December 15, 2009

சொ-வின் எங்கே பிராமணன் part1 (துளசிதாசரின் பக்தி)

துளசிதாசர் சிறந்த பக்தர், ஆனால் அவர் வால்மீகியைப் போல் முதலில் வேறு பாதையில் சென்றுகொண்டிருந்தவர், திடீரென பாதை மாறியவர். துளசிதாஸருக்கு மனைவியின் மேல் மிகுந்த அன்பு, காதல் தாண்டிய மோஹம் உண்டு. அவள் துணையே கதி என்றிருந்தார். அவள் எங்கு சென்றாலும், அவள் பிரிவைத் தாங்காது பின் சென்றுவிடுவார். ஒரு முறை அவள் "என்னிடம் வைத்திருக்கும் மோஹத்தில் ஒரு பகுதியேனும் இறைவனிடம் செலுத்தி இரமனை தியானியுங்கள்" என்கிறாள். உடனே அவருள் மாற்றம் ஏற்படுகிறது. சிவபெருமான் அருள் புரிந்து அவரை "ராம சரித மானஸ்" எழுதுமாறு பணிப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு இராமனின் பால் பிராட்டி சீதையின் பால் மிகுந்த பக்தியிருப்பதால், இராவணன் சீதையின் கூந்தலைப்பிடித்து அழைத்துப் போனதை எழுத மனமின்றி, அவள் சீதையே
அல்ல, அது மாயா-சீதா எனக் கதையை சற்றே கதையை திரித்து எழுதியதாய் கேள்வி.

ஹனுமனைத் துதித்து அவர் எழுதிய "ஹனுமான் சாலிசா" நாற்பது ஸ்லோகங்களைக் கொண்டது (வடமொழி ஹிந்தியில் உள்ளது)। அதை 21 நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் 7 முறை கூறி வந்தால், நினைத்த காரியம் ஜெயம், வியாதிகள் அற்றுவிடும் என்பது நம்பிக்கை. அப்பேற்பட்ட மஹான் எழுதியதால் அந்த ஸ்லோகத்தின் மகிமையும் பலனும் அதிகம். நிச்சயம் சித்திக்கும்.

No comments:

Post a Comment