December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (எல்லாம் தெரிந்தவரா நீங்கள்?)

அறிவுரைகள் / யோசனைகள் முவ்வகைப் படுமாம்.

1. ப்ரபு சம்ஹிதே:- அதாவது அரசன், எஜமானன் முதலியோரின் அறிவுரை, ஏறக்குறைய கட்டளை
2. சுகுருத் சம்ஹிதே:- நண்பனின் அறிவுரை. சக தோழன் கூறும் யோசனைகள்.
3. காந்தா சம்ஹிதே:- பெண் - சம வயதையொத்தவள்- பார்யை அல்லது மனைவி- தோழி - ப்ரியத்துடன் நேரம் பார்த்து, அஃதாவது இடம் பொருள் ஏவல் அறிந்து சொல்லப்படும் யோசனைகள்.

சமயோசிதமாக பெண்கள் செயல்படுவதால், சில நேரம் அவர்கள் கூறும் அறிவுரைகள் எடுபட்டுவிடும் வாய்ப்பு உண்டு.

நமக்கு பிடிக்காததை நம் நன்மையைக் கருதி சொல்பவர்கள் அரிது என்று விபீஷணன் இராவணனிடம் மனமிசையாத விஷயத்தை பற்றி பேசும் போது கூறுகிறான். அப்படி சொல்பவர்கள் அரிது. அப்படி சொன்னாலும் அந்த அறிவுரையின் படி கேட்டு நடப்பவர்கள் இன்னும் அரிது.

அறிவுரை சொல்பவரின் மனநிலை அஹங்காரமின்றி இருத்தலும் அவசியம். 'தனக்கும் எல்லாமும் தெரியும்' என்ற எண்ணம் பலரிடம் மலிந்திருக்கிறது. ராஜா பத்ருஹரி என்பவர் நீதி சதகம்((on virtues), ஸ்ருங்கார சதகம்(on romance), வைராக்ய சதகம் (finally dismissing all others are useless except the abode of god) என ஒவ்வொரு தலைப்பிலும் 100 ச்லோகங்கள் இயற்றியிருக்கிறார். அவற்றில் வைராக்கிய சதகத்தில், நீதி அறிந்தவன் இருப்பான், விதியைப்பற்றி அறிந்தவன் இருப்பான், சாஸ்திரம் அறிந்தவன், ஏன் பிரம்ம ஞானம் அறிந்தவனைக் கூட கண்டுவிடலாம். ஆனால், தனக்கு என்ன தெரியாது என அறிந்தவன் அரிது என்கிறார். எப்பேற்பட்ட அறிவாளிக்கும் கூட, தனக்கு என்ன தெரியாது என்பது தெரிவதில்லை.


'ஹிந்து மஹா சமுத்திரம்' என்ற புத்தகம் எழுதி வருகிறார் சோ। அதற்காகவும், அவர் முதலில் எழுதிய வால்மீகி இராமாயணம், வியாச மஹாபாரதம், எங்கே பிராமணன், முதலியவற்றிற்கும், இப்போது தொடர் இயக்குவதற்காகவும் அவர் பல நூல்களை ஆராய்ந்துள்ளார் எனக் கூறினார். க்ருஷ்ணப்ரேமியின் வேத விஞ்ஞானம், யோக வாசிஷ்டம், இராமக்ருஷ்ணா -mutt-ன் உபநிஷதம், மனுஸ்ம்ருதி, எளிய முறையில் அரும்பெரும் ஞானத்தை உறைக்கும் காஞ்சிப் பெரியவரின் தெய்வத்தின் குரல், சானக்கிய நீதி, ஆகிய நூல்களும் இன்னும் பல நூல்களும் ஆராய்ந்து எழுதுவதால், "எனக்கு எல்லாம் தெரியும்" என்ற அபிப்ராயம் எளிதில் பரவ உதவுகிறது. மற்றபடி எனக்கு ஒன்றுமே தெரியாது என கூறி நகைக்கிறார் சோ.

No comments:

Post a Comment