May 30, 2019

குலச்சிறை நாயனார்

Image result for குலச்சிறை நாயனார்

பாண்டிய நாடு பெற்ற முத்துக்களில் ஒருவர் குலச்சிறை நாயனார். குலமென்றும் குணமென்றும் பாராமல் சிவனடியார்கள் என்று கூறி வருவோர்க்கும், ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதும் பெரியோர்க்கும் அமுதளித்தும் பெருமைப் படுத்தியும் சிவ வழிபாட்டின் வழி நின்றவராயிருந்தார்.
.*
சிவபெருமானின் உயர்வை தாங்கிப் பிடிக்கும் சைவம் எனும் வழியை தனதாக்கிக் கொண்டதோடன்றி அதன் வளர்ச்சிக்கும் பெரிதும் பாடுபாட்டார். பாண்டி நாட்டு மன்னன் நேடுமாற பாண்டியனுக்கு பிரதம அமைச்சராக பணியாற்றி வந்தார். பாண்டிய மன்னன் அந்நாட்களில் சமணக் கொள்கைகளை பெரிதும் மதித்து, சமண மதத்தை தழுவியிருந்தார். 
.
அவரின் துணைவியார் மங்கையர்கரசியார் சைவத்தின் பால் வழுவாமல் நின்றிருந்ததால், குலச்சிறையார், மங்கையர்கரசியாரின் துணை கொண்டு பாண்டி நாட்டில் சமணர்களின் வீழ்ச்சிக்கு பெரிதும் காரணமானார். 
.
திருஞானசம்பந்தர் பெருமானை மதுரைக்கு வரவேற்று, சைவக் கொள்கைகளை பரப்புதற்கு காரணமானர். சம்பந்தரின் கொள்கையாலும் தனக்கு வந்த பேரிடரிலிருந்து தமைக் காத்த சம்பந்தரின் அருட்கொடையாலும் சைவத்தின் பெருமையை
நன்கு உணர்ந்த பாண்டிய மன்னன், பின்னாட்களில் குலச்சிறையாருக்கு பெரிதும் துணை நின்றார். குலச்சிறையார், மன்னரின் ஆதரவையும், மங்கையர்கரசியாரின் உதவியுடனும், பெருகி வந்த சமண கொள்கைகளையும் பொய்வாதம் செய்யும் சமணவாதிகளையும் இல்லாதொழித்து, திரு நீற்றின் மகிமை பாண்டி நாடெங்கும் செழிக்கச் செய்தார். 
.
சுந்தரமூர்த்தி நாயனாரும், ஒட்டக்கூத்தரும் பெருநம்பி என குலச்சிறையாரைக் குறிப்பிட்டு, அவர் சைவத்திற்கு ஆற்றியபெரும் பங்களிப்பை பாராட்டிப் பாடியுள்ளார்கள். 
.
இறையனாரின் நாமத்தில் சித்தம் பரிகொடுத்து, பெருவாழ்வு வாழ்ந்த நாயனார், புவியுலகை நீத்த பிறகு, எம்பெருமானார் பாதமலரடியை அடைந்து பேரின்பம் பெற்றார்.
ஓம் நமச்சிவாய

Lalitha Sahasranama (621 - 630) (தமிழிலும்)



Vibhoothi Visthaaram

Divya Vigraha;
Klimkaaree;
Kevalaa;
Guhya;
Kaivalyapadha dhaayini;
Tripura;
Trijagad Vandhya;
Trimurthi:;
Tridasheshwari;
Tryakshari;

()
Divya = Beautiful  - Celestial
Vigraha = shape   - body

#621 Divya Vigraha = She who has divinely splendorous form 

()
Klim = Bija akshara *

*Bija akshara is a seed letter that forms the mantra for one particular deity. Bijakshara for each divine form may vary.  It is very potent and generally chanted after proper initiation from a right guru. 

#622 Klim-kaaree = Who is in the form of (crux) Bija Mantra Klim 

()
Kevala = only - that alone 

#623 Kevalaa = She who is nothing but that.- Who stands unique and alone ie established
in herself and  comprising of "everything" - Who is absolute.  

()
Guha = mysterious - private

#624 Guhya = Who is secretive ie Who cannot be comprehended by all. (whose worship cannot be upheld by everybody) 

()
Kaivalya = emancipation
Pada = post - rank - State (here in this context) 
Kaivalya-Padha = State of Moksha (liberation) 
Dhaayini = to give 

#625 Kaivalya-Padha Dhayini = Who bestows ultimate liberation ie final emancipation

()
pura = in the beginning 

#626 Tripura = Who is the ancient than the trinity (older ie the source) *

*Some devotees read this name to refer that  she is in the form of all 'three folds' like triguna, tridevas, trishakthis, three worlds, three types of activities etc..


()
Vandhya = to be adored - praised
Jagat   = world

#627 Trijagat Vandhya = Who is considered venerable and worshiped in all three three worlds(lokas)  (bhu, bhuvar, suvar)


#628 Trimoorthi = Who is the unified form of trinity (Brahma, Vishnu, Maheshwara) 

()
Tridasa = divine - heavenly beings - divinity  - Gods

#629 TridasEshvari = Who is the God of Gods - Mighty Ruler. 

()
Aksha = Letters- syllables

#630 Tryakshari = She Whose form is the three sacred syllables ( A U M ) 

(to Continue) 


லலிதா சஹஸ்ர நாமம் (621 - 630) 

விபூதி விஸ்தாரம்

திவ்ய விக்ரஹா;
க்லீம்காரீ;
கேவலா;
குஹ்யா;
கைவல்யபத தாயினீ;
த்ரிபுரா;
த்ரிஜகத்-வந்த்யா;
த்ரிமூர்த்தி;
த்ரிதசேஷ்வரீ;
த்ரயக்ஷரீ;

()
திவ்ய =  தெய்வீகமான -  அழகு
விக்ரஹ = அமைப்பு  - உடல்

#621 திவ்ய விக்ரஹா = தேய்வீக எழிலமைப்பை உடையவள்  

()
க்லீம் = பீஜ அக்ஷரம் *

* பீஜ அக்ஷரம் என்பது சக்தி வாய்ந்த ஓரெழுத்து மந்திராக்ஷரங்கள். பீஜம் என்றால் விதை. ஒவ்வொரு தெய்வ வடிவத்திற்கும் பீஜாக்ஷரம் வேறுபடும். மந்திர சக்தியை ஒரெழுத்தில் அடக்கி விடும் அக்ஷர மந்திரங்களை பீஜாக்ஷரங்கள் என்று குறிப்பிடுவதுண்டு. பெரும்  நலன் பயக்கும் அபாரசக்தி மிக்க இம்மந்திரங்களை தீக்ஷை பெற்று ஜபிப்பதே சிறந்தது. 

#622 க்லீம்-காரீ = க்லீம் எனும் பீஜாக்ஷர மந்திரத்தின் வடிவமானவள் 

()
கேவலா = தனியொன்றாக- ஒன்று மட்டும்

#623 கேவலா = அவள் மட்டுமே தனித்தன்மையுடன் எதனையும் சாராதிருப்பவள் - முழுமையானவள்- தன்னில் தானே உறைந்து (அதனால்)  எல்லாமுமானவள் .

()
குஹ = மர்மமான - அந்தரங்கமான - வெளிப்படாத

#624 குஹ்யா = மறைபொருளானவள் - அனைவராலும் எளிதில் உணரப்படாதவள் (அவளது வழிபாடு அனைவராலும் பின்பற்ற இயலாதது) 

()
கைவல்ய = கைவல்யம் - மோக்ஷம் 
பத = பதவி - ஸ்தானம்
கைவல்ய பதம் = வீடுபேறு 
தாயினி = வழங்குபவள் 

#625 கைவல்ய-பத தாயினீ = முக்தி நிலை அருள்பவள் 

()
புர = முதன்மை - ஆரம்பம் - புராதனம்

#626  த்ரிபுரா = மும்முர்த்திகளைக் காட்டிலும் புராதனமானவள் ie அனைத்துக்கும் முதலான ஆதார சக்தி *

*இந்நாமத்தை முக்குணங்கள், முத்தேவர்கள் மும்மூர்த்தி) , மூவகை சக்தி, மூன்று உலகங்கள், முத்தொழில்கள், முக்காலம் என மூத்தன்மை உடைய அனைத்துடனும் அர்த்தம் செய்து கொள்ளலாம்.


()
வந்த்யா = போற்றத்தக்க
ஜகத் = ஜகம் - உலகம்

#627 த்ரிஜகத் வந்த்யா = மூவுலகிலும் புகழ்ந்து போற்றி வழிபடப்படுபவள்
(பூ, புவர், சுவர் லோகங்கள்) 

#628 த்ரிமூர்த்தி = மூம்மூர்த்திகளின் ஐக்கிய வடிவமானவள் (பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரர்)

()
த்ரிதஸா = தெய்வங்கள் - தேவர்கள் - கடவுளர்கள்

#629 த்ரிதசேஸ்வரீ = கடவுளர்களுக்கெல்லாம் ஈஸ்வரி  - சர்வேஸ்வரி (பிரபஞ்சத்திற்கு தலைவி)   

()
அக்ஷ = எழுத்துகள் - அசை

#630 த்ரயக்ஷரீ = மூன்று அக்ஷரங்களின் வடிவானவள் ( அ - உ - ம் எனும் அக்ஷரங்களால் ஆன  ஓம் எனும் பிரணவ மந்திர வடிவம்) 

(தொடரும்) 



Thanks and reference:
Spokensanskrit.com
manblunder.com

A humble attempt to discuss meanings word by word - ShakthiPrabha 

May 28, 2019

குங்கிலியக்கலய நாயனார்





மார்க்கண்டேயருக்கு வாழ்வளித்த பெருமான் திருக்கடவூரில் அமிர்தகடேஸ்வரராக வீற்றிருக்கிறார். பெருமைவாய்ந்த திருக்கடவூர் திருத்தலத்திற்கு மேலும் பெருமை சேர்த்தார் குங்கிலியக்கலய நாயனார். திருக்கடவூரில் பிறந்து அங்கு குடிகொண்டுள்ள அமிர்தகடேஸ்வரருக்கு தூபம் இடுவதை தன் திருப்பணி என நினைத்து நாள் தவறாமல் செய்து வந்தார்.
.
வறுமை தோன்றிய பொழுதிலும் தமது அன்றாட ஆடம்பரங்களையும் செலவுகளையும் குறைத்தாலும் குங்கிலியம் இடுவதை தவறாமல் ஆற்றினார். வறுமையின் காரணமாக சில நாட்கள் மக்களும் மனைவியும் உணவின்றி வாடும் நிலைமைக்கு ஆளானார்கள். பொற்தாலியை விற்றுப் பணம் பண்ணி நெல் வாங்கி வரும்படி மனைவி பணித்தமையால் அதை விற்க கொண்டு சென்றார். வழியெங்கும் குங்கிலியம் இடுவதற்கு இனி பணத்திற்கென்ன வழி என்று யோசித்து வருந்தியபடியே சென்றவருக்கு, குங்கிலியப் பொதி விற்றுக்கொண்டு வரும் வணிகன் கண்ணில் தென்பட தாங்கொணா இன்பம் அடைந்து பொற்தாலிக்கு குங்கியம் வாங்கி வந்தவராய், உடன் இறைவனுக்கு குங்கிலியம் ஏற்றி தமை மறந்து சிவனாரையே சிந்தித்தபடி கோவிலில் தங்கிவிட்டார்.
.
வாடிய மனைவி மக்கள் , வயிறு ஒட்டியும் பட்டினியால் மனம் வாடியும் அழுத கண்ணீரோட உறங்கிவிட, கருணை ததும்ப மனைவியின் கனவிலும் தோன்றிய ஈசன், பொன்னும் மணியும் நெல்லும் பல செல்வங்களும் நிறைத்து அருளினோம் என்று கூறி மறைந்தார். உறக்கம் கலைந்த மனைவி இல்லம் முழுதும் வளங்களால் நிரம்பியிருக்க கண்டு இறைவனின் கருணை எண்ணி கண்ணீர் சொறிந்தாள். "பசியுடன் இருக்கும் நீ உன் மனை சென்று பால் சோறு உண்டு பசி நீங்கப்பெருவாய்" என்று குங்கலிய நாயனாருக்கு உமையொருபாகன் உரைத்து அருளினான். இல்லம் வந்த நாயனார் இறைவனின் எல்லையில்லா அன்பை எண்ணி கைகூப்பி தொழுதார்.
.
செல்வத்தைக் கொண்டு தம்பதிகள் இருவரும், சிவபணிகள் இன்புற செய்து கொண்டும் அடியார்களுக்கு இன்னமுதளித்தும் நல்வாழ்வு வாழ்ந்திருந்தனர்.
.
இவ்வாறு இருக்கும் வேளையில், திருப்பனந்தாளில் குடிகொண்டிருக்கும் எம்பெருமானின் லிங்கத்திருமேனி, முன்பொரு சமயம் தாடகை என்ற பெண்ணொருத்தியின் மாலையை சுவீகரிக்கும் பொருட்டு சாய்ந்து இடம் கொடுத்திருந்தது. அந்த நிகழ்வுக்கு பின்னர் லிங்கமானது சாய்ந்தே இருந்தது. லிங்கத்தை நிமிர்த்த பெரும் சேனைகொண்டு முயன்றும் சோழ மன்னன் தோல்வியுற்றான். அரசனின் வருத்தம் தெரிந்த குங்கிலிய நாயனார்,
உடன் புறப்பட்டு திருப்பனந்தாளில் தனது நாதனை நேராக்கும் பொருட்டு, பெரிய கயிற்றினை தம் கழுத்தில் பூட்டிக்கொண்டு இழுத்து தம் மென்-மேனியை வருத்திக் கொள்ளலானார். பக்தர் மேனி வருத்துவதை காணப் பொருக்காத ஈசன் தாமே இளகி நேர் நின்று அருளினார். இப்பேற்பட்ட அரிய பக்தியையும் பரமனின் கருணையும் கண்ணாரக் கண்ட தேவர்களும் பூமழை தூவினர்.
.
சில காலம் திருப்பனந்தாளில் இறைவனுக்கு சேவை செய்த நாயனார், பின்னர் திருக்கடவூர் சென்றார். பின்பொரு முறை ஞானசம்பந்தர் பெருமானுக்கும் நாவுக்கரசருக்கும் தமது இல்லத்தில் திருவமுதளித்து அவர்களின் பேரருளுக்கும் ஈசனின் கருணைக்கும் பாத்திரமானார். பலகாலம் சிறப்புற வாழ்ந்து இறுதியில் சிவபதமடைந்து பேரின்ப வாழவை கிடைக்கபெற்று இன்புற்றார்.
.
ஓம் நமச்சிவாய 

லலிதா சஹஸ்ர நாமம் (611 - 620) (with English meanings)





விபூதி விஸ்தாரம்

கலாத்மிகா
கலா நாதா 
காவ்யா லாப வினோதினீ
சசாமர ரமா வாணி சவ்ய தக்ஷிண சேவிதா
ஆதிஷக்தி
அமேயா
ஆத்மா
பரமா
பாவனாக்ருதி
அனேஹ கோடி ப்ரஹ்மாண்ட ஜனனீ 

()
கலா = கலா வடிவங்கள் - கலைகள் 
ஆத்மிகா = ஆன்மா - உயிர்

#611 கலாத்மிகா = கலைகளின் ஜீவனானவள்  ie கலாம்சமானவள் 

#612 கலா நாதா = கலைகளின் அதிபதி i.e இறைவி

() 
காவ்ய = காப்பியங்கள் - காவியங்கள் - கவிதைகள்
ஆலாப / லாப = பேசுதல் - உரைத்தல்
வினோத = ஆனந்தம்

#613 காவ்யாலாப வினோதினீ = காவியங்கள் உரைக்கப்படுவதை கேட்டு ஆனந்திப்பவள் 

()
சசாமர = சாமரம் - அரச வம்சத்தினர் உயர் குடியினர் அல்லது இறைவனுக்கு வீசும் சாமரம் 
ரமா = ஸ்ரீலக்ஷ்மி தேவி
வாணீ = ஸ்ரீசரஸ்வதி
சவ்ய = இடது - வலது
தக்ஷிண = வலம் - தென்புறம்

#614 சசாமர ரமா வாணி சவ்ய தக்ஷிண சேவிதா = ஸ்ரீ லக்ஷ்மி மற்றும் ஸ்ரீ சரஸ்வதி தேவியரால் இருபுறமும் சாமரம் வீசி துதித்தேற்றப்படுபவள் 

#615 ஆதி ஷக்தி = பிரபஞ்சத்தின் மூலாதார சக்தி 

()
அமேயா = அளக்க முடியாத

#616 அமேயா =  அளவற்றவள் - அளக்க முடியாதவள்

#617 ஆத்மா = ஜீவனாகி இருப்பவள் (சகல ஜீவராசிகளிலும் உறைபவள்) 

()
பரம = அதிஉன்னத = மிக உயர்ந்த

#618 பரமா = ஒப்பற்றவள் 

()
பாவன = மாசற்ற
க்ருதி = படைப்பு (இவ்விடத்தில் கொள்ளத்தக்க பொருள்) 

#619 பாவனா-க்ருதி - தூய்மையின் சாந்நித்யம்

()
ஜனனீ = மாதா
ப்ரம்மாண்ட = பிரபஞ்சம்
கோடி = கோடி
அனேக = பல- கணக்கற்ற

#620 அனேக கோடி ப்ரம்மாண்ட ஜனனீ = பற்பல கோடி ப்ரபஞ்சங்களை தோற்றுவித்தவள் (பிரபஞ்சங்களின் அன்னை)  


(தொடரும்) 


Lalitha Sahasranama (611 - 620) 


Vibhoothi Visthaaram



Kalaathmika
Kala Nadha
Kavya Laapa vinodhini
Sachamara rama vaNi Savya dhakshina Sevitha
AdiShakthi
Ameya
Atma
Parama
Pavana-Krithi
Aneha Koti Brahmanda janani


()
Kala = Art forms
Athmika = Soul 

#611 Kalaathmika = Who is the soul(spirit) of all forms of art.

#612 kalaa-naadha = Who is the chief(Ruler-leader)  of all arts  

()
Kavya = poetries - epics
(AA)Laapa = To speak (Lapana = talking) 
Vinodha = pleasure

#613 kavyalabha vinodhini = Who finds pleasure listening to poetries and epics
 being narrated


()
SaChamara = whisks used as fans (chowrie) as a royal respect
Rama = Goddess Lakshmi
VaNi = Goddess Saraswathi
Savya = rightside - leftside 
Dhakshina = right - southern 

#614 Sachaamara rama vaaNi savya Dhakshina Sevitha = She Who is being worshipped 
by Goddess Lakshmi and Saraswathi on either side, who idolize her with chowries 


#615 Aadhi Shakthi = She who is the primeval Energy (of the universe) 

()
AmEya = cannot be measured 

#616 AmEya = Who is immeasurable (magnanimous) 

#617 Athma = Who is the self (soul or jiva in all beings) 

()
Parama = Highest 

#618 Parama = Who is Absolute

()
Pavana = pure
krithi = creation (as per the context) 

#619 Pavana Krithi = Who is manifestation of purity 

()
Janani= mother 
BrahmaNda = cosmos 
kOti = crore
Anekha= several = many 

#620 ANeka kOti BrahmaNda Janani - Who is the mother of many many crores
of worlds (multiple universes)  



(to Continue) 

May 22, 2019

தேர்தல் 2019




பம்பரமென சுழன்று ஒய்ந்த
வாழ்வில் இனி நம்பிக்கையில்லை
என்று தளரும் நேரத்தில்..

நாட்டு நடப்பை 
சுருட்டிய தாளில் முரசொலிக்கும்
நாளைய செய்திகள்...


சூரியன் இன்றுடன் அஸ்தமித்துவிடவில்லை....
நாளை மீண்டும் உதிக்கும்
என்ற நம்பிக்கை பிறக்கும்


துளிராக தழைத்திருக்கும்
இரு இலைகளின் நடுவில்
எட்டிப்பார்க்கும் 
செழித்த மாம்பழங்கள்

முறுக்கேறிய கைகளால்
ஏர் பூட்டி மண்வளம் செழிக்கச் செய்யும்
விவசாயத்தினால் பஞ்சமின்றிப் போகும்

நேற்று நட்ட மரக்கன்றுகள்
உயர்ந்த சோலைகளாகி
சாலையெங்கும் நிழல் தரும் 
மும்மாரி தட்டாமல் முழங்கும்
தடாகமெங்கும் தாமரை மலர்ந்து 
தமிழ்த்தரணி எங்கும் எழில் சேர்க்கும்


May 21, 2019

காரைக்கால் அம்மையார்

Image result for காரைக்கால் அம்மையார்


மூன்றே மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரான இவரின் பெருமையைப் பற்றி பலரும் அறிந்து சொல்லக் கேட்டிருப்பீர்கள்.
.
புனிதவதி என்று பெயர் சூட்டப்பட்டு பெரும் சிவபக்தையாக காரைக்காலில் வாழ்ந்து வரும் காலத்தில் பரமதத்தன் என்பவரை, பெற்றோர் மணமுடித்து வைத்தனர். சிவனடியாருக்கு சமர்பித்த மாம்பழத்தை, தம் கணவருக்காக
கடவுளிடத்தில் வேண்டி பெற்றதை கண்ணாறக் கண்டு அதிசயத்த பரமதத்தன், தமது மனைவி தெய்வ அம்சம் பொருந்தியவர் என உணர்ந்து, அவர்களிடம் தமக்கிருந்த இல்லற உறவை அறுத்தார். வேறு பெண்ணை திருமணம்
செய்து அவர்களுக்கு பிறந்த பெண்ணுக்கு புனிதவதி என்று பெயர் சூட்டி தமது மரியாதையை செலுத்தினார்.
.
இதை உணர்ந்த புனிதவதியார், கணவனுக்கில்லாத அழகும் இளமையும இனி தேவையில்லை என்றுணர்ந்து, சிவபூதகண வடிவமான பேயுருவை வேண்டிப் பெற்றார்.
.
எம்பெருமானை இசையால் துதித்து பாடல்கள் இயற்றுவதில் முன்னோடியாக கருதப்படுகிறார். இவர் எழுதிய பாணியை ஒட்டியே பிற்கால தேவாரப் பாடல்களும் புனையப்பட்டது. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மாலை, அற்புத திருவந்தாதி, முதலிய இலக்கியங்களை புனைந்து தமிழுக்கு பெருமை சேர்த்தார்.

இறைவன் இருக்கும் திருக்கையிலாயத்தை காலால் தடம் பதித்தால் புனிதம் கெட்டு விடுமென்று தலையால் ஏறிச்சென்று தரிசித்தார். இறைவனே இவரை தமது அன்னை என்று உரைக்கும் பேறு பெற்றார். வரமாக, பிறவாமை வேண்டுமென்று இறைஞ்சி, இறைவனின் தாண்டவத்தின் பொழுது அம்மையார் அவர் அடியின் கீழ் பணிந்து பாடிக்கொண்டிருக்கும் வரம் கேட்டு உய்ந்தார். திருவலங்காட்டில் தமது நடனத்தை தரிசித்து பாடிக்கொண்டிருக்க அருள் செய்தார் எம்பெருமான்.

இவரது புகழ் உணரப்பட்டு வாழ்ந்த பெருவாழ்வை நினைவு கொள்ளும் வண்ணம் இன்று கரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது.

ஓம் நமச்சிவாய

லலிதா சஹஸ்ர நாமம் (601 - 610) (with English meanings)

Image result for beautiful lalithambika eyes smile

விபூதி விஸ்தாரம்

தராந்தோலித தீர்காக்ஷீ
தாரஹாசோஜ்வலன் முகீ
குரு மூர்த்தி
குண நிதி
கோமாதா
குஹ ஜன்ம பூ:
தேவேஷீ
தண்ட நீதிஸ்தா
தஹராகாஷ ரூபிணீ
பிரதிபன்முக்ய ராகாந்த திதிமண்டல பூஜிதா 

()
தர = கொண்டிருத்தல்
ஆந்தோலித = அசைதல் = ஆடுதல்
தீர்க = நெடிய - நீள்
அக்ஷி= கண்கள்

#601  தராந்தோலித தீர்காக்ஷீ = அலைபாயும் (அசையும்) நீள் விழிகளைக் கோண்டவள்

()
தர = கொண்டிருத்தல்
ஹாஸ = சிரிப்பு - புன்னகை
உஜ்வலன் = காந்தி - பிரகாசம்
முக = முகம்

#602 தரஹாஸோஜ்வலன் முகீ =   ஒளிர் மந்தஹாசம் தவழும் வதனம் கொண்டவள்

()
மூர்த்தி = அவதாரம் - வடிவம் தாங்குதல் - உருவகம் 

#603 குரு மூர்த்தி =  ஆச்சாரிய  வடிவானவள் ie. பக்தர்களுக்கு குருவாகி போதிப்பவள்

()
நிதி = பொக்கிஷம் - களஞ்சியம்
குண = மேன்மையான குணங்கள் 

#604 குண நிதி = நற்குணங்களின் களஞ்சியம் 

()
கோ = பசு
கோமாத்ரு = பசுக்களின் தாய்

#605 கோமாதா = பசுக்களுக்கெல்லாம் மாதாவாக விளங்குபவள் *


* பசுக்கள் மனிதர்கெல்லாம் போஷாக்கு அளிப்பதால்,  ஹிந்து மதத்தில் பசு புனிதமாக மதிக்கப்படுகிறது. காமதேனு எனும் பசு, தெய்வ லோகங்களில் வசிக்கும் தெய்வீகப் பசுவாக கருதப்படுகிறது. லலிதாம்பிகை, அன்னையின் வாத்ஸல்யத்தோடு பிரபஞ்சத்தை போஷிக்கிறாள் என்பது இந்த நாமாவின் புரிதல். 

()
குஹ = ஸ்கந்தன் - முருகன்
ஜன்ம = ஆதாரமான - பிறப்பிற்கு காரணமான
பூ: = பூவுலகம்

#606 குஹ ஜன்மபூ: = ஸ்கந்தனின் பிறப்பிற்கு காரணமானவள் (அன்னை) *


* குஹ என்றால் குகை என்றும் பொருள் கொள்ளலாம். ஆதாரமான பிரக்ருதியானவள். ஜீவனின் மூலத்தை தன்னிடத்தே ஒடுக்கி (ஒளித்து) பின் பிரபஞ்சத்தை உருவாக்கும் அன்னையாகிறாள் என்பதும் சிலரது கருத்து. 

()
தேவ = கடவுளர்
ஈஷி(ன்) = தலைமை - முதன்மை

#607 தேவேஷி = தேவர்களுக்குத் தலைவி; இறைவி

()
நீதி =  நன்னடத்தை - ஒழுக்கம்
தண்ட = தண்டனை

#608 தண்டநீதிஸ்தா = முறையான நடத்தையில்லாதவர்களை தண்டிப்பவள் - நீதியை நிலைநாட்டுபவள்.

()
தஹரம் = நுண்ணிய = இருதயத்தில் இருக்கும் ஆகாசம்

#609 தஹராகாஷ ரூபிணீ = இதயவெளியில் நுண்ணிய வடிவில் (ஜீவனாக) இருப்பவள் 

()
ப்ரதிபத் = ஒவ்வொரு - வளர்பிறையின் முதல் நாள்
முக்ய =  முதலில் - ஆரம்பத்தில்
ராக = முழு நிலவு
திதி =  பிறை நாட்களைக் குறிக்கும்  = பதினைந்து என்ற எண்ணிக்கை
மண்டல் = குழு - குவியல் 

#610 ப்ரதிபன்முக்ய ராகாந்த திதிமண்டல பூஜிதா = வளர்பிறையின் முதல் நாள் துவங்கி பௌர்ணமி வரையிலான திதி நாட்களில் பூஜிக்கப்படுபவள் 



(தொடரும்) 

Lalitha Sahasranama (600 - 610) 

Vibhoothi Visthaaram

Dharandholitha Deergakshi
Dharahasojwalan mukhi
Guru Moorthi
Guna Nidhi
GoMatha
Guha janma bhoo
Deveshi
Dhanda Neethistha
Dhaharakaasa roopiNi
Prathipan mukhya rakantha thithi mandala poojitha


()

Dhara = possessing - having
andholitha = swinging ie moving
deerga = long 
akshi  = eyes

#601 Dharandholitha Deergakshi = Who has  long (swaying)   eyes 
(gracefully swinging upon her beautiful face) 

()
Dhara = having 
Hasa = smile 
ujwalan = shining - splendour
mukhi = face

#602 Dharahasojwalan mukhi = Whose wears a radiant smile upon her face

()
Moorthi = Manifestation
Guru = Teacher - Acharya

#603 Guru Moorthi = Who is in the form of revered guru (for her devotees) 

()
Nidhi = treasure 
guNa = Good qualities

#604 GuNa nidhi = Who is the treasure house of virtues

()
Go = Cow  
Gomathru = Mother of cows

#605 Gomatha =  She who is the mother of Cows   *



* Cows are considered divine according to hinduism as they provide nourishment. Kamadhenu is a sacred cow representing the divnity of cows. She is also personified as the mother of cows. In this context, the meaning conceived is that the divine mother, Lalithambika with her motherly care nourishes the entire universe . 

()
Guhaa = Lord Skanda
janma = progenitor - origin 
Bhu = earth - place

#606 Guha JanmaBhu = She who is the cause of Skanda (Mother) *

* Some interpretations differ to mean Guha as "cave" or a "cavern" which conceals the source of life energy in universe. Hence she is the mother who  is the origin of the life energy.


()
Deva = The Gods
Ishi(n) = Supremacy 

#607 DevEshi = Who is the Queen of Gods ie God of Gods

()
Needhi = Ethics - right behaviour 
Dhanda = Punishment

#608 Dhandaneethistha = Who punishes those do not adhere to Ethics - Who does justice

()
dhaharam = subtle - Sky within the heart 

#609 Dhaharakasa RoopiNi = She who in the subtle space of heart (of all beings)

()
Prathipad =  at every - First day of lunar fortnight
mukhya = at the head or beginning 
Raka  = Full moon
Antha = at the end
thithi  = lunar day = fifteen in number
mandal = collection - group 

#610 Prathipanmukya Rakantha thithi mandala poojitha =  Who is worshipped on all fifteen days from pratipad(first day of lunar) to Full-moon day. 

(to Continue) 

May 18, 2019

திருஷ்டி



நேற்று வீசிய ஏச்சாலே
சொல்பட்டு சிதறிய மனம்
புண்பட்டு இற்று விடுமென
நூத்துப் போன சேலையுடன்
வாசற்படியில் வாடிய பூவென
காத்துக் கிடக்கும் கணங்களில்
எஞ்சிய கணநேர  நிம்மதியும்
கண்பட்டு  கழியாதிருக்க
அயராது காவலிருக்கும்
கண்திருஷ்டி கண்பதி

ShakthiPrabha 

May 17, 2019

காரி நாயனார்




திருக்கடவூரில் அந்தணர் குலத்தோன்றிய தமிழ் அறிஞர். மொழி வல்லமை மிக்க உள்ளவராய் திகழ்ந்தவர். அவர் நாவிலும் சரஸ்வதியும், உள்ளத்தின் ஈசனும் நொடிப்பொழுதும் அகலாது குடி கொண்டிருந்தனர்.
.
தொல்காப்பிய நூல், திருச்சிற்றம்பலக் கோவை முதலிய ஆதி நூலகளுக்கும், அருந்தமிழ் புகழ் கூறும் காவியங்களுக்கும் மறைபொருள் விளக்கம் அளித்தார். புனையப்பட்டிருக்கும் புறநிலை இன்பம் கூறும் பாடல்களிலும் மறைந்திருக்கும் அகத்து இன்பத்தை சுட்டிக்காட்டி பொருள் விளக்கி தமது பெயரில் "காரிக் கோவை" என்று நூல் இயற்றினார். அதனை சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்கள் முன் விளக்கி பெரும் புகழும் செல்வமும் பெற்றார்.
.
பெற்ற செல்வத்தைக் கொண்டு சிவாலயங்கள் எழுப்புவதிலும், சிவப்பணி ஆற்றுவதிலும், அடியார்களுக்கு பொருள் அள்ளி வழங்குவதிலும் கருத்தாய் இருந்தார். திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர், அபிராமவல்லியை பூக்களாலும் பாக்களாலும் தினம் துதித்தார். சிவ நாமம் க்ஷணப்பொழுதும் மறவாமலும், பல திருத்தோண்டு ஆற்றியபடி தமது வாழ்வை செவ்வனே வாழ்ந்தமையால் மகிழ்ந்த இறைவன் புகழுடம்புடன் திருக்கயிலாயம் சேர்பித்து தமது திருவடியில் இடமருளினார்.
.
ஓம் நம: சிவாய

லலிதா சஹஸ்ர நாமம் (591-600) with English meanings

Image result for Shiva and Sati
விபூதி விஸ்தாரம்

ஷிர: ஸ்திதா
சந்த்ர நிபா
பாலஸ்தா
இந்த்ரதனுப்ரபா
ஹ்ருதயஸ்தா
ரவி ப்ரக்யா
த்ரி கொணாந்த்ர தீபிகா
தாக்ஷாயிணீ
தைத்ய ஹந்த்ரீ
தக்ஷ யக்ஞ வினாசினீ



()
ஶிர = தலை - சிரம்

#591 ஷிர ஸ்திதா = சிரசில் குடியிருப்பவள் (சஹஸ்ராரத்தில் வெளிப்படுபவள்) 

()
நிபா = ஒன்று போல் இருத்தல் 

#592 சந்திர நிபா =  முழுமதியைப் போன்றவள்

()
பால = நெற்றி

#593 பாலஸ்தா = நுதலில் நிலைபெற்றவள் *
* நெற்றியின் நடுவிலுள்ள ஆக்ஞா சக்கரத்தின் பிந்துவானவள்

()
இந்த்ரதனு = வானவில்
ப்ரபா = ஒளிர்வு

#594 இந்த்ரதனுப்ரபா = வானவில்லின் பொலிவானவள் 

#595 ஹருதயஸ்தா = இதயத்தில் வாசம் செய்பவள் 

()
ரவி = சூரியன்
ப்ரக்யா = தெளிவான - வெளிச்சமான - ஒளிரும்

#ரவிப்ரக்யா = சூரியனப் போல் ஒளிர்பவள் 

()
த்ரிகோண = முக்கோணம்
அந்தர = அதனுள் - உள்ளே
தீபிகா = ஒளி

#597 த்ரிகோணாந்தர தீபிகா = முக்கோணத்தின் ஒளியானவள் (மூலாதார சக்கரத்தில் நிலைபெற்ற சக்தி)

#598 தாக்ஷாயணீ = தக்ஷப் ப்ரஜாபதியின் மகள் 

()
தைத்ய = திதி(Diti)யின் புதல்வர்கள் - அசுரர்கள்
ஹந்த்ரீ = அழித்தல் 

#599 தைத்ய ஹந்த்ரீ = அசுரர்களை (அசுரத்தன்மையை) வதம் செய்பவள் 

#598 தக்ஷ யக்ஞ வினாசினீ = தக்ஷ யக்ஞத்தை நாசமாக்கியவள் 

தாக்ஷாயணீ தஷனின் விருப்பத்திற்கு மாறாக சிவபெருமானை மணந்தாள். தக்ஷன் யக்ஞத்தை நடத்திய போது இறைவனான சிவனை அழைப்பு விடுக்க மடுத்தான்.  அதனால் வருத்தமுற்ற தாக்ஷாயணீ தஷனின் மதியீனத்தை சுட்டிக்காட்ட முயன்று தோற்றதால் வெகுண்டெழுந்து யக்ஞத்தை அழித்து தானும் வெள்வித்தீயில் உடல் உகுத்தாள். இக்கதை இந்து மதத்தவர் பலரும் அறிந்தது. 

(தொடரும்) 

Lalitha Sahasranama (591-600) 

Vibhoothi Visthaaram


Shira: Sthitha
Chandra nibha
Bhalastha
Indra Dhanu Prabha
Hridayastha
Ravi prakhya
Tri kOnanthara Deepika
Daakshayini
Daithya Hanthri
Daksha Yagna Vinashini

()
Shira = Head  

#591 Shira Sthitha = Who resides in the head (in the Sahasrara)

()
Nibha = Resembling 

#592 Chandra Nibha = Who is spectacular like the full moon 

()
Bhala = Forehead 

#593 BhalaStha = Who sits in the forehead * *between the brows in the form of Bindu in ajna chakra 

() 
Indradhanu = Rainbow
Prabha = Sheen- Shine

#594 Indradhanu Prabha = She who is the splendour of Rainbow 

#595 Hridayastha = Who resides in the heart 

()
Ravi = The Sun 
Prakhya = Bright, clear, visible 

#596 Ravi Prakhya = Who is the Radiance of the Sun 

()
TrikoNa = Triangle
anthara = in - within 
Deepika = the light

#597 TrikONanthara Deepika = Who is the light in the Triangle (in Mooladhar chakra as the kundalini force) 

#598 Daakshayani = Who is the daughter of Daksha prajapathi*

()
Daithya = Son(s) of Diti - Asuras
Hanthri = destroy

#599 Daithya Hantri = Who slays Evil (doings and doers) 

#600 Daksha Yagna Vinashini = Who destroyed the yagna of Daksha *


Daakshayani married Lord Shiva  much against Daksha's wishes. Later when Daksha organised a yagna, he refused to invite Lord Shiva. Satidevi aka Dakshayani, questioned his ignorance, destroyed his yagna and burnt herself to ashes. A Story is wellknown amidst hindu followers. 

(to Continue) 

An attempt to analyse meanings word by word - ShakthiPrabha 

May 13, 2019

லலிதா சஹஸ்ர நாமம் (583-590) (with English meanings)





விபூதி விஸ்தாரம்

ஆத்ம வித்யா;
மஹா வித்யா;
ஸ்ரீ வித்யா;
காம சேவிதா;
ஸ்ரீ ஷோடஷாக்ஷரி வித்யா;
த்ரிகூடா;
காமகோடிகா;
கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதா ;


()
வித்யா = விஞ்ஞானம் - அறிவு

#583 ஆத்ம வித்யா = ஆத்ம ஞானமாகியவள்

#584 மஹா வித்யா = உன்னத ஞானமானவள் (பிரம்ம ஞானமெனும் சுயத்தை பற்றிய அறிவாகி இருப்பவள்)  

#585 ஸ்ரீ வித்யா = ஸ்ரீ வித்யையின் (லலிதாம்பிகை) வடிவானவள்  * 

*ஸ்ரீ வித்யா உபாசனையாக விளங்கும் பஞ்சதசி மந்திரமாக விளங்குபவள். 

#586 காம சேவிதா = மன்மதனால் வணங்கப்படுபவள் 

()
ஷோடஷ = பதினாறுடைய (பதினாறு எண்ணிக்கை கொண்ட)
அக்ஷர = அக்ஷரம் - எழுத்துக்கள்

#587 ஸ்ரீ ஷோடஷாக்ஷரீ வித்யா = ஷோடஷி என்னும் உயர்ந்த  தத்துவமாக இருப்பவள் *

*ஸ்ரீ வித்யா வழிபாட்டு முறைகளில் ஷோடஷி எனும் சக்தி வாய்ந்த மந்திரம் பதினாறு அக்ஷரங்கள் கொண்டதாகவும் பஞ்சதசியை விட சூக்ஷுமமாக கருதப்படும் மந்திரோபாசனை ஆகும். 

()
த்ரி =  மூன்று - மூன்றான - முப்பகுதிகள் கொண்ட 
கூட = பரிமாணம் - முக்கியத்துவம் 

#588 த்ரிகூட = மூன்றாக i.e முத்தன்மையுடையதாக பரிமாணிப்பவள் *

* சிருஷ்டி ஸ்திதி லயம் ; அ-உ-ம்; சத்துவம், ராஜசம்,  தாமசம் எனும் முக்குணங்கள்; முப்பகுதிகள் கொண்ட பஞ்சதசி மந்திரம்; விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்ற மூன்று நிலைகள், என்று நம்மால்  அடுக்க முடிந்த  உயர்ந்த தத்துவங்கள் பலவும் மூன்றாக வகுக்கத் தகுந்தவை. 

()
காம = இச்சை - ஆசைகள் ( அல்லது ) காமேஷ்வரன் எனும் இறைவன் சிவன் *
கோடி = உயர்ந்த இடம் - முடிவு 

#589 காமகோடிகா =  ஆனந்தத்தின் நிறைவானவள் (ஆசைகளுக்கு அப்பாற்பட்ட பூர்ணானந்தம்) 

#589 காமகோடிகா = சிவனின் அங்கமானவள் (அர்த்தனாரி எனும் சிவசக்தி ஐக்கியம் , அன்னிலையின் அபின்னம் )

* காமேஷ்வரன் எனும் நாமம், காமத்தை கடந்தவர், அதற்கு அப்பாற்பட்டவரான இறைவன் சிவனாரைக் குறிக்கும்.  சக்தியானவள் சிவத்துடன் இணைகையில் இரண்டறக் கலந்து இச்சைக்கு அப்பாற்பட்ட ஆனந்த, அபின்ன நிலையில் அறியப்படுகிறாள். சகுண பிரம்மத்தின் ஆரம்ப நிலை என்று உணரலாம். 

()
கடாக்ஷ = கடைக்கண் பார்வை - க்ஷண நேரப் பார்வை
கிங்கரீ = சேவகிகள் - சேவைபுரியும் பெண்கள் 
பூத = உடல் தாங்கும் உயிர்
கமலா கோடி = தாமரை - தாமரையில் பிறந்த - செல்வம் - ஸ்ரீ லக்ஷ்மி 
கமலா கோடி = கோடி லக்ஷ்மிகள்
சேவிதா = துதிக்கப்படுபவள்

#590 கடாக்ஷ கிங்கரீ பூத கமலாகோடி ஸேவிதா =  தனது கடாக்ஷத்திற்கு ஏங்கும் கொடி லக்ஷ்மிகளால் ஆராதிக்கப் படுபவள் 

#590 கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதா = கடைக்கண் பார்வையாயின் சமிக்ஞையாலேயே  கோடி லக்ஷ்மிகளால் உபசரிக்கப் பெறுபவள் 

(தொடரும்) 


Lalitha Sahasranama (583 - 590) 

Vibhoothi Visthaaram

Atma vidhya;
Mahaa Vidhya;
Shri Vidhya;
Kaama Sevitha;
Shri shodashakshari vidhya;
Trikoota;
Kaama kOtika;
Kataksha kinkari bhootha kamala kOti SEvitha;

()
Vidhya = science - knowledge 

#583 Atma Vidhya = She who is the Science of "The Self"

#584 Mahaa Vidhya = She who is the Greatest knowledge (of "The Self") 

#585 Shri vidhya = she who is the Divine knowledge of Goddess Lalitha i.e. Shrividhya  Worship *

*Panchadasi mantra pertaining to Shri-vidhya worship

#586 Kaama Sevitha = Who is worshipped by Kamadeva (God of love - Manmatha) 

() 
Shodasha = consisting of sixteen 
akshar = Syllable 

#587 Shri Shodashakshari Vidhya = She who is the exalted knowledge of Shodashi *

*Shodashi is the powerful mantra  worshipping Shri vidhya (Lalithambika) . Shodashi is superior to panchadashi(panchadasi) 


()
Thri = third- three parts
koota = prominence  

#588 Thrikoota = She who is projects as trilogy *

*Everything can be segregated as set of three. Creation-sustinenance-dissolution; A-U-M; Tri gunas Sathva, Rajas and Tamas; panchadasi (15) mantra as three parts; Stages of consciousness Waking, Dreaming and Deep sleep..



()
Kaama = desire - want / or / Shiva as Kameshwar
koti = heighest point - end - edge or point 

#589 Kaama Kotika = Who is fulfilled and tranquil  (beyond desires) 
#589 Kaama kOtika = Who is part of Shiva ( as union of Shiva-shakthi) *

*Kameshwar refers to shiva   i.e. who is dispassionate. Shakthi during her union with Shiva is said to be at the highest dispassionate origin as Saguna Brahmam. 



()
Kataksha = Glance - quick look 
Kinkari = Female attendants - servants 
bhootha = being(s) 
Kamala = lotus = lotus born = wealth =Shri Lakshmi 
Kamala kOti = Millions of Lakshmis 
Sevitha = worship 

#590 Kataksha Kinkari bhootha kamala kOti SEvitha = Who is worshipped by millions of lakshmis who pine for her mere glance.  (or)

#590 Kataksha Kinkari bhootha Kamala Koti Sevitha = Who by here mere glance is attended by millions or Lakshmis (Goddesses of wealth)  


(to Continue) 

A Humble effort to meditate meaning word by word - ShakthiPrabha 

May 09, 2019

லலிதா சஹஸ்ர நாமம் (572 - 582) (with English meanings)

Image result for Supreme mother lalitha beautiful 

விபூதி விஸ்தாரம் 

பரா-ஷக்தி;
பரா-நிஷ்டா;
ப்ரக்ஞான கண ரூபிணீ;
மாத்வீ பான லசா;
மத்தா;
மத்ருகா வர்ண ரூபிணீ;
மஹா கைலாச நிலயா;
ம்ருணால ம்ருது தோர்லதா;
மஹானீயா;
தயா மூர்த்தி;
மஹா சாம்ராஜ்ய ஷாலினீ;

() 
பரா = அதி உன்னத - மிக உயர்ந்த 

#572 பரா-ஷக்தி = ஒப்புயர்வற்றவள்-  உன்னத சக்தியாக விளங்குபவள் - இறைவி 

()
நிஷ்டா = ஆதாரம் - மூலம் 
நிஷ்டா = உறுதியான பக்தி

#573 பரா-நிஷ்டா = ஜகத்தின் ஆதாரம் - அடையக்கூடிய லக்ஷியத்தின் சிகரம் 
#573 பரா-நிஷ்டா =  உறுதியான பக்தியால் அடையக்கூடியவள்

()
ப்ரக்ஞான = ஞானம் 
கன = செறிவான- கனமான
ப்ரக்ஞான கன = அடர்ந்த ஞானம் - ஞானத்தையன்றி வேறொன்றுமிலாத

#574 ப்ரக்ஞான-கன ரூபிணீ = சம்பூரண  ஞானவடிவானவள் 

() 
மாத்வீ = உற்சாகம் தரக்கூடியது - மதுபானம் போன்ற... * 
(இவ்விடத்தில் மது என்பது களிப்பத் தரக்கூடியதான அம்ருத நிலையைக் குறிக்கும்)
பான = பானம் - பருக்ககூடியது
லசா = களிப்பு - பெருமகிழ்ச்சி 

#575 மாத்வீ பான லசா =  பெருமகிழ்ச்சி   நிலையான ஆனந்தானுபவத்தினால் களிப்படைந்திருப்பவள் *
(இவ்விடத்தில் அம்ருதத்திற்கு ஒப்பான பெருமகிழ்ச்சி நிலையில் நிலைத்திருப்பவள் என்று கொள்வதே தகும்) 

() 
மத்தா = ஆனந்தத்தில் மிதத்தல் ( போதை என்ற புரிதில் இங்கு பொருந்தாது) 

#576 மத்தா = பெருமகிழ்ச்சிக் களிப்பில் ஆழ்ந்திருப்பவள்  (ஆனந்தானுபவம்)
(இவ்விடத்தில் இப்பொருள் கொள்ளுதல் தகும்) 

()
மாத்ரிரு)கா = அம்பிகை - பெண் கடவுள் 
மாத்ரு(ரி)கா  =  எழுத்து - அகரவரிசை
வர்ண =  நிறம் - இயல்பு

#577 மாத்ருகா வர்ண ரூபிணீ = அன்னையின் வடிவினள் - அம்பாள்- அம்பிகை
#577 மாத்ருகா வர்ண ரூபிணீ =  அகர எழுத்துக்களாகியிருப்பவள் (எழுத்து, சொல் அதன் சப்தம் .`ie. சப்த ப்ரம்மம்) 
#577 மாத்ருகா வர்ண ரூபிணீ = ஆதாரம் ஆகியவள் - பிரபஞ்சத்தின் ஆதாரம்; அன்னை
#578 மஹா கைலாச நிலயா = கைலாசத்தில் நிலை கொண்டிருப்பவள் (தனது நாதனுடன்) 

()
ம்ருணால= தாமரைத் தண்டு
ம்ருது= ம்ருதுவான
தோர்லதா = கொடி போன்ற கை

#579 ம்ருணால ம்ருது  தோர்லதா = தாமரைத் தண்டினையொத்த ம்ருதுவான கொடி போன்ற இளங்கரங்களை உடையவள் 

#580 மஹானீயா = போற்றுதற்குறியவள் 

#581 தயா மூர்த்தி = பரிவே வடிவானவள்

ஷாலினி =  உரிமையுடைய - சொந்தம் கொண்டாடும்

#582 மஹா சாம்ராஜ்ய ஷாலினீ = பிரபஞ்சமெனும் பெரும் சாம்ராஜ்யத்தின் பேரரசி - அதனை தனதாக்கியவள் 

( தொடரும்) 



Lalitha Sahasranama (572 - 582) 

Vibhoothi Visthaaram

Para-Shakthi;
Para-Nishta;
Pragnaana ghana roopiNi;
Maadhvee paanaa lasaa;
Maththa;
Mathruka varNa roopini;
Mahaa Kailasa Nilayaa;
MriNala mrudhu dhorlatha;
Mahaaneeya;
Dhaya moorthi;
Maha Saamrajya Shalini;

()
Paraa =Highest point or degree -  Supreme 


#572 Paraa-Shakthi = Who is the Supreme power
#572 Paraa-Shakthi = Who is the Supreme Goddess - Supreme driving force

()
Nishta = Firm Devotion 
Nishta = grounded or resting on - the source 

#573 Paraa-Nishta = She who is attainable by unswerving devotion 
#573 Paraa-Nishta = She who is the attainable Supreme goal

()
Pragnaana = knowledge - wisdom
ghana = dense - mass
Pragnaana-Ghana = nothing but knowledge 

#574 Pragnaana-Ghana roopiNi = Who is the quintessence of pure Wisdom 

()
Maadhvi = Intoxicated drink *
(here to be taken as nector of bliss i.e. amrut) 
paana = drink - beverage
lasaa = dancing - playing -sporting

#575 Madhvee pana lasaa = She who is in the state of  bliss ( i.e Samaadhi )
(here to be taken as state of bliss i.e. nector or amrut of bliss)

#576 Maththa = Who is intoxicated - overjoyed  - blissful

()
Matrka = The Divine Mother
Matrka = Alphabets
varNa = colour - nature 

#577 Matruka varNa roopiNi = Who is the Divine Mother
#577 Matrka varNa roopiNi = Who is in the form of alphabets (and its sound..
ie. shabhdha brahmam) 
#577 Matrka VarNa roopiNi = Who is the foundation the basis i.e the Supreme mother 
of universe


#578 Mahaa Kailasa Nilaya = Who resides in Great Maha Kailash (with her lord) 

()
MriNaal = Root of Lotus 
mrudhu = Gentle - soft
Dhorlathika = arm creepers (arms like creepers) 

#579 MriNaala Mrudhu Dhorlatha = Whose arms are as tender and soft as lotus-stalks 

#580 Mahaaneeya = Who is praiseworthy 

#581 Dayaa Moorthi = Personification of Mercy 

()
Shalini = endowed - possessing 
Maha Saamrajya = Greatest empire 

#582 Mahaa Samrajya Shalini = She who is the empress of the universe 
(which is the greatest empire) 

(to Continue) 

A humble effort  to understand word by word - ShakthiPrabha