December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (நாடி ஜோதிடம்)

இறை என்ற நிலையில் எல்லாம் தெரிந்திருப்பதையும், ரிஷிகள்-ஞானிகள் என்ற நிலைக்கு உயர்ந்தவர்களால், ஞானக் கண் கொண்டு விஷயங்களை துல்லியமாய் கணித்து சொல்ல முடிவதையெல்லாம் ஆச்சர்யமான விஷயமாக சாமான்ய மனிதன் பார்க்கிறான். 'தெரிந்தது தெரியாதது பிறந்தது பிறவாதது அனைத்தும் யாம் அறிவோம்' என்ற திருவிளையாடல் வசனம் நினைவில் ஆடுகிறது. எப்படி இவர்களால் ஞானக்கண் கொண்டு நடப்பதையும் நடந்ததையும் கண்டுணர முடிகிறது? அது என்ன ஞானக் கண்?

எத்தனையோ பிறவிகள் ஜன்மங்கள் எடுத்துவிட்டதன் அறிகுறி நம் வாழ்வின் தடயங்களில் நிறைந்துள்ளது. மிருகமாய் பிறந்திருந்ததால் தான் இரை தேடுகிறோம். நரியின் தந்திரமும், யானையின் பலமும் ஒவ்வொரு மனிதனிடமும் இப்படிப்பட்ட அடையாளங்கள் இருக்கின்றன. ஆதி மனிதனாகப் பிறந்திருந்ததால் தான் இன்னும் இருட்டைக் கண்டு பயம் கொள்கிறோம்.

நடந்தவை, நடப்பவை எல்லாம் ஆகாசம் என்ற ether-ல் பதிவாகி இருக்கின்றன. இதை aakashic records என்று சொல்வார்கள். இதை படிக்க முடிந்தவர்கள், பிரித்து அறியக்கூடிய ஞானிகள் பலர் இருந்தார்கள். நாஸ்ட்ராடமஸ்-ன் கணிப்புக்களும் இவ்வகையைச் சார்ந்தது. நடந்த நடக்கிற, நடக்கப் போகிற என்ற கால வரையரையைக் கடந்து நிற்கின்ற பதிவுகள் ஆகாசம் எங்கும் நிரம்பியிருக்கின்றன.

நாடி ஜோதிடம் பலகோடி வருடங்களுக்கு முன்பே ஓலைச்சுவடியில் இன்னாரின் பிறப்பு, எதிர்காலம், கணித்து வைத்திருக்கின்றனர் ரிஷிகள். அவரவரகள் முன் ஜன்மமும் தெரிந்து கொள்ள முடிகிறது. தேர்ந்த நாடி ஜோதிடரை நாடிச்சென்று படிக்கும் ஜோதிடம் ஆகையால் 'நாடி ஜோதிடம்'. எல்லாருக்கும் ஓலைகள் கிடைத்துவிடுவதில்லை. யாருக்கு பார்க்கவேண்டிய ப்ராப்தி இருக்கிறதோ அவர்களுக்கு கிடைக்கும்.

( நம் மனதின் டவுட்டு: ஆனால் நாடி செல்லும் ஏறக்குறைய பலருக்கு ஓலை கிடைத்து விடுகிறதே)

No comments:

Post a Comment