December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (Atheism)


சார்வாகம் என்றால் என்ன? சார்வாகம் என்றால் நாஸ்திக எண்ணங்களின் ஆதிக்கம். நாஸ்திகம் என்பது இன்றைக்கு விஞ்ஞான அறிவு கொண்டு, நாம் புதிதாக ஆராய்ந்து அதனால் வந்த எழுச்சியா? என்றால்...இல்லை என்கிறது புராணங்களும் வரலாறுகளும். படைப்பு படைக்கபட்ட போதே, சந்தேகங்களும், மாயையும், இறையை அறியாத மனமும், அதோடு சேர்ந்த நாத்திக எண்ணமும் பின்னிப்பிணைக்கப்பட்டிருக்கிறது.

நாஸ்திகம் எனப்ப்படும் சார்வாகம் இராமாயண காலத்திலும் இருந்திருக்கிறது. (அதற்கும் முன்பும் இருந்தது, இன்றக்கும் உண்டு. பின்பும் இருக்கும்) ஜாபாலி என்ற ரிஷி இராமனை காட்டைவிட்டு நாட்டை ஆள புறப்படுவதற்கு வேண்டி சார்வாதம் செய்ததாக சான்று உண்டாம்.

சார்வாகம் என்றால், பரிகசிக்கத் தக்கது, இல்லை என்ற புறக்கணிக்கபட்டது. Something which has been discussed and later dismissed என்ற அர்த்தம் தொனிக்கும் சொல். அதனால் நாத்திகப் பேச்சு இன்றைக்கு வந்த புதிய விஷயம் அல்ல. இன்று நாத்திகம் பேசியவர்கள் மாறவும் செய்யலாம், பொதுவாகவே இன்றைய சமுதாயத்தில் விஞ்ஞானம் மேம்பட்டு விளங்கிவருகிறது. Proof எனப்படும் புலன்களின் புரிதலுக்கு உட்படும் சாட்சிகள் சுட்டிக்காட்டப்படுவதால் விஞ்ஞானிகளின் விளக்கங்களும் அறிக்கைகளும் ஆச்சார்யர்களின் கூற்றை விட ஞானிகளின் விளங்கங்களை விட, ஏன், இறைவனின் வாக்குக்கும் மேலாக கருதப்படுகிறது. நம்மவர்கள் விஞ்ஞானிகளின் பேச்சுக்கு வேறு மறுப்போ அல்லது எதிர்கேள்வியோ கேட்பது கூட இல்லை. பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனம் (fox-tv) மனிதன் சந்திரனில் கால் பதித்ததை கேள்விக்குறியதாக செய்து சர்ச்சை எழுப்பினர். அதற்கு விஞ்ஞானிகள் தக்கபதில் அளித்தனர் என்பது ஒருபுறமிருக்க, விஞ்ஞானி ஒருவன் சொல்லிவிட்டால் கேள்விக்கணைகளைக் கூட நம் மக்கள் எழுப்புவதில்லை என்பது எவ்வகையான பகுத்தறிவைக் குறிக்கும் என யோசிக்க வேண்டும். பல நேரங்களில் பிரபல விஞ்ஞானிகள் தவறாக கருத்து கூறிவிடலாம். அவர்களும் மனிதனுக்குறிய குறைபாடுகளுடன் செயல் படுவதால் தவறு நேர்ந்துவிடலாம். சமீபத்தில் பெரிய விஞ்ஞான கண்டுபிடிப்பின் பேரில் தயாரித்து உபயோகித்து வந்த மருந்து பொருள்கள் தவறான விளைவுகளைக் கொடுத்துள்ளது. குற்றவிசாரணை நடத்தியதனைத் தொடர்ந்து அக்கண்டுபிடிப்பு முறையானதல்ல எனத் தெரியவந்துள்ளது. மருந்து பொருள்களை உலகெங்கும் ரத்து செய்து நேரிட்டது. பகுத்தறிவு ஒரே சீராக எந்தத் துறையிலும் செயல்பட வேண்டும். புராணங்களும் நம் புலன்களுக்கு எட்டாததாக விளங்கும் இறைத் தத்துவத்தை மட்டுமே பகுத்தறிந்து கேட்பது பாரபட்சமான கோணத்தை காட்டுகிறது.

நம் மதத்தில் கேள்விகளைக் கேட்பதும், எதிர்மறை கருத்துக்களுக்கு விளக்கங்கள் அளிப்பதும் பெரிதும் அங்கீகரிப்பப்பட்டவையாகத் தான் இன்று வரை இருந்துவருகிறது. கீதையில் பகவானின் பேச்சுகே "குழப்பாமல் புரியும்படி பேசு" என அர்ஜுனன் எனும் மனிதன் விளங்கக்கேட்கிறான். பகுத்தறிவாதம் வைத்து அதன் பின் விளங்கச்செய்வதால் வேதங்கள் மேலும் சிறப்புறுகிறது.

No comments:

Post a Comment