
நேற்று வீசிய ஏச்சாலே
சொல்பட்டு சிதறிய மனம்
புண்பட்டு இற்று விடுமென
நூத்துப் போன சேலையுடன்
வாசற்படியில் வாடிய பூவென
காத்துக் கிடக்கும் கணங்களில்
எஞ்சிய கணநேர நிம்மதியும்
கண்பட்டு கழியாதிருக்க
அயராது காவலிருக்கும்
கண்திருஷ்டி கண்பதி
ShakthiPrabha
No comments:
Post a Comment