December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (மரமும் மனிதனும்)

மரங்களை வெட்டினால், சுற்றுப்புறச் சூழலின் மாசு அதிகரிப்பதாய் இன்றைய கண்டு பிடிப்பு. அதனாலேயே செடி கொடிகளை மரங்களை பாதுகாப்பது அவசியம். நம் சுவாசத்திற்கு ஏதுவாய் பிராண வாயுவை வழங்கும் எல்லா மரங்களும் செடிகளும் புனிதமானவையே. மற்ற மிருகங்களை மதித்தாலும் பசு எப்படி ஹிந்து வழிபாடுகளில் புனிதமாக கருதப்படுகிறதோ, அதே போல் எல்லா மரங்களும் புனிதமானவையாய் இருப்பினும், அவற்றில் சில மரங்கள் / செடிகளை நாம் வணங்குகிறோம். உதாரணம்: அரச மரம், வேப்பமரம். மஞ்சள் செடி. இவற்றின் காற்று பட்டாலோ அல்லது இலைகள / கிழங்குகளை உட்கொண்டாலோ உபயோகித்தாலோ

வியாதிகள் குணமாவதாக மருத்துவப்பலன்கள் கூறுகின்றன. அதே போல் துளசி. துளசியின் மருத்துவப்பலன் இன்றைக்கு உலகமே ஒப்புக்கொண்ட விஷயம். கொடும் வியாதியான, புற்று நோயைக் கூட மட்டுப்படுத்த வல்லது.

துளசிச் செடியை நம் வீடுகளில் புனிதமாகக் கருதி, வழிபட்டு வருகின்றோம். துளசி என்பவள் விஷ்ணுவிற்கு பிரீதியானவள். எதனால்? அவள் லக்ஷ்மியின் அவதாரம் என்பதால். இதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய கதை இருக்கிறதாம். தேவி பாகவதத்தில் இதைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. தேவதா ஷக்திகளுக்குள் எப்பொழுதேனும் வாக்குவாதம் நேர்ந்தால், அவற்றின் விளைவும் அதிக நன்மை பயப்பதாகவோ அல்லது சாபத்தில் கொண்டு விடுவதாகவோ இருந்து விடும். அவர்கள் ஷக்தி சாமான்யமானதல்ல என்பதால், விளைவுச் செயல்களுக்கு வீர்யம் அதிகம். கங்கை-ஸரஸ்வதி-லக்ஷ்மி மூவரும் வாக்குவாதம் செய்த போது கோபத்தின் உச்சத்தில் சரஸ்வதி லக்ஷ்மியை பூமியில் செடியாகிவிட சாபமிட்டுவிட்டாள். மிச்சம் இருந்த இருவரும் மேலும் வாதத்தைத் தொடர, அவர்கள் கங்கை நதியாகவும், சரஸ்வதி நதியாகவும் உருவெடுக்க நேர்ந்தது. லக்ஷ்மிக்கு ஆறுதலளிக்கும் விஷ்ணு, 'தர்மத்வஜனின் மகளாய் அவதரித்து, ஷங்கசூடனை மணந்து, பின் துளசிச் செடியாய் உருவெடுத்து மீண்டும் வைகுந்தம் வருவாய்' எனக் கூறி அருள்கிறார்.

இவ்வுலக நடைமுறைப்பலங்களைத் தவிர, பரத்திலும் நமக்குச் சிறப்பை சேர்க்க வல்லது துளசி. துளசியின் குச்சியைக் கொண்டு விளக்கேற்றினால், ஆயிரம் விளக்கேற்றிய பலன் உண்டாம். அதே போல் துளசியை பசையாய் உடம்பில் பூசி விஷ்ணுவை வழிபட்டால், ஆயிரம் முறை பூஜை செய்ததற்கு சமம் என்று சொல்கிறார்கள். மேலும், இறந்தவனை எரிக்கும் முன், பூதவுடலுடன், துளசியையும் சேர்த்து க்ரியை செய்தால், அவன் வைகுந்தம் செல்வது திண்ணம்.

No comments:

Post a Comment