December 12, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (உதங்க மஹரிஷியின் கதை! - ஜாதிகள் இல்லையடி பாப்பா)

பசி என்று வந்தால் பத்தும் பறந்தல்லவா போகும். ஜீவனின் உயிர் தாங்க, தகுந்த நேரத்தில் யார் உணவளிக்கிறார்களோ அவர்களே அங்கு சாக்ஷாத் பிரத்யக்ஷ தெய்வம் ருபம் அல்லவோ! அதைப்போன்று உரிய நேரத்தில், உணவளிக்கும் ஒருவனின் குலமோ கோத்திரமோ, புறத்தோற்றமோ பசித்தவனுக்கு ஒரு பொருட்டல்ல. ஒரு அழமான உண்மையை வெளிப்படுத்தும் கதை ஒன்றை சோ பகிர்ந்து கொண்டார்.

உதங்கர் எனும் ரிஷி, க்ருஷ்ணனிடம் 'நீர் அருந்த வேண்டும் போதெல்லாம் உடனே நீர் கிடைக்கும்படி வரம் அருள வேண்டும்' என்று வேண்டிக்கொள்கிறார். வேறொரு சமயம், நீர் அருந்தும் தேவை ஏற்படுகிறது. நீர் வேண்டும் என்று நினைத்த மாத்திரம், அருவெறுக்கத்தக்க சண்டாளன் உருகொண்டு, மிக அசுத்தமான தோல்பை ஒன்றில் நீர் கொண்டு வந்தவனை புறம்தள்ளி நொந்துக்கொள்கிறார். "ஆஹா எனக்கு நீர் இப்படிப்பட்ட அசுத்தமானவனிடம் இருந்தா வேண்டியது, இதற்கு நான் தாகம் தணிக்காமலே இருந்து விடுகிறேன்", என்று நீர் அருந்த மறுத்துவிடுகிறார். ஆனால் அங்கு நடந்தது என்ன? சண்டாளன் உருகொண்டு வந்தவன் இந்திரன். கொண்டு வந்த நீரோ மனிதர்களுக்கு கிட்டாத அரிய அம்ருதம். உதங்க ரிஷி மனப்பக்குவம் அடையவில்லை என்று எடுத்துக்காட்ட வேறு சாட்சியம் வேண்டுமா? எவன் ஒருவன், தோற்றத்திற்கு அப்பாற்பட்ட உண்மையை உணர மறுக்கிறானோ அவன் எவ்வாறு பக்குவம் அடைந்தவனாவான்? கிட்டத்தட்ட இதே கதை தான் ஆதி-ஷங்கரருக்கு ஈசன் வேறுபட்ட சாதி ஒருத்தனின் உரு தாங்கி படிப்பித்தக் கதையும்.

No comments:

Post a Comment