December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (கேசவபெருமாள் கோவில்)

திருமயிலையில் சித்திரக்குளத்தருகே விளங்கும் பழங்காலக் கோவில்களுள் ஒன்று கேசவபெருமாள் கோவில். பெருமாளுக்கு கேசவன் என்ற பெயர் வர பல காரணங்கள் கூறப்படுகின்றன. கேசி என்ற அரக்கனை க்ருஷ்ணன் கொன்றவன். அதனால் அவன் கேசவன் என்று கொண்டாடப்படுகிறான். கம்சனின் ஆணைப்படி கேசி கண்ணனை அழிக்க குதிரை உரு கொண்டு தாக்குகிறான், இறுதியில் சம்ஹாரம் செய்யப்படுகிறான். பிருந்தாவனத்தில் இருக்கும் இந்த இடம் "கேசி கடம்" என்ற பெயரில் வழங்கப்படுகிறது. கேசவனைக் கொன்ற பின், அக்குளத்தில் முங்கி கண்ணன் குளித்ததாக ஐதீகம்.

மயிலையில் இருக்கும் கேசவ பெருமாளுக்கு வேறு ஒரு சரிதை சொல்வதுண்டு. இதில் குடிகொண்டுள்ள பெருமாளை ஆதிகேசவன் என்று அழைப்பர். முன்காலத்தில் மயிலாப்பூருக்கு மயூரபுரி பட்டிணம் என்று பெயர். பிருகு என்ற முனிவரின் யாகத்தை மது என்ற அரக்கன் அழிக்க முற்பட்டான். அவர் மஹாவிஷ்ணுவின் உதவியை நாடினார். யக்ஞத்திலிருந்து, விஷ்ணு லக்ஷ்மியுடன் தோன்றி அரக்கனை வதம் செய்தார். யக்ஞத்திலிருந்து தோன்றிய மஹாபுருஷன், நவரத்தினங்கள் பதித்த மகுடத்தை அணிந்திருந்தார், அவரின் கருமையான அடர்ந்த கேசம் ஜொலித்ததாம். அதனால் அவருக்கு கேசவன் என்று பெயர் என்பது இன்னொரு கருத்து. இங்கு தாயாராக மயூரவல்லி வீற்றிருக்கிறார்.

http://www.harekrsna.com/philosophy/associates/demons/vrindaban/kesi.htm http://www.dinamalar.com/anmegamnews_detail.asp?News_id=1274&cls=row3&ncat=HIN&ncat1=WRI
http://chennaionline.com/Religion/Temples/April09/02Aadhi-Kesava-Perumal-Temple.aspx

ஆழ்வார்களின் ஒருவரான பேயாழ்வாருக்கு இங்கு சன்னிதி இருக்கிறது. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் மூவருக்கும் மஹாவிஷ்ணு தரிசனம் கொடுத்ததாக புராணம் கூறுகிறது. மஹாவிஷ்ணுவைக் கண்ட பொய்கையாழ்வார் கடலையே எண்ணையாக வரித்து சூரியனை விளக்காக்கி துதிக்கிறார். பூதத்தாழ்வாரும் அன்பையே விளக்காக வைத்து இறை ஆர்வத்தை நெய்யாக்கி இறைவனை துதிக்கிறார். அதன் பின்னர், பேயாழ்வாருக்கு தரிசனம் தெரிகிறது. இவர் கேசவபெருமாள் கோவில் கிணற்றில் பிறந்தார் என வரலாறு கூறுகிறது.

"திரு கண்டேன் பொன் மேனி கண்டேன்
நிகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்
செருக்கிளரும் பொன்னாழி கண்டேன்
புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று"


என்று திருவந்தாதி பாடுகிறார்.

http://azhvaar.wordpress.com/category/uncategorized/

கேசவ பெருமாள் கோவில் திருவத்தூரிலும் இருக்கிறது. இங்குள்ள தாயார் மரகதவல்லி. இறைவனாம் திருமால், கேசன் கேசி என்ற அரக்கர்களை வென்ற பின் இங்கு எழுந்தருளியதாக ஸ்தல புராணம் சொல்கிறது. கேசி என்ற அரக்கன் தாமிரபரணி ஆறாக ஓடுகிறான். அவனை ஒடுக்கி வென்று கேசவ பெருமாள் என்ற பெயருடன் இங்கு மஹாவிஷ்ணு திகழ்கிறார். விஷ்ணுவிற்கும் கேசிக்கும் நடக்கும் போரை சிவன் பனிரெண்டு உருவங்கள் தாங்கி கண்டு, பின் கேசவனை வழிபட்டதாகவும் கூறுகின்றனர்.

http://www.templenet.com/Tamilnadu/df087.html

No comments:

Post a Comment