December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (முயற்சி)


"மனிதன் முயன்று கொண்டே இருக்க வேண்டும். எந்த நல்ல காரியத்திற்கும் மனம் சோர்ந்து விடாது, தளராது முயன்று கொண்டே இருக்க வேண்டும். முயன்றால் எதையும் சாதிக்கலாம். சிறு காரியங்கள் முதல் பெரிது வரை இடைவிடாது முயலும் போது தன்-முயற்சி சாதிக்காதது எதுவும் இல்லை" என்றார் வசிஷ்டர்.

அப்படியெனில் முயற்சி ஒன்றே போதுமே, இறைவன் என்ற ஒன்று ஏன் தேவை? எதற்கு இருக்கிறது? - இது ராமன்

அதற்கு வசிஷ்டர் "முன் வினை கடுமையாய் இருக்கும் பட்சத்தில், முயற்சி வீணாகும் வாய்ப்பிருக்கிறது. அதனால் மேலும் மேலும் முயற்சி செய்துகொண்டிருக்க வேண்டும். முன்வினைப்பயன் நல்லதாக இருந்தால், அல்லது கடுமை குறைந்து இருந்தால், சிறு முயற்சியும் கைகூடும்." என்கிறார்.

முன்வினை என்பது தான் சிலருக்கு சிறுமுயற்சியின் அதிர்ஷ்டமும், வேறு சிலருக்கு பல முயன்றும் தோல்வியும் தோன்றக் காரண்மாய் உள்ளது. Its all the question of balancing our account to reflect credit। Then we reap benefits.

ஒவ்வொருவரின் வாழ்விலும், விதியின் பங்கு நிச்சயம் உண்டு. ஆனால் விதி நல்லதாய் இருக்கிறதே என்று முயற்சி செய்யாமல் விட்டுவிட்டால், மந்திரத்தில் மாங்காய் காய்க்காது. விதியுடன் மனித முயற்சியும் வேண்டும். நாம் நம் செயல்களில் முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும். விதி நன்கு அமைந்தால், நலன் கூடுதல், முயற்சி செய்தும் பலன் இல்லாவிட்டால், அது தான் விதி .

நிலத்தை உழுது, பயிரிடுவது நம் கடமை. மழை பெய்வதும், பெய்யாதிருப்பதும் விதி.

Effort + fate = result
No effort + favourable-fate= minimised result
Effort + unfavourable-fate = play of fate.

என்பது தான் formula.


"நாமொன்று நினைத்தாலும் தெய்வம் ஒன்று நினைக்கும்" என்பார்கள். தெய்வம் என்றால் இறைத்தீர்ப்பு. 'விதி' என்றும் சொல்வதும் இதைத்தான். இதன் வீர்யம் அதிகமாக இருக்கும் போது, நம் தனிப்பட்ட வைராக்கியத்தால் பெரிதும் சாதித்து விட முடியாது. விதியை வெல்ல போதிய அளவு நம் வைராக்கியத்தாலும் சித்தத்தாலும் முடியாத போது, அதனுடன் எதிர்த்து விளையாடி என்ன பயன்? அதை பகைத்து, அதனுடன் மல்லுக்கு நின்று ஆவது என்ன? நம்மை நாமே வருத்திக்கொள்வது மட்டுமே கண்ட பலனாய் இருக்கக்கூடும்.

நம் வாழ்வில் பிடிக்காத ஒன்று நடக்கிறது, அதை நம்மால் தடுத்து நிறுத்தும் வலிமையில்லை என்றால் என் செய்வது, அதனுடன் மோதுவதை விடுத்து, அதனுடன் இயைந்து, ஒப்பி வாழ்வதே சிறந்தது. "When u dont get what u love, love what u get" என்ற ஆங்கில பழமொழியும் இதையே நினைவுறுத்துகிறது. ACCEPTING life as offered, is the best remedy to live a meaningful life.

இன்னொரு பெரிய கேள்வி. நாம் ஏன் அலுத்துக்கொள்கிறோம்? தன்னிரக்கத்தில் மூழ்குகிறோம் என்றால், we try to hide and bury our inefficiency to accept life, under the pretext of pain. நாளாவட்டத்தில் அந்த வலியில் வாழப்பழகிக் கொண்டுவிடுகிறோம். அந்த வலியை நேசிக்கத் துவங்குகிறோம். நம் சோதனைகளுக்கும் முயலாமை, இயலாமை போன்ற எல்லா ஆமைகளுக்கும், வெகு சௌகரியமாக இந்த வலியை பழியாக்கி, இலக்காக்கி அதை சுட்டிக்காட்டி நாம் தப்பித்துக்கொண்டு விடுகிறோம்.

விதி என்பது என்ன என்றால், நிர்ணயிக்கப்பட்ட விஷயம். எது நிர்ணயிக்கிறது? ஆனாலும் நம்மால் ஆட்டுவிக்கமுடியாத ஒன்றை விதி மாற்றி அமைத்தால், எந்த மனிதனும், படை, பலம், புத்தியுடன் கூடிய எவனும் தடுமாறிவிடுகிறான். இவையெல்லாம் ஏன் நம் புத்திக்கு எட்டுவதில்லை? புரிபடுவதில்லை? நம் புத்திக்கும் அறிவுக்கும் புலப்படாத, புரியப்படாத விஷயங்கள் பல உள்ளன. அதை ஒப்புக்கொள்வதே புத்தியின் முதல் வெற்றிப்படி. அறிவுக்கு எட்டாத விஷ்யங்கள் தினம் நம் வாழ்விலும் நடந்து கொண்டிருக்கிறது.

ஒருவன் ஜெயிக்கவேண்டுமெனில் இன்னொருவன் மட்டுபட வேண்டும். ஒருவனின் ஜெயித்தல், இன்னொருவனின் தோல்வியால் தான் நிகழ்கிறது. ஏன் இன்னொருவன் தோற்கிறான். அவனுக்கு புத்தி மட்டு, அல்லது நேரம் சரியில்லை. ஏன் புத்தி மட்டு? ஏன் நேரம் சரியில்லை? ஏன் ஒருவன் உச்சாணிக்கொம்பில் உட்கார, இன்னொருவன் கீழே தூசிதட்டுகிறான்? இவையெல்லாம் நம்மை மீறிய விஷயங்கள். Therez always a controversy here as to why things happen? Is it destiny or Is it choice! Again thats a different topic by itself. I suppose we can safely conclude destiny and choice are inter-twined so closely, that its difficult to see them apart.

2 comments:

  1. சோவின் எங்கே பிராமணன் பற்றி நான் இட்டப் பதிவுகளைப் பார்க்க: http://dondu.blogspot.com/search/label/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி டோண்டு ராகவன். :) உங்கள் முதன் பாகத்தின் பதிவுகளை நானும் படித்து வந்திருக்கிறேன். இரண்டாம் பாகத்தை உங்கள் பதிவில் படிக்க ஆவலாய் உள்ளேன்.

    அன்புடன்,
    ஷக்தி

    ReplyDelete