December 13, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (கர்மா)

கர்மாவைப் பற்றி நம் ஹிந்து மதத்தில் அதிகம் பேசப்பட்டிருக்கிறது. நல்லது செய்யும் ஒருவனை துன்பம் சூழ்வதற்கும், நல்லது அல்லாதது செய்யும் ஒருவன் நன்றாய் வாழ்வதற்கும் வேறு என்ன காரணம் இருக்க முடியும்? everything has to tally, and be accounted somewhere என்ற தத்துவத்தின் பேரில் அமைந்தது தான் 'கர்மா' என்ற விளக்கம்.

கர்மா என்பதை நான்கு வகையாகப் பிரிக்கலாம் .
சஞ்தித கர்மா: ஒருவன் இதுவரை சேமித்து வைத்திருக்கும் நல்லன நல்லனவற்ற செயல்களின் தொகுப்பு.
பிராரப்த கர்மா: ஒரு தனிப்பட்ட பிறவியில் அவனின் சஞ்சித கர்மாவின் ஒரு பகுதியாய் அவற்றின் கர்மபலனாய் அவனை ஆட்டுவிக்கப் போவது.
க்ரியமாண கர்மா: என்பது நாம் தற்போது செய்து கொண்டிருக்கும் நல்லன நல்லன அல்லாத செயல்களின் பதிவுகள்। ஆகம கர்மா, நாம் இப்பொழுது செய்யும் கர்மத்தால் நமக்கு, பிறிதொரு பிறவியில் தோன்றப்போகும் வினைகள.

இதையும் தாண்டி பகவான் க்ருஷ்ணன்
"யக்ஞ கர்மா" என்ற இன்னொரு பிரிவைச் சொல்கிறான். அதாவது யக்ஞம் / யாகம் செய்வதால் வரும் கர்மா அல்ல. கர்மயோகியாய் ஒருவன் செயல்பட்டு, செயலின் பலனை துறந்து, விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு, கடமையைச் செய்யும் கர்மா 'யக்ஞ-கர்மா'.

http://anmikam4dumbme.blogspot.com/2008/12/3.html (reference: நன்றி)

2 comments:

  1. i am sorry i have no belief in god.. but nice article

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி சக்தி. Therez nothing to be sorry about :) இதெல்லாம் தனிப்பட்ட நம்பிக்கை தானே. மீண்டும் நன்றி :)

    ReplyDelete