May 03, 2019

தாயன்பு




ஐயிரண்டு திங்கள் காத்திருந்து கருப்பையில் பச்சிளம் மேனியை பதவிசாய் மார்பில் நீராட்டி சீராட்டி மிருதுவாய் முன்னங்கால்களில் துணியிலே தூளியிட்டு நெடுந்தூரம் முதுகில் மழலை மொழிகேட்டு முத்தமிட்டு மடியில் இமைபொழுதும் நீங்காத சிந்தனை சுவடுகளில் உயிருள்ள வரையிலும் உறையும் நினைவுகளில் உயிரற்று உதிர்ந்தாலும் தொடரும் உணர்வுகளில் புன்னகை விரித்து பொழுதெல்லாம் ரசித்து கனமென்று சிறு கணம் கூட கருதாமல் தாயுள்ளம் தாங்கும் சுமையற்ற சுகங்கள்

(வல்லமை படக்கவிதைப் போட்டி) (16-6-18)

No comments:

Post a Comment