December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (அந்தணன் கடல் கடக்கலாமோ?)

'அறம் காப்பவர்களே அந்தணர்கள்' என்ற கருத்தை, மஹாபாரதம், பதினெண்புராணங்கள், மனுதர்மம், வேதங்கள் போன்ற நூல்கள் வலியுறுத்தியுள்ளன. அந்தணனுக்கு ஆறுவகையான அறங்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. வேதம் ஓதுதல், வேதம் பயில்வித்தில், யாகம் செய்தல், யாகம் செய்வித்தல், தானம் கொடுத்தல் தானம் வாங்குதல் என்பதே அவை. இத்தர்மங்கள் தழைத்திருக்கும் நாடு சுபீட்ஷம் பெற்றிருக்கும் என்பது சான்றோர் வாக்கு. இதை வலியுறுத்தும் குறள் ஒன்றும் உள்ளது. "ராஜா தர்மத்தை மறந்திருக்கும் நாட்டில் பசுக்கள் பால் கறப்பதில்லை, அங்கு அந்தணர் அறம் மறப்பர்." என்று குறளின் உரை கூறுகிறது. இந்த ஆறு அறங்கள் உலகை நல்வழியில் காக்க ஏதுவாய் அமைகிறது. இதனை முன்னிறுத்திப் பார்த்தால், அறம் மறந்த பூவுலகின் நிலைமை எந்த இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என நமக்குப் புரியும்.

அந்தணன் கடல் கடந்து செல்லுதல் ஏன் சாஸ்திரத்திற்கு விரோதம்? என்ற கேள்விக்கு convincing விளக்கம் ஒன்று உண்டு. நித்ய உபகர்மாக்களில் ஒன்று காயத்ரி மந்திர உச்சடனம். மும்முறை செய்யப்படவேண்டிய ஒன்று. பூமியில் செய்யப்படவேண்டிய வேண்டிய இக்கர்மா, கடல் கடந்து போகும் போது செய்ய முடியாமல் போவதால் இந்த விதி ஏற்பட்டது என்ற விளக்கம் தருகின்றனர் பெரியோர்.

"விவேகானந்தரைப் போன்ற பல துறவிகள் கடல் கடந்து அமைதியை பரப்பவில்லையா?" என்றால், அவர்கள் சென்றதன் நோக்கம், பொது நோக்கம், தன் சுய சம்பாத்தியத்தை பெருக்கிக்கொள்வதற்காக அல்ல என்பது ஒப்புக்கொள்ளவேண்டிய பதில்.

மேலும் இப்பாரத பூமி கர்ம பூமியாக இந்து மதத்தில் சொல்லப்படுகிறது. இதை பல்வேறு துறவிகளும் ஆச்சார்யர்களும் கூட உரைத்து வந்திருக்கின்றனர். பாரதம் = கர்ம பூமி, மற்ற பூமி போக பூமி என்ற சொல்லபடுகிறது.

No comments:

Post a Comment