January 20, 2021

கண் கெட்ட பின்னே....

 


ஈடு செய்ய முடியாத இழப்பு...
ஏடு சொல்லித் தராத பாடம்.
மூடனாய் மயங்கிய மனமும்,
கேடு வரும் என்று தெரிந்தே
ஓடிய குணமும்,
மேடும் பள்ளமும் சூழும் பாதையில்
தேடிய சுகமும், சுவையும்,
ஆடி அடங்கிய பின்பு
வாடி நிற்பதென்ன! பின்
கூடிக் கூத்தாடும் கூட்டத்தை
சாடி உமிழ்வதென்ன!

No comments:

Post a Comment