July 30, 2009

இக்ஷிணி தேவதைகள் சொல்லும் "இந்த நாள் இனிய நாள்"

வாக்கு-பலிதம் ஏதேச்சையாக நடந்தால் அது 'co-incidence' ஆக இருக்க வாய்ப்புண்டு. வாக்குபலிதம் ஏற்பட்ட்டு விட்டால் அவன் மஹான் அல்ல. பேசும் பத்து சொல்லில் ஒரு சொல் பலிக்கும் வாய்ப்பு என்றைக்குமே உண்டு.

Thoughts gets powerful as it gets dense என்பது நம் எல்லோருக்கும் தெரியும்। அதனாலேயே நல்லதை நினைக்க வேண்டும். பேச வேண்டும். நடத்த வேண்டும்। இதைத் தவிர எங்கள் வீடுகளில் எங்கள் வீட்டில் பாட்டிகள், பெரியவர்கள் "இட்சிணி தேவதைகள்" பற்றி சொல்வார்கள். இட்சிணி தேவதைகள் அரூபமாய் எங்கும் நிறைந்திருப்பார்களாம் நாம் ஏதேனும் சுபமாகவோ அசுபமாகவோ பேசினால், சமயத்தில் அவர்கள் "ததாஸ்து" (அப்படியே ஆகட்டும்) என்று கூறிவிடுவார்கள். அதனால் நல்லதே பேச வேண்டும்। நம்மை சுற்றி கேட்கும் சப்தங்களும் நல்லனவாய் இருக்கவெண்டும் என்று வலியிறுத்துகிறார்கள்.

"ஒழிந்து போ, சனியனே" போன்ற வார்த்தைகள் நம் வாழ்விலும், ஏன் தொலைக்காட்சி போன்ற நவீன வஸ்துக்கள் மூலமாக நம் செவிக்கு விழுந்தால் கூட தவிர்க்கபப்ட வேண்டியது. பத்துத் தொலைகாட்சித் தொடர்களில் எட்டு தொடர்கள் அசுபமாக பேசுவதை அல்லது உச்சகட்ட விரோதம் தொனிக்கும் வார்தைகளை உமிழ்வதைத் தான் பொழுது போக்காக்கி நமக்கு வழங்குகின்றன. இப்படிப்பட்ட சொற்களை அதிகம் கேட்பதால், அதைச் சுற்றி அல்லது அதனைச் சார்ந்தே நம் எண்ண ஓட்டமும் நினைப்பும் அமைந்து விடுகிறது. நம்மைச் சுற்றி "aura" குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கின்றனர். இதைத் தான் "தீயதை பார்க்கவும், பேசவும், கேட்கவும்" கூடாது என்று குரங்கு நமக்கு உணர்த்துகிறது.

இஷிணி தேவதைகள் போன்ற personfications கேலிக்குறியதாகவே கருதினாலும், விஞ்ஞான்ம் கூறும் கருத்தையொத்து "we become what we (think/utter/aspire)" நடைபேறும் சாத்தியக்கூறுகள் வலுவாக இருப்பதால், நடத்தையும், பேச்சும், செயலும் மட்டும் அல்ல எண்ணமும் நல்லனவாக அமைவது அவசியம். வீடுகளில் சுபவார்த்தைகள் தொனிக்கச் செய்ய ஸ்லோகங்களை ஒலிக்கச் செய்கிறோம். ஐந்து வேளை தொழுகை நடத்துகிறோம. இறைவனை பிரார்த்திக்கிறோம். பத்தில் ஒரு வேண்டுதல் உலக நலன் கருதியும், பிறருக்காகவும் எண்ணங்கள் சிந்தப்படுகின்றன. அந்த எண்ண அலைகள் "postive vibrations" உண்டு பண்ணக்கூடியவை.

இன்றைக்கும் என்றைக்கும் இனிய நாளாக அமைவது நம் எண்ணத்திலும் செயலிலும் இருக்கிறது. அதை வலுவாக்குவதற்குச் சாதகமான சுற்றுப்புற சூழலை நாமே உருவாக்கிக்கொள்ள வெண்டும்.