டிருக்கிறான் என்றோ நாம் தவறாக எண்ணிவிடக்கூடாது. கடவுளின் சாரம்சம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆன்ம ஒளியை க்ரஹித்து வெளிக்கொணரும் ஒருவனின் ஜ்யோதி அதிகம் ப்ரகாசிக்கிறது. ஒளியின் தத்துவம் மாறுபாடாது இருக்க, அதை உள்வாங்கி ஒளிசிந்தும் தன்மை சிலருக்கு அதிகமாக இருக்கலாம். உயர்வும் தாழ்வும் கூட மாயையினால் நாமே கற்பித்துக் கொள்வது.

ஆன்மவிசாரத்தில் மட்டுமே ஈடுபட்டால் போதுமே, விதிக்கப்பட்ட சடங்குகளும் சம்பிரதாயங்களும் அவசியமா? என்று அனைவரும் நம்மை நாமே கேட்டுக்கொள்கிறோம். சடங்குகளும், சம்பிரதாயங்களும் தேவையற்றவை. அவையனைத்தும் ஆன்ம குணங்களுக்கு வழிகாட்டியாய் விளங்குபவை மட்டுமே. தர்ம சாஸ்திரத்தில் நாற்பது வகை சமஸ்காரங்கள செய்து எட்டு ஆன்ம குணங்களைப் பெறவேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி எட்டு ஆன்ம குணங்கள் ஏற்கனவே ஒருவன் பெறப்பெற்றிருந்தால் அவனுக்கு சமஸ்காரமும் சடங்கும் அவசியம் இல்லை.

அன்பு
ஷாந்தி (சகிப்புத் தன்மை / பொறுமை)
அனசூயை (பொறாமை இன்மை)
சௌச்சம் (சுத்தம்)
அனாயாசம் (பதட்டமோ படபடப்போ இன்றி செயல்படுதல், calm and composed)
மங்களம் (நற் சொற்களை, சிந்தனைகளை பேசுதல், செய்தல், அப்படி செய்து மற்றோரையும் தன்னுயிரையும் சந்தோஷமாக்குதல்)
அகார்பணம் (தன்னைத் தாழ்த்தி கொள்ளும் (அல்லது உயர்த்திக்கொள்ளும்?) கருமித் தனம் இல்லாதொழிதல் i.e absence of inferior or superior feelings about oneself)
அச்ப்ருஹம் (பற்று இன்மை)

ஆகிய எட்டு குணங்கள் உங்களுள் பின்னிப்பிணைந்திருக்கிறதா? அப்படியெனில் சடங்கும் சம்பிரதாயமும் உங்களுக்கு தேவையில்லை. நீங்கள் ஆன்மவிசாரத்தில் மட்டுமே கூட ஈடுபட தகுதிபெற்றவர் என்று கொள்ளலாம்.

2 comments:

  1. //ஆகிய எட்டு குணங்கள் உங்களுள் பின்னிப்பிணைந்திருக்கிறதா? அப்படியெனில் சடங்கும் சம்பிரதாயமும் உங்களுக்கு தேவையில்லை. நீங்கள் ஆன்மவிசாரத்தில் மட்டுமே கூட ஈடுபட தகுதிபெற்றவர் என்று கொள்ளலாம்..//

    அப்படியெனில், மேற்கண்ட எட்டு குணங்களை சடங்கும், சம்பிரதாயமும் கொடுக்கவில்லை எனில் அவையும் தேவையில்லை என்று அர்த்தம் ஆகின்றது அல்லவா? இப்படியெல்லாம் கறாராக எதையும் கணிக்கமுடியாது என்றே நினைக்கிறேன்.

    சடங்கும், சம்பிரதாயமும் தனிமனித திருப்திக்குத் தான்; அதற்கு அடுத்த படியாக, ஆத்மவிசாரத்தை நோக்கி அவனை உந்தித் தள்ள. தனிமனித திருப்தி ஏற்படும் பொழுது இந்த உந்தித்தள்ளல் தானாகவே அவனுள் நிகழும்.

    எல்லாம் ஆத்மவிசாரம் கிடைக்கும் வரைதான். கிடைத்து விட்டால், இயல்பாகவே சடங்கு, சம்பிரதாயங்க- ளிலிருந்து மனம் விலகிப் போகும்.

    நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து தொடருங்கள்.

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி ஜீவி. நீங்கள் சொல்லியிருப்பதைத் தான் நான் சற்றே dramatic ஆக சொல்ல முயன்றேன். உண்மை தான். தேவையில்லை என்றால் அவன் அதனை கடந்து தன் தேடலை துவங்குகிறான் . மனம் விலகிப் போகிறது.

    மீண்டும் நன்றி. :)

    ReplyDelete