January 19, 2021

என் காதலே! என் காதலே!

 




ஏ மேகமே!
நீ நீர் சுமப்பதைப் போல்
நான் கண்ணீர் சுமக்கிறேன். 
எனைத் தீண்டாதே!
.
ஏ மேகமே 
நீ பூச்சொரிந்தாலும் - என்
தேகத்தின் தாகம் தணியாது
.
சென்று வா மேகமே
எனை அழ விடாதே
சென்று வா மேகமே
உன் உறவு கசக்கிறது
.
நான்கு முறை கூறியும்
நகராத மேகம் நீ
மின்னலென கண்சிமிட்டி
இடியெனச் சிரித்தாய்
.
ஆதவனின் கருணை வேண்டி
மாதவனை தூதனுப்ப
"உனை சுட்டெரிக்கிறேன் பார்"
"உனை விழுங்கிவிடுகிறேன் வா"
என்றே வெற்றிக் கீற்றாக
பகலவன் உனை நெருங்கினான்..
நீயும் நொறுங்கினாய். 
*
சடுதியில்
மறைந்த உனை நினைத்து - ஆனந்த
மிகுதியில் திளைத்தேன்
*
வெட்கம்கெட்டவனே!
நீயோ என்அழகில் மயங்கி 
வானவில்லை பரிசளித்து 
நட்புக்கரம் நீட்டினாய்.
*
அறிவற்று நானும்
உன் மேன்மையில் மனங்குளிர்ந்து
நாளை மீண்டு(ம்) வருவதற்கு
சம்மதித்தேன்.
நம் காதல் இனி தொடரும்..

No comments:

Post a Comment