December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (ஆகம விதிகள்)

கோவில்கள் சிறப்பானவை. அதனை ஆகமவிதிப்படி உருவாக்கியிருந்தால் அதன் சிறப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது. ஆகமவிதி என்பது, கோவிலகள் அமைக்கும் முறைகளை, விதிகளை கூறுகிறது. அதனையொத்து கட்டப்படும் கோவில்களில் மென்மேலும் மெருகு கூடுகிறது. கோவில்களை எப்படிக் கட்டுவது, எவ்வகை நிலப்பரப்பை தேர்ந்தெடுப்பது, ஆலயங்களின் அளவு-அமைப்புகள், பூஜை விதிகள், அதற்கான காலங்கள், முதலியவை எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. கோவிகள் கட்டுவதற்கு ஏற்ற இடம் அமைவதற்கு பல இடங்களில் "பூ(bhoo) பரிட்சை" நடத்தபட்டு, அதன் பின்னரே ஆலயங்கள் எழுப்பப்படுகின்றன. 'வாமதேவ பத்ததி'யை முன்னிருத்தி செய்வதாக கூறப்படுகிறது. இது சைவர்களின் 'சிவ-ஆகமம்'. (வைணவர்களுக்கு முறையே, 'வைகானசம், பஞ்சராத்ரம்' என்ற விதிமுறைகள் உள்ளன.)

சிவலிங்கத்தை மூன்று அங்கங்களாக பிரிக்கலாம். விஷ்ணு பாகம், ருத்ர பாகம், மற்றும் ஆவுடையாரில் தேவி பூஜிக்கப்படுகிறாள். ஆலயங்களில் பிரதிஷ்டை பல சமயங்களில் செய்யப்படுகின்றது.

ஆவர்த்தப் பிரதிஷ்டை - என்பது முதல் பிரதிஷ்டையைக் குறிக்கிறது

அனாவர்த்தப் பிரதிஷ்டை - பழுது ஏற்பட்டு புனர் நிர்மாணம் செய்யும் போது செய்யப்படும் பிரதிஷ்டை

புனர்-ஆவர்த்த பிரதிஷ்டை - சிறிய பழுதுகளை களைந்த பிறகு பிரதிஷ்டை செய்வது

அந்தரித பிரதிஷ்டை - பெரும் பாதிப்புக்களோ இழப்புக்களோ நேர்ந்து பின்னர் செய்யப்படும் பிரதிஷ்டை

சில ஆலயங்கள் மிகவும் ஷக்தி வாய்ந்ததாகவும், தொன்று தொட்டு நிலவி வருவதன் காரணமும், ஆகமவிதிப்படி அமைக்கப்பட்டதாக இருக்கலாம்.

No comments:

Post a Comment