December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (பெண்களின் குணங்கள்)

யுத்தம் முடிந்ததும் பீஷ்மர் தர்மருக்கு, யுத்த தர்மங்களைப் பற்றி ராஜநீதிகளைப் பற்றியும் இன்னும் சில தர்மங்களையெல்லாம் விளக்குகிறார். அப்போது தர்மர் "பெண்கள் எப்படிப்பட்டவர்கள்" என்ற கேள்வி எழுப்புகிறார். அதற்கு பீஷ்மர், பஞ்சசுவடி என்ற தேவகன்னிகை குறிப்பிட்டுள்ளதை அப்படியே கூறுகிறார். 'பெண்கள் சுயநலம், ஆசை, அஹங்காரம், ஆத்திரம், ஆசை, அசூயை, திருப்தியின்மை (இன்னும் என்னவெல்லாம் உண்டொ அவ்வளவும் போல?!) ஆகிய குண்ங்களைப் அதிகம் கொண்டிருப்பர். இப்படிப்பட்ட பெண்கள் அதிகரிக்க, யமனுக்கு மனித உயிர்களை கொண்டு செல்லும் போது திருப்தியின்மையே ஏற்படும்' என்கிறாள் என பீஷ்மர் கூறுகிறார்.

படைப்பின் ஆரம்ப காலகட்டத்தில் பெண்கள் மிகுந்த அறிவும், நற்குணமும், வேத அறிவும் மிக்கவர்களாக (வேதம் = knowledge about rightiousness) இருந்தனர். மனித உலகம், பூவுலகம் தேவலோகம் போல் ஆகிவிட்டபடியால், தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் வித்தியாசமின்றி மகிழ்ச்சியும், குதூகலமும் நிரம்பப்பெற்றிருந்தனர். பூவுலகிற்கும் தேவலோகத்திற்கும் வித்யாசம் இன்றி போய்விடும் என்று இந்திரன் (தேவேந்திரன்) கேட்டுக்கொண்டதன் பேரில், பெண்கள் ஆசையும் ஆத்திரமும் சேர்த்து படைக்கப்பட்டனர். அதன் பின் மனிதனின் வாழ்வும் பெரும் அல்லலுக்கு உட்பட்டது. ஆயிரம் நாக்கை கொண்டு ஒருவன் இருந்தாலும், அவனால் தன் ஆயுள் முழுவதும் ஒரு பெண்ணின் தீய குணங்களையும், அதனால் விளையும் விளைவுகளையும் அடுக்க நினைத்தால் முடியாது என்று பஞ்சசுவடி குறிப்பிடுகிறாள்.

மனுதர்மத்தில் (இதுவே தேவலை) பெண்கள் இரட்டை குணங்கள் மிகுந்தவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். அதாவது இயற்கையிலேயே, பெண் என்பவள் பொறுமை-ஆத்திரம், ஆசை-சாந்தம், தாராளம்-சுயநலம் எல்லாமே சரிசமமான அளவு இருக்கபெற்றவள். அதனாலேயே அவளால் சரியானதொரு பாதை தேர்ந்தெடுக்க தேரியாது, அல்லது சரியானதொரு முடிவை எடுக்க முடியாமல் திணறுவதால், ஆண் மகனின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு இருக்கிறாள். இளமையில், தந்தையும், பின் மணாளனும், அதன் பின் மகனும் அவளை பாதுகாக்கின்றனர்.

பெண்கள் பலவீனமானவர்களா? என்ற கேள்விக்கு நம்மில் பலரும், "ஆம்" எனச் சொல்லக்கூடும். உடல்-பலம் மட்டு பட்டவர்கள் என்ற அர்த்தத்தில் அமையும் பதிலது. இன்னும் சிலரோ, பெண்களுக்குப் பொறுமை அதிகம், சோதனைகளை எளிதில் ஜீரணித்து மீண்டு எழும் மனவலிமை அதிகம் படைத்தவர்கள் என்றும் கூறுவர். அதனால் பெண்கள் உடலால் பலவீனமானவர்களாக இருப்பினும் உண்மையில் அதிகம் மனோபலம் உள்ளவர்கள் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

இருப்பினும் பீஷ்மர் தர்மருக்கு உபதேசித்த மொழிகளில் பெண்களை எப்படி கையாள்வது என்று பேசும் போது, பெண்கள் பலவீனமானவர்கள் என்று கூறுகிறாராம். எப்படிப்பட்ட பலவீனம்? மனவலிமையில் மட்டுப்பட்டவர்கள். ஆசை அதிகம் அமையப்பெறுவதால் அடக்க ஆள முடியாதவர்கள். நன்றி உணர்வு இயல்பிலேயே அதிகம் இருக்கப்பெறாதவர்கள். எளிதில் உணர்ச்சிக்கு அடிமையாகக் கூடியவர்கள் அதனால் அவர்களை காப்பது அவசியம். அவர்கள் மனதை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். அவர்களை கோபித்தோ அடக்கியோ ஆளாமல் அன்பால் ஆளப்பட வேண்டியவர்கள். (here comes the grand idea of keeping one's spouse happy! and satisfying all her needs n fancies!)

எல்லா பெண்களும் அப்படியல்ல। பொதுப்படையாக முடிவு கட்டிவிட முடியாது. சத்துவ குணம் படைத்த பெண்டிர் இருக்கவும் செய்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களால் தான் இப்பூமி செழிப்புறுகிறது. அப்படிப்பட்ட பெண்களால் தான் நீதி நேர்மை, நல்லிணக்க சிந்தனை முதலியவை பாதுகாக்கப்பட்டு, உலகின் ஷாந்தி நிலவுகிறது. அதனால் அப்படிப்பட்ட பெண்கள் பூஜிக்கத்தக்கவர்கள். அப்படிப்பட்ட நற்குண மங்கை ஒருத்தி பூஜிக்கப்பட்டால், அவ்விடத்தில் தேவர்கள் வசிப்பதாக என்று புராணங்கள் கூறுகின்றன. இருப்பினும் பெண்கள் அதிக சதவிகிதம் மேற் சொன்ன வகையில் அடங்கியவர்கள்.

இதை விளக்கும் வகையில் தேவஷர்மா எனும் ரிஷியின் கதையை பீஷ்மர் கூறுகிறார்। தேவஷர்மாவின் மனைவி ருசி மிகவும் அழகானவள். அவள் அழகில் இந்திரன் மயங்கியிருப்பதால், தேவஷர்மா குடிலில் இல்லாத நேரம் பார்த்து இந்திரன் ருசியின் பலவீனத்தை பயன்படுத்தி ஆசையை கிளறி விடக்கூடும் என்று அபிப்ராயப்படுவதால், தம் சிஷ்யனான விபுலனை ருசியை பாதுகாக்கும் படி கூறுகிறார். விபுலன் ருசியின் உடலில் புகுந்து, இந்திரன் வரும் போது, ருசி விரட்டுவதைப் போல் விரட்டிவிடுகிறான். இந்திரனும், விபுலன் ருசியின் உடலில் புகுந்து விட்டதால் இனி தன் ஆசை நிறைவேறாது என்று புரிந்து கொண்டு சென்று விடுகிறானாம். ருசியின் உடலில் புகுந்ததை தேவஷர்மாவிடம் முதலில் விபுலன் மறைக்கிறான். பின் அவர் அதைக் கண்டுணர்ந்து, உன் எண்ணம் நல்லனவாக இருப்பதால், உன்னை நான் மன்னித்தேன், இனி உண்மையை மறைக்கும் பாவத்தை செய்யதே என்று எச்சரிக்கிறார். மேற்சொன்னக் கதையை தர்மருக்கு பீஷ்மர் பகிர்ந்து, பெண்கள் பலவீனங்கள் அதிகம் உள்ளவர்கள் என்பதை எடுத்துரைக்கிறாராம்.

(பயங்கரமாக கடுப்பாகிய நம்ம மனசு : என்னத்த சொல்ல!!!!)

No comments:

Post a Comment