April 15, 2023

Sthala purana story of Sakshi Nadheswarara - சாக்ஷி நாதேஸ்வரர் திருப்புறம்பியம்

Sakshi NadhEswarar 


சாக்ஷி நாதேச்வரர் என்ற பேரில் ஈச்வரன் இருப்பது திருப்புறம்பியம் என்ற க்ஷேத்திரத்தில். அது கும்பகோணத்துக்கு வடமேற்கே ஐந்து, ஆறு மைலில் மண்ணியாற்றின் வடகரையிலிருக்கிறது. சுந்தரேச்வரரின் கடைசியான அறுபத்து நாலாவது லீலையாகத் திருப்புறம்பய ஸாக்ஷிநாதர் சமாசாரந்தான் வருகிறது.
.
Two Families and their dispute
காவிரிப் பூம்பட்டினத்தில் ஒரு வணிகர், இருந்தார். அவருடைய சகோதரியை மதுரையிலிருந்த ஒரு வணிகருக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தது. கொஞ்ச நாளில் அவளுக்கு ஒரு பிள்ளையும் பிறந்தது.
.
எதனாலோ அவளுடைய பிறந்தகம், புகுந்த அகம் ஆகிய இரண்டு குடும்பங்களுக்கும் சம்பந்தம் கத்தரித்துப் போய்விட்டது.
.
Trying to renew the relationship
காவேரி பூம்பட்டின வணிகருக்கு ஒரு பெண் பிறந்தது. உடனே அவருக்கு முறைப்பிள்ளை நினைவு வந்தது. ‘மருமகன் பிறந்தானே! முறை விட்டுப் போகாம அவனுக்குத்தான் பெண்ணைக் கொடுக்கணும்’ என்று முடிவு பண்ணினார். முடிவு பண்ணினாரே தவிர, கத்திரித்துப் போன உறவை புதுப்பிக்க முனையவில்லை. துரத்ருஷ்ட காலம், வணிகர், அவருடைய சம்ஸாரம் ஆகிய இரண்டு பேரும் கண்ணை மூடிவிட்டார்கள்.
.
கல்யாண வயசுக் கன்யாப் பெண் அநாதையாக நின்றது. தனக்கு ஒரு அத்தான் உண்டு; அவனுக்குத்தான் தன்னைக் கொடுக்க அப்பா உத்தேசித்திருந்தார் என்று அந்தப் பெண்ணுக்குத் தெரியும். அ அந்தப் பிள்ளைதான் தன் பதி என்று அவள் கற்பு நெறி அநுஷ்டிக்க ஆரம்பித்து விட்டாள்.
.
அந்தப் பெண்ணிடம் அபிமானமும் இரக்கமும் கொண்ட ஊர் ஜனங்கள் மதுரையிலிருந்த மருமான் அட்ரஸைக் கண்டு அவனுக்கு ஓலை அனுப்பினார்கள். அவனும் காவிரிப்பூம்பட்டினம் வந்தான்.
.
Groom agreeign to marry the bride
அவனுக்கு ஏற்கனவே கல்யாணமாகிப் பசங்கள் கூட இருந்தது. ஆனாலும் இரண்டாம் கல்யாணம் அப்போது வழக்கத்தில் இருந்ததால், மாமா பெண்ணுக்கு அவள் ஊரிலிருந்த கொடுக்கல்-வாங்கல்களைப் பைஸல் பண்ணிவிட்டு, சோழ நாட்டில் கொஞ்சம் க்ஷேத்ராடனமும் அவளோடு பண்ணிவிட்டு மதுரைக்குத் திரும்பிக் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தோடு வந்தான்.
.
Groom and bride decide to go on pilgrimage
திருப்புறம்புய ‌க்ஷேத்திரத்தில் அவர்கள் ஒருநாள் ராத்தங்க வேண்டி வந்தது. ரொம்ப தூரம் நடந்து வந்த அலுப்பும் புழுதியும் போவதற்காக அவன் கோவில் கிணற்றில் குளித்தான். மடப்பள்ளிக்குப் போய் ப்ரஸாதம் வாங்கிக் கொண்டு ஸ்தல விருக்ஷமான வன்னி மரத்தின் கீழே உட்கார்ந்து கொண்டு இரண்டு பேரும் சாப்பிட்டார்கள். அப்புறம் ப்ராகாரத்திலேயே தள்ளித் தள்ளிப் படுத்துக் கொண்டு தூங்கிப் போய் விட்டார்கள்.
.
Danger that awaited
பாதி ராத்ரியில் ஒரு பாம்பு வந்து அவனைக் கடித்தது. முழித்துக் கொண்டு “ஐயோ!” என்று அலறினான். சத்தம் கேட்டு அந்தப் பெண்ணும் எழுந்திருந்து வந்து அவனைப் பார்த்தாள். கிடுகிடுவென்று அவன் உடம்பு நீலம் பாரித்துப் போயிற்று. அப்புறம் அவனிடமிருந்து பேச்சு மூச்சு இல்லை. பாம்புக்கடி என்று புரிந்து கொண்டு நடுநடுங்கிப் போய் விட்டாள். ‘கல்யாணம் பண்ணிக் கொண்டு நல்வாழ்வு தர இருந்தவன், பாவம் போய் விட்டான்’ என்று தெரிந்தது. அந்தப் பெண் அழுது துடித்தது. இதற்குள் பொழுதும் விடிந்து விட்டது.
.
Thirugnaana sambandhar bringing back toe groom to life
அப்போது அந்த ஊருக்குத் திருஞானஸம்பந்தர் எழுந்தருளியிருந்தார். அவர் காதுக்குத் துக்க ஸமாசாரம் போயிற்று. அவர் அந்தப் பெண்ணிடம் ரொம்பவும் கருணை கொண்டார். உடனே, ஹாலாஹால விஷ பானம் பண்ணிய ஸ்வாமியிடம் போய் அந்த மதுரை வணிகனுக்கு விஷத்தை இறக்கி மறுபடி உயிர் கொடுக்கும்படிப் பதிகம் பாடினார். (அப்பூதி பிள்ளைக்கு விஷம் இறங்க அப்பர் பாடின மாதிரியே!)
.
ஸ்வாமி அநுக்ரஹம் செய்தார். விஷம் ஏறின வேகத்திலேயே கிறுகிறுவென்று இறங்கிற்று. ‘மாண்டவன் மீண்டான்’ என்பது நிஜமாயிற்று.
.
Thiru Gnanasambandhar urging an urgent marriage
“அப்பா, இன்னமும் இந்தப் பொண்ணைக் காக்க வைக்காதே! மொதல்ல கல்யாணத்தைப் பண்ணிக்கோ. அப்புறம் க்ஷேத்ராடனம் முடிச்சுட்டு மதுரைக்குத் தம்பதியாப் போய்ச் சேருங்கோ” என்று ஸம்பந்தர் அவனுக்கு உத்தரவிட்டுவிட்டு அங்கேயிருந்து புறப்பட்டார்.
.
”மஹான் சொன்னதை மீறப்படாது. ஆனாலும் இங்கே கல்யாணமாச்சுன்னு ஊர்ல போய்ச் சொன்னா ஊர்க்காரா ஸாக்ஷி கேட்பாளே! இங்கே
யாரைப் பிடிச்சு, அவச்யம் ஏற்படறப்போ, அங்கே ஸாக்ஷி சொல்ல வரப்பண்ண முடியும்?” என்று அவனுக்கு யோசனையாயிற்று.
.
முடிவாக ஸ்வாமியேதான் சாக்‌ஷி என்று வைத்துக் கொண்டான்.
.
Sakshi of Vanni tree, temple well and the shivalinga

‘ஸ்வாமி’ என்று நினைத்தவுடன் அவன் மனக் கண்ணில் ஸ்வாமி – சிவலிங்கம் – மட்டுமில்லாமல் கோவில் இருந்த முழு ‘ஸெட்-அப்’பும் தோன்றிற்று. குறிப்பாக,
.
மனஸில் பார்த்தது அப்படியே அவன் வாயில் வர, “ஸ்வாமி, வன்னி மரம், கிணறு, மடைப்பள்ளி ஸாக்ஷியாக உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று சொல்லி மாமா பெண் கழுத்தில் தாலியைக் கட்டினான்.
..
( நிகழ்வுகள் அடுத்த பதிவில் தொடரும்)
.
Chapter: ஸாக்ஷி நாதேச்வரர்
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)
#Thirupurambiyam #திருப்புறம்பியம் #Sakshi #Nadeswarar

No comments:

Post a Comment