May 22, 2019

தேர்தல் 2019




பம்பரமென சுழன்று ஒய்ந்த
வாழ்வில் இனி நம்பிக்கையில்லை
என்று தளரும் நேரத்தில்..

நாட்டு நடப்பை 
சுருட்டிய தாளில் முரசொலிக்கும்
நாளைய செய்திகள்...


சூரியன் இன்றுடன் அஸ்தமித்துவிடவில்லை....
நாளை மீண்டும் உதிக்கும்
என்ற நம்பிக்கை பிறக்கும்


துளிராக தழைத்திருக்கும்
இரு இலைகளின் நடுவில்
எட்டிப்பார்க்கும் 
செழித்த மாம்பழங்கள்

முறுக்கேறிய கைகளால்
ஏர் பூட்டி மண்வளம் செழிக்கச் செய்யும்
விவசாயத்தினால் பஞ்சமின்றிப் போகும்

நேற்று நட்ட மரக்கன்றுகள்
உயர்ந்த சோலைகளாகி
சாலையெங்கும் நிழல் தரும் 
மும்மாரி தட்டாமல் முழங்கும்
தடாகமெங்கும் தாமரை மலர்ந்து 
தமிழ்த்தரணி எங்கும் எழில் சேர்க்கும்


No comments:

Post a Comment