December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (சமஸ்க்ருதத்தின் உயர்வு)


சமஸ்க்ருதம் தேவ மொழி / தெய்வ மொழி என்று சொல்வதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. எல்லா மொழியுமே உயர்ந்த மொழிகள் தாம். எல்லா மொழியிலும் உயர்ந்த இலக்கியங்கள் புனையப்பட்டிருக்கின்றன. மொழி என்பது உணர்வுகளை எண்ணங்களை வெளிப்படுத்தும் சாதனம் என்பதைத் தாண்டி உயிரினும் மேலாக மதிப்பதற்கு இது தான் காரணம். கலைகளை இலக்கியங்களை கருத்துக்களை அவரவர் தாய் மொழியில் அறியும் பொழுது, புரியும் பொழுது, மொழி உயர்ந்த இடத்தில் அமர்த்தப்படுகிறது. அப்புறம் சமஸ்க்ருதத்திற்கு மட்டும் ஏன் தேவ மொழி என்று பெயராம்?

தேவர்களை கீர்வாணர் என்று விளிப்பதுண்டு. அவர்களால் பேசப்படும் சமஸ்க்ருதத்திற்கும் கைர்வாணி என்ற பெயர் உண்டு. தேவ ரகசியங்களும் மனிதனுக்கு சொல்லப்பட்ட மொழி சமஸ்க்ருதம். வேதங்கள் உபநிஷதங்கள் ப்ரம்ம ஞானங்கள், பாகவதம், கீதை முதலியவை உணர்த்தப்பட்ட மொழி சமஸ்க்ருதம். சமஸ்க்ருதம் என்றால் நன்றாக சொல்லப்பட்டது என்று பொருளாம். பேசு தொனிகள் அத்தனையும் எழுத்தில் வந்து விடுவதால், ஒவ்வொரு அசைவிற்கும் அக்ஷரத்திற்கும் மாத்திரைக்கும் எழுத்து வடிவம் உண்டு. இந்த சிறப்பு பல மொழிகளில் இல்லை (IF I am not wrong, I supp, hindi also has its script intact with the way its pronounced I dont know about any other language and my knowledge is limited).

இவ்வாறாக ஹிந்து மதத்திற்குறிய ஸ்லோகங்களும் பலவும் சமஸ்ருதத்திலேயே சொல்லப்பட்டிருப்பதால், யாகங்கள் யக்ஞங்களுக்கு சமஸ்க்ருதம் ஏதுவான மொழியாய் திகழ்கிறது. ஸ்லோகங்கள் சொல்லப்படும் போது த்வனி மாறினால் அர்த்தங்கள் மாறுபடும். அதனால் அதை திரும்பச் சொல்லவும் சரியான மொழியாய் சமஸ்க்ருதமே திகழ்கிறது. இருப்பினும், தாய்மொழியில் ஒருவனுக்கு இருக்கும் வன்மையோ புரிதலோ உணர்வோ மகிழ்ச்சியோ மற்ற மொழி பேசும் போது மட்டுப்படுகிறது.

இதனாலேயே சம்ஸ்க்ருதத்தைத் தவிர தாய்மொழி கற்பதும் அதைப் படித்து உணர்வதும் மிகவும் அவசியமாகிறது. அதன் மூலம் சமஸ்க்ருதத்தில் சொல்லப்பட்டிருக்கும் பொருள் இன்னமும் உணர்வு பூர்வமாய் அறிவு பூர்வமாய் விளங்கும் வாய்ப்பு உண்டு. அதே போல் தாய்மொழி மட்டும் கற்றுக்கொண்டு சமஸ்க்ருதத்தை கற்காமல் இருப்பதால் நட்டம் அதிகம். உயர்வான பல இலக்கியங்கள் உண்மைகள் கருத்துக்கள் விளங்காமலே போய்விடும்.

நம் தாய்மொழியாம் தமிழிலும் உயர்ந்த பக்தி இலக்கியங்கள் மெத்த நிரம்பியுள்ளன. திவ்யப்பிரபந்தம், தேவாரம், திருவாசகம் போன்ற உயர்ந்த நூல்கள் அரிய கருத்துக்களை, ஞானத்தை, பக்தியை முன் வைக்கிறது.

பாரதி தம் கவிதையில் தமிழையும் சமஸ்க்ருதத்தையும் ஒன்றாய் உயர்த்தியதாய் கவிதை வருகிறது.

“ஆதிசிவன் பெற்றுவிட்டான் என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே
நிறைமேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்.

மூன்று குலத்தமிழ் மன்னர் என்னை
மூண்ட நல்லன்பொடு நித்தம் வளர்த்தார்.
ஆன்ற மொழிகளினுள்ளே உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்”


வேதத்தை மதித்த தமிழ்நாடு என்பதாலேயே பாரதி "வேதம் நிறைந்த தமிழ்நாடு" என்று பாடியுள்ளான். கல்வெட்டுக்களில் சிலது சமஸ்க்ருதத்தில் அரசர்கள் புகழ் பாடுவதையும், அவர்கள் சரித்திரம் சொல்வதையும் காணலாம். திருவள்ளுவர் பல இடங்களில் வேதம் சொல்லும் கருத்துக்களுக்கு ஒப்பு குறள் வழங்கியுள்ளார். மஹாபாரதப்போர் காலத்திலும் கூட பாண்டியனும், சோழனும் பாண்டவர்களுக்காக போரிட்ட செய்தி வரலாறு உண்டு. பல தமிழ் மன்னர்கள் யாகங்களும் வேள்விகளும் செய்ததாகவும், யாகம் செய்தவர்களைக் காத்ததாகவும் வரலாறு கூறுகிறது. பெருஞ்சோற்று ஊதியன் என்ற பெயர் சேரலாதன் என்ற சேர மன்னனுக்கு உண்டாம். அவன் மஹாபாரதப் போரில் இரு தரப்புப் படையினருக்கும் உணவு வழங்கியதால் இது காரணப்பெயர் ஆகியது.

சமஸ்க்ருதத்தில் அந்தந்த தேவதைக்குறிய ஸ்லோகங்கள் பல இருப்பினும் கோவில்களிலோ வீடுகளில்லோ பூஜைகளுக்குப் பின் பொதுவான மந்த்ரம் ஒன்றைச் சொல்வது வழக்கம். இம்மந்திரம் எல்லார் நன்மையின் பொருட்டும் உலக நன்மையின் பொருட்டும் ஓதப்படுவது. இந்த ஸ்லோகம் தைத்ரிய உபநிஷதத்தில் வருகிறது.

"மித்ரதேவனும், வருணனும், இந்திரனும், அரியமானும், நன்மை புரியட்டும். நான் விஷ்ணுவை, ப்ரம்மனை, வணங்குகிறேன். எம்மையும் எமது ஆச்சார்யரையும் காப்பாற்றுவாயாக. வாயுதேவனே உன்னையே நான் பிரம்மமாக நினைக்கிறேன். உன்னையே சத்தியமாகவும் ருதமாக காண்கிறேன். எல்லோர் / (உலக) நன்மைக்காகவும் வணங்குகிறேன்."

ஷம்னோ மித்ரஸ்யம் வருண:
ஷம்னோ பவத்வர்யமான்
ஷம்ன இந்த்ரோ ப்ருஹஸ்பதி:
ஷம்னோ விஷ்ணு ருருக்ரமஹ:
நமோ ப்ரம்மணே
நமஸ்தே வாயு
த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி.
த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி
ருதம் வதிஷ்யாமி
சத்யம் வதிஷ்யாமி
தன்மாமவது தத்வக்தாரமவது
அவதுமாம்
அவதுவக்தாரம்
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி:

{மித்ரன் என்பவன் பகலுக்கு அதிபதி
வருணன் இரவுக்கு அதிபதி
இந்திரன் வலிமைக்கு அதிபதி
அரியமான் சூரியனின் தேவன் - எனக் கருதப்படுகிறார்கள். }

No comments:

Post a Comment