April 14, 2023

Story of Raja Purushothama - Sakshi Gopal (Odisha)

 

(AS recap please refer to Sakshi Gopal incident where Lord Krishna came as witness link shared below

http://minminipoochchigal.blogspot.com/2023/04/story-of-sakshi-gopal-lord-krishna-who.html )

Sakshi Gopal - Odisha


Continued)

Story of Raja Purushothama

ஸ்ரீ கிருஷ்ணன், ஒரிஸ்ஸாவில் ஸ்திரவாஸம் வைத்துக் கொண்டதாக நான் சொன்னது ஞாபகம் இருக்கிறதா? காஞ்சி எல்லைக்கு வந்த ஸாக்ஷி கோபாலர் ஏன் எப்படி ஒரிஸ்ஸாவுக்குப் போனார் என்றால்:
.
மேலே சொன்ன கதை நடந்த பிறகு மட்ரா கோபாலன் காஞ்சி கோபாலனாகிவிட்டான் என்பது வட தேசம், உத்கலம் என்கிற ஒரிஸ்ஸா முதலிய எல்லா இடங்களிலும் பரவிற்று.
.
Raja Purushotham of Orissa
ஒரிஸ்ஸாவில் புரி ஜகந்நாத்தில் , புருஷோத்தமன் என்று ஒரு ராஜா இருந்தார். ஜகந்நாத சுவாமிக்கும் புருஷோத்தமன் என்ற பெயருண்டு. ராஜாக்கள் ராஜ்யம் விட்டு ராஜ்யம் விவாஹ ஸம்பந்தம் பண்ணிக் கொள்வது உண்டல்லவா? அப்படி இந்த ராஜா அப்போது காஞ்சியிலிருந்து ஆட்சி நடத்திய தொண்டை மண்டலாதிபதியின் பெண் பத்மாவதியைக் கல்யாணம் செய்து கொள்வதாக ஏற்பாடாயிற்று…
.
Krishna chaitanya, Jayadeva: Saints... a recap
பக்தி, ஸங்கீர்த்தனம் என்று இருப்பவர்களுக்கு ஜகந்நாத க்ஷேத்ரம் என்றவுடன் இரண்டு மஹான்களின் நினைவே வரும். ஒருவர் ஸ்ரீக்ருஷ்ண சைதன்யர். மற்றவர், 'எட்வின் ஆர்னால்ட்' இங்கிலீஷ் பொயட்ரியாக மொழி பெயர்த்திருக்கும் “கீத கோவிந்த மஹா காவ்ய”த்தைச் செய்த ஜயதேவ ஸ்வாமி. அவர் பாட, அதற்கு நர்த்தனமாடிய அவருடைய பத்னியின் பெயரும் பத்மாவதிதான்.
.
Falling in Love with Sakshi Gopal
காஞ்சீபுர ராஜகுமாரி பத்மாவதியை புரி ராஜா புருஷோத்தமன் கல்யாணம் பண்ணிக் கொள்ள ஸம்மதித்ததற்கு ஒரு முக்ய காரணம், அங்கே போனால் சாக்ஷி கோபாலனைத் தரிசனம் பண்ணிவிட்டு வரலாமென்பதுதான். அப்படியே அவர் கல்யாண்மாகி ஸ்வாமி தரிசனம் செய்தாரோ இல்லையோ, இளம் பத்னியைக் கூட மறந்து அந்த ஸ்வாமியிடமே அவருக்கு மஹா ப்ரேமை உண்டாகிவிட்டது. விக்ரஹத்தைத் தமக்குக் கொடுக்கும்படி மாமனாரைக் கேட்டுக் கொண்டார்.
.
புது மாப்பிள்ளை கேட்பதை மாமனார் மறுக்க முடியுமா? ‘பெண்ணைக் கொடுத்தாயோ, கண்ணைக் கொடுத்தாயோ?” என்று வசனம். பெண்ணைக் கொடுத்த காஞ்சீபுர ராஜர் கண்ணனையும் கொடுத்தார்!
.
Krishna stays put as Sakshi Gopal in Mukunthapur
மாப்பிள்ளை தன்னுடைய ராஜ்யத்துக்குப் பத்னியோடும் பகவானோடும் திரும்பினார். புரியில் ஏற்கெனவே பிரஸித்தமான ஜகந்நாத ஸ்வாமி இருந்ததால் அவருக்குப் போட்டியாக ஸாக்ஷி கோபால் அங்கே இருக்க வேண்டாம், தனி ராஜாவாக அவர் வேறே ஊரில் கோவில் கொள்ளட்டும் என்று அவர் நினைத்தார். க்ருஷ்ணன் பெயரில் முகுந்தபுர் என்று ஒரு க்ஷேத்ரம் அவருடைய ராஜ்யத்திலிருந்தது. அதை அடுத்துள்ள ஊரில் முக்யமான ஆலயம் எதுவுமில்லாததால் அங்கே ஸாக்ஷி கோபாலுக்குக் கோவில் கட்டி ப்ரதிஷ்டை பண்ணினார்.
.
அதுவே இப்போது ஸாக்ஷி கோபால் என்று வழங்கும் க்ஷேத்ரம்.
.
Chapter: சாக்ஷி கோபால்\

#SakshiGopal #Krishna #Odisha #King #purushothama

No comments:

Post a Comment