December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (பொய் சொல்லக் கூடாது பாப்பா)

பொய் சொல்வதும் தவறு. உண்மையை மறைப்பதும் தவறு. உண்மையை பேசாமல் இருப்பதால், பொய் சொல்லவில்லை என்று ஆகிவிடாது. மாண்டவ்யரைக் கழுவில் ஏற்றும் கதை, பல்வேறு விதமாக சொல்லப்படுகிறது. கதையின் கருத்து மாறுபடவில்லை என்றாலும், சிறு மாற்றங்களுடன் பல versions இருக்கிறது. மாண்டவ்யர் என்ற மாமுனிவர் தவமியற்றிக்கொண்டிருந்த போது திருடன் அவர் பரணசாலைக்குள் புகுந்து விடுகிறான். இதையறியாது அவர் நிஷ்டையில் இருக்கிறார். அரசனின் ஒற்றர்கள் வந்து திருடனைப்பற்றிய உண்மையைக் கேட்ட போதும் அவர் நிஷ்டையில் இருந்ததால், அவரின் காதுகளுக்கு எட்டவில்லை. அதையறியாத அறிவீன அரசன், அவரை கொள்ளைக் கூட்ட தலைவன் என முடிவு கட்டி, கழுவில் ஏற்றிவிடுகிறார். கழுவில் ஏற்றுவது என்பது மிகவும் கொடுமையான தண்டனையாம். கூர்முனை மெதுவாக உடலை தைத்து வெளிவரும். slow painful death . கழுவில் ஏற்றியும் அவர் உடல் பொன்னென ஜொலிக்க, பயந்து போன அரசன் தான் தவறு செய்துவிட்டோம் எனப் புரிந்து விடுவித்தான். அதற்குள் ஆணி பாதி உடலை துளைத்து வந்திருந்ததாம். அதனால் அவருக்கு ஆணி-மாண்டவ்யர் என்ற பெயரும் வந்தது. அவர் நேரே தர்மதேவனைத் துதித்து எனக்கேன் இப்படிப்பட்ட துயரம்? என வினவினார். சிறுவயதில்

நீ தும்பிகளை/பூச்சிகளை, ஊசியால் குத்தி விளையாடினால், அதனால் உனக்கிந்த கதி என்று அவர் உரைக்க, சிறுவயது தவறுகள் தெரிந்து செய்யப்படுவதில்லை, அதற்க்காகவா இப்படிப்பட்ட தண்டனை என்று கோபமுற்று அவரை மண்ணில் பிறக்க உத்தரவிட்டார். அவர் தான் விதுரர்.

http://www.maraththadi.com/article.asp?id=1381&print=1
http://www.dinamalar.in/anmegamnews_detail.asp?News_id=978&cls=row3&ncat=HIN&ncat1=STO
http://www.composetamil.com/tamil/content.aspx?typeid=7&Contentid=142

(மாண்டவ்யரின் கதை and diff versions)


மாண்டவ்யர் பொய் சொல்லவில்லை. உண்மையை பேசாமலும் இல்லை. அவர் நிஷ்டையில் இருந்தார் என்று கூறுவதுண்டு.


ஒருவனின் மோசடி செய்கையிலும் கூட, மனம் வெளுத்திருந்து, பிறரை துன்புறுத்தும் நோக்கம் இல்லாமல் இருந்தால் அதற்கு இறைவனும் கூட ஒத்துழைக்கலாம் எனக் கொள்ளலாம். இறைவனே மோசடி பத்திரம் கொண்டு நாடகமாடியது சுந்தரர் வரலாற்றில் உள்ளது.

ஆலகாலவிஷத்தை யார் எடுத்து வருவது? அருகே சென்றாலே அது தகிக்கிறது. அப்போது சிவன் தன் பிம்பத்தை பார்க்க, அங்கிருந்து தோன்றுகிறார் சுந்தரர். வசீகரிக்கும் சுந்தர ரூபம் உடையவர் என்பதால் சுந்தரர். அவர் பூலோகத்தில் தோன்றும் போது இரு பெண்களை இச்சித்து மணந்து கொள்ள ஆசைப்படுகிறார். அவரின் திருமணம் வேறொருத்தியான மூன்றாமவளுடன் நிச்சயிக்கப்படுகிறது. இவ்விடத்தில் அவரை சிவனே, வயோதிக வேடத்தில் வந்து ஆட்கொண்டதாய் கூறப்படுகிறது. சுந்தரன் தனக்கு அடிமை என்று அவன் முன்னோர்கள் சாசனம் எழுதியதாய் கூறுகிறார். அதை காண்பிக்கும் போது சுந்தரர் அதை கிழித்து எறிந்து விட, வெண்ணைநல்லூரில் அவர்களின் வழக்கு தொடர்கிறது. வழக்கு கிழவருக்கே சாதகாக முடிந்துவிட்டது. அவருடன் தன் வினையை நொந்து கொண்டு சுந்தரர் செல்லும் போது கிழ உருவை விடுத்து இறைவனும் இறைவியுமாய் தோன்றினராம். நாத்தழுதழுக்க இறைவனை பாட முற்பட்ட போது, "என்னை பித்தா என்றல்லவா தூஷித்தாய், அதையே முதற் சொல்லாய் வைத்து உன் பாட்டை துவக்கு" என்று இறைவன் அருள....அப்போது தோன்றிய பாடல் "பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா"

பல நூல்களும் நற்பண்பினை எடுத்துறைக்கும் நன்னெறிப் புத்தகங்களும் உண்மையை மறைத்தல், பொய் உரைத்ததற்கு ஈடாகும் என்று கூறுகிறது.

ஆனாலும்...

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்


என்னும் குறளுக்கு விளக்கமே தேவையில்லை. பொய்யையோ, அல்லது உண்மையை மறைத்தலையோ அலசும் போது, அதன் நோக்கத்தையும் சேர்ந்து அலச வேண்டும். தன்னலமற்று, பிறர் நலனுக்காக பொய் உரைக்கப்பட்டிருப்பின், அது உண்மைக்கு சமம் என்பதே சான்றோர் வாக்கு.

இராமாயணத்திலிருந்து சில உதாரணங்களை எடுக்கலாம். சுமந்திரர் தேர் ஓட்டிச் சென்ற போது துக்கம் தாளாமல் தசரதர் அழுது தேரை நிறுத்தச் சொல்லி கதற, ராமனோ, தேரை செலுத்த ஆணையிடுகிறான். தந்தை கேள்வி வினவினால், உங்கள் காதுகளுக்கு அவரிடம் கூக்குரல் சத்தம் எட்டவில்லை என்று கூறிவிடுங்கள் என சுமந்திரரிடம் கூறுகிறான். இதுவும் பொய் தான், அதன் நோக்கம், தசரதரின் வாக்கு காப்பாற்றப்பட வேண்டும் என்பதே.

அதே போன்று, பரதன் மீண்டும் ராமரை அரசாள அழைக்கும் போது, தசரதன் கைகேயியிடம் அவள் ஈன்றெடுக்கும் பிள்ளைக்கே பட்டாபிஷேகம் செய்விப்பதாய் வாக்கு கொடுத்திருந்தார் என்று பொய்யுரைக்கிறான். பரதனை சமாதானப்படுத்தி நாடு அனுப்ப வேறுவழியின்று பொய்யுரைக்க நேரிடுகிறது.

ராமனைப்பற்றியே ஏன் பேசுகிறோம் என்றால், மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று நியதிப்படி வாழ்ந்தவன் அவன். கண்ணனைப் பற்றி இங்கு பேச இயலாது. அவன் செய்கைகளை அதனால் தான் "லீலைகள்" என்று சொல்லிவிடுகிறோம் . ராமன் மனிதனாய் வாழ்ந்தான். கண்ணனோ இறைவனாய் தீர்ப்பு கூறினான்.


ராமனின் வாழ்வை முன்னுதாரணமாய் வைத்து நாம் நம் செய்கைகளை செப்பனிட்டுக்கொள்ள வேண்டும். அப்பேற்பட்ட ராமனும் ஓரிரு தருணங்களில் பொய்யுரைத்திருப்பதை அலசுதல் அதன் நோக்கத்தை புரிந்து செயல் பட உதவுகிறது.

ராமன் செய்கைகளில் உறுத்தும் இன்னொன்று வாலியை மறைந்து நின்று கொன்றது. இதை அறவே மறுக்கின்றன வேறு சில நூல்கள். கமபனும் துளசிதாசரும் ராமாயணத்தை பக்திததும்ப கற்பனாஷக்தியை புகுத்தி எழுதினர். வால்மீகி ராமாயணம் நடந்ததை அப்படியே
எடுத்துரைக்கும் புத்தகம். அதில் ராமன் மறைந்து நின்று கொன்றதாய் கூறப்படவில்லை. "எத்தனை வலிந்து சண்டையிட்டும் ராமனின் பாணம் முன் ஒன்றும் செய்ய முடியவில்லை" என்று அழுது புரளும் தாரா முன் வான்ரங்கள் கூறின என செய்யுள் வருகிறது. "யுத்தத்தில் நான் உன்னை வீழ்த்தினேன்" என்கிறான் ராமன். யுத்தநீதிப்படி பார்த்தால், இவற்றை இரு கோணங்களில் அலசலாம். வாலி முதலானோரை மிருகம் என்ற ஜாதியில் சேர்த்தால், மிருகத்தை ராஜா வேட்டையாடிக் கொல்வது என்பது நிகழ்வதே. அவர்களை மனிதர்களாய் பாவித்தால், தம்பி மனைவியை களவாடியவன் என்பதால் அவனுக்கு எத்தகைய தண்டனையும் அரசன் வழங்கலாம் என்பது சட்டம்.

No comments:

Post a Comment