Showing posts with label ஆழ்வார்கள். Show all posts
Showing posts with label ஆழ்வார்கள். Show all posts

April 02, 2024

குலவேற்றுமைகளைக் கடந்த பக்தி-ஞானம்

 Let us learn about the divine life of ThirupaaNazhwar, who, with his gross body merged with the lord in a jiffy. Just like AndaL he just vanished to become one with divine. All he did was to sing 10 pasurams.......and after getting the darshan of lord, not wanting to see anything else other than lord, not wanting to live in this mortal world, he instantly merged with the lord.


#திருப்பாணாழ்வார், #ஆழ்வார், #அரங்கன், #ரங்கநாதர், #பட்டர், #அர்ச்சகர், #முனிவாகனன், #திருவிழா, #முனிவாகனர், #munivahana, #ranganatha, #Srirangam, #ஸ்ரீரங்கம், #hinduism, #Bhakthi, #பக்தி, #Dream, #grace, #கனவு, #அருள்

March 30, 2024

பக்தர் 'விப்ரநாராயணரை' மீட்ட ரங்கநாதர்

 Story of Sri VipraNarayana who rose high to become "thodaradippodi azhwar". Incident from his life highlights how deep devotion towards the lord, can relay the divne path of bhakthi, even if human faulter and sway away from the divine due to destiny.






#தொண்டரடிப்பொடி, #ஆழ்வார், #தொண்டரடி, #திருமால், #ஆழ்வார்கள், #திருமாலை, #திருப்பள்ளியெழுச்சி, #விப்ரநாராயணர், #தேவதாசி, #தேவதேவி, #சிற்றின்பம் #பச்சைமாமலை #ஊரிலேன், #miracle, #Narayana, #thirumal, #azhwargaL, #azhwar, #thirumalai, #thiruppaLLiezuchi, #ranganatha, #Srirangam, #ஸ்ரீரங்கம், #hinduism, #Bhakthi, #பக்தி

March 18, 2024

பொன்னும் புகழும் விரும்பாத பெரியாழ்வார்

 On episode which brought out Periyazhwar's deep love for god.


#பெரியாழ்வார், #ஆழ்வார், #திருப்பல்லாண்டு, #திருமால், #ஆழ்வார்கள், #திவ்யப்பிரபந்தம், #மறுமை, #இம்மை #வல்லபத்தேவன், #miracle, #Narayana, #thirumal, #azhwargaL, #azhwar, #divyaprabandham, #aandal, #ஆண்டாள், #மதுரை, #பாண்டியன், #பெருமாள், #சிவன், #சனாதனதர்மம், #hinduism, #Shiva, #Sanatana, #Bhakthi, #பக்தி

March 08, 2024

மதுரகவியாழ்வார்

 



Posts briefs some of the important incidents in Madhurakavi azhwar and

Glorifies azhwar,who is very well known for his "guru bhakthi" We prostrates acharya thiruvadi. #azhwargaL, #ஆழ்வார்கள், #இந்துமதம், #குருபக்தி, #நம்மாழ்வார், #nammazhwar,#gurubhakthi, #hinduism, #alwars, #Spirituality, #பக்தி, #krishna, #கிருஷ்ணன், #கண்ணன், #சங்கப்பலகை, #சங்கத்தமிழ், #divyaprabhandam, #திவ்யபிரபந்தம்

February 02, 2019

திருமங்கையாழ்வார்






சீர்காழியிலுள்ள திருக்குரையலூரில் பிறந்தவர் திருமங்கையாழ்வார். சோழ மன்னனின் படைத்தலைவனாக விளங்கியவர் வீரத்திலும் தீரத்திலும் பெரிதும் போற்றபட்டு சோழமன்னனாலேயே அரசனாக்கப்பட்டவர். சோழப்பேரரசன் திருமங்கை எனும் நாட்டை, அவர் படைத்தலைவனுக்கு பரிசளித்து குறு-நில அரசனாக்கினான்.

நீலன் என்று இயற்பெயர் பெற்ற படைத்தலைவன், திருமங்கையின் அரசனானான். அரசன் எப்படி ஆழ்வாரானார்? ஒழுக்கத்திலும் உயர்விலுஇம் சிறந்த ஒருவரை மேலும் மேன்மையான பாதைக்கு மாற்றி அழைத்துச் செல்ல தக்க குணமுள்ள மாதரசியாலே முடியும். திருமங்கை மன்னன் குமுதவல்லி என்ற பெண்ணின் மேல் காதல் கொண்டு திருமணம் புரிந்த பின், அவள் பின்பற்றும் வைணவ நெறியை தானும் பின்பற்றலானான். சிறிது சிறிதாக மன்னனை பெருமாளிடம் பெரும் பித்து வைக்கும் அளவுக்கு குமுதவல்லியால் மாற்ற முடிந்தது. போரும் குருதியும் வெற்றிக்களிப்பும் கண்டு மாவீரன், திருமாலுக்கும் அவர் அடியவருக்கும் கைங்கரியம் செய்யும் எளிய பக்தனாக மாறிப்போனார். சேவையில் ஈடுபட்டே தன் செல்வம் இழந்தார்.

அதனால் சோழ மன்னருக்கு வரி செலுத்த முடியாமற் போயிற்று. சினந்த மன்னன் திருமங்கையாழ்வாரை சிறைபிடித்தார். திருமால் இவர் சார்பில் பணம் கொடுத்து காத்தருளியதை அறிந்து சோழனும் ஆழ்வாரை விடுவித்து அவர் செலுத்திய வரிப் பணத்தையும் திரும்பக் கொடுத்தான்.

திருமங்கையாழ்வார் கள்வனைப் போல் வேடமிட்டு, வழியில் அகப்படும் பெரும் செல்வந்தர்களிடம் பொருள் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இவரை ஆட்கொள்ளும் பொருட்டு வைகுந்தவாசன், மன்னன் வழக்கமாக களவாடக் காத்து நிற்கும் பாதையில் , ஸ்ரீலக்ஷ்மியுடன் மணக்கோலத்தில் ஒரு அந்தணராகத் தோன்றி, தம் பொருளனைத்தையும் களவு கொடுத்தார். எவ்வளவு முயன்றும் ஆழ்வாரால், களவாடிய நகைகளையும் பொருட்களையும் நகர்த்தி எடுத்துச் செல்ல முடியவில்லை. பின்னர் அந்தணராக வந்த பகவான் மந்திரோபதேசம் செய்து நல்வழிக் காட்டியருளினார்.

திருமங்கையாழ்வார் 'பெரிய திருமொழி', 'திருக்குறுந்தாண்டகம்", சிறிய திருமடல், பெரிய திருமடல் உட்பட ஆறு நூல்கள் எழுதியுள்ளார். மற்றோரைக் காட்டிலும் அதிக பெருமாள் கோவில்களை மங்களசாசனம் செய்த ஆழ்வார் திருமங்கையாழ்வார்.

திருப்பாணாழ்வார்





குலவேற்றுமைகளும் அதனால் பிறரை சிறுமைப்படுத்தும் இழிச்செயல்களும் காலம் தோறும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஆழ்வார் காலமும் இதற்கு விதி விலக்கல்ல. பாணர் குலத்தோர் இசை வல்லுனர்களாக பெயர் பெற்றுள்ளனர். பிற்காலங்களில் பாணர் குலம் தீண்டுதற்கு ஆகாத குலமென்று தள்ளி வைக்கப்பட்டது.
திருப்பாணாழ்வார் பாணர் குலத்தில் பிறந்து, உறையூர் அருகிலுள்ள திருக்கோழி கிராமத்தில் வாழ்ந்தார். பெருமாள் மேல் பக்தி பூண்டு இசையால் அவர்க்கு ஆராதனை செய்து மகிழ்வார். பாணர் குலத்தவர்க்கு விதித்த கட்டுப்பாட்டை மனதில் கொண்டு கோவிலுள் செல்லாமல் காவிரிக்கு அக்கரையிலிருந்தே பாடல் பாடி திருவரங்கத்து பெருமாளை மகிழ்வித்து வந்தார்.
ரங்கநாயகனுக்குத் திருமஞ்சனம் செய்ய காவிரி நீர் சுமந்து வந்த கோவில் பட்டர், வழியில் பாட்டுப் பாடி உருகி நிற்கும் பாணரை பல முறை விலகும் படி கேட்டுக்கொண்டும் விலகாததால், செய்வதறியாது திகைத்தார். திருமஞ்சனம் செய்ய நீர் கொண்டு போகும் வேளையில் பாணரைத் தீண்டினால் சுத்தமும் ஆச்சாரமும் போய்விடுக்கூடும் என்று கருதி வேறு வழியின்றி அவர் விலக சிறு கல் எறிந்தார். அந்தக் கல் பாணரின் தலையில் பட்டு குருதி வழிந்தது. அதை கவனிக்காத அர்ச்சகர் அரங்கனுக்கு அபிஷேகம் செய்ய புறப்பட்டார். பாணரின் உயர்ந்த உள்ளமும் பக்தியின் மேன்மையும் உலகுக்கு உணர்த்த எண்ணிய திருவரங்கத்தான், குருதி வழிய காட்சி தந்து, திகைத்த பட்டருக்கு பாணரின் உயர்வை உணர்த்தும் பொருட்டு, பாணாழ்வாரை, அர்ச்சகர் தமது தோளில் சுமந்து திருக்கோவிலுள் வரும்படி ஆணையிட்டார்.
திருப்பாணாழ்வார் பெருமாளின் அங்க அழகை விவரித்து பாடல் எழுதியுள்ளார். இவர் பாடல்களுள் பெருமாளின் திருவழகை விவரிக்கும் பத்துப் பாடல் 'அமலனாதிபிரான்' என்றழைக்கப்பட்டு திவ்யப்பிரபந்ததில் சேர்க்கப்ப்ட்ட முத்துக்கள். ஆண்டாளைப் போலவே ஸ்தூல உடலுடன் பெருமாளுடன் ஐக்கியமானதாக சரிதம்.

January 22, 2019

தொண்டரடிப்பொடியாழ்வார்





ஸ்ரீவிஷ்ணு அலங்காரப் பிரியன் அல்லவா! மாலை தொடுத்து சேவித்திருப்போருக்கு மாலவனின் மனதில் தனியிடமுண்டு. விப்ர நாரயணர் எனும் பக்தரும் அப்படியொரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தவர். வேத விசாரதர் எனும் விஷ்ணு பக்தருக்கு மகனாகப் பிறந்தார். பக்தியில் தந்தையையும் மிஞ்சிய மகனாக, அரங்கனுக்கு பூமாலையுடன் தமிழ்ப் பாமாலையும் நித்தம் சூட்டி சேவை புரிந்து வந்தார். இதற்கெனவே நந்தவனம் அமைத்து புத்தம்புது நறுமலர்கள் அன்றாடம் சேகரித்து வண்ண மாலைகள் தொடுத்து வழிபட்டு வந்தார்.
இறைவனை பாடித் துதிப்பதே தம் பணியென்றிருந்தவர். திருமாலைத் தவிர மாதொருத்தியை மனம் நாடாது என்றுரைத்தவர், விதி வசத்தால் அழகிய ஆடலரசியிடம் தன் மனதை பறிகொடுத்தார். அவளுக்கெனவும் அவள் குடும்பத்தாரின் திருப்திக்கும் செல்வத்தை எல்லாம் இழந்தார். தமை மறந்தார். சிற்றின்பத்தில் நாட்டம் திரும்பும் பொழுதே தமை இழந்து விடும் பக்தர்களையும், ஆட்கொள்ளும் தயாளனல்லவா அரங்கன்! இழந்த விவேகத்தை மீட்டருளும் பொருட்டு, தமது சொத்தான பொற்கிழியொன்றை விப்ரநாராயணருக்காக கொடுத்துதவினான் அரங்கன். அப்பொற்கிண்ணம் அரங்கன் சொத்து. அதை களவாடியவர் விப்ர நாரயணரே என்ற பெரும்பழி ஏற்று தண்டனை பெற இருந்தவரை, குற்றமற்றவர் என்று மன்னர் கனவில் உண்மையுரைத்து அடியவர் பெருமையை உலகறியச் செய்து காத்தருளினார்.
ஊனக்கண் மறைந்து ஞானக்கண் தோன்றுங்கால், பணிவும், தம்மை சிறுமைபடுத்திக் கொண்டு பிறரை உயர்த்திப் பிடிக்கும் குணமும் தன்னால் வந்து சேருமல்லவா! தொடர் தம் அடியின் துகளையும் உவந்து திருமண்காப்பின் புனிதமென இட்டு உவப்பவரை, தொண்டரடிப்பொடியாழ்வார் என்று உலகமே கொண்டாடியது.
இறையருளால் நீண்ட பெருவாழ்வு வாழ்ந்து, அரங்கனைப் பாடித் துதித்து, ஆயுள் முடியுங்கால் வைகுந்தம் சென்றடைந்தார்.
'திருமாலை' மற்றும் 'திருப்பள்ளியெழுச்சி' இவர் படைப்புகள். அரங்கன் மீது தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய திருப்பள்ளி எழுச்சியே இன்றும் அனைத்து வைணவ ஆலயங்களில் பாடப்பட்டு வருகிறது.
சோழ நாட்டுத் திருமண்டங்குடியில் எட்டாம் நூற்றாண்டு பிறந்த இவரை வனமாலையின் அம்சத் தோன்றலாக போற்றுகின்றனர்.

January 18, 2019

ஆண்டாள்





ஆண்டாளைப் பற்றி சிறு-குறிப்பு வரைதலும் சாத்தியமா? அவள் பெருமைகளை பேசவும் வார்த்தைகளுக்கு திறன் போதுமோ! ஸ்ரீவல்லிப்புத்தூர் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்ட ரத்தினம் அவள். இறைவனால் பிரசாதமாக வழங்கப்பட்ட திருக்குழந்தை என்று தோன்றியதாலோ என்னவோ பெரியாழ்வார் தம் ரத்தத்திலும் ஆன்மாவிலும் பெருக்கெடுத்தோடும் அத்தனை பக்தியும் ஆண்டாளுக்கு போதித்தே வளர்த்தார்.

பூங்குழந்தையவளை பூங்கோதையென்று பெயரிட்டு சிராட்டி வளர்த்தார். பாலுடன், தேனுடன், தினம் உண்ணும் அமுதுடன் ஸ்ரீ ஹரியின் நாமமும் புகட்டினார். நல்பக்தி கொண்ட திருக்குழந்தை, பெருமானை தன் உற்ற தோழனாகக் கொண்டாடினாள். தன்னையே அம்மாயவனின் மனையாளாக பாவித்து, அவன் சூடும் மாலை தான் சூடினால் பேரிழில் கூடிவிடுமோ என்று தினம் இறைவனுக்கு பெரியாழ்வார் தொடுத்து வைத்த மாலையை தான் ஒரு முறை சூடி அழகு பார்த்து வந்தாள். 


இதனை கண்ணுற்ற ஆழ்வார் பதறினார். பக்திக்கு களங்கமெனத் துடித்துக் கதறினார். சிறு பேதையின் தவறை மன்னித்தருளும்படி பெருமானிடம் வேண்டி வேறு மாலை தொடுத்து அழகு பார்த்தார். கோதையின் காதலை ஏற்ற கண்ணனோ அவள் சூடிய மாலையை அல்லாது வேறு மாலை தனக்கு வேண்டாமென கனவில் வந்து ஓதினான். ஆண்டவனையே ஆண்ட அவளே ஆண்டாள் அன்றோ!

ஆண்டாள் அருளிய திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் பற்றி அறியாத ஸ்ரீக்ருஷ்ண பக்தர்களைக் காண்பது அரிது. பக்தியும் காதலும் ஒன்றை ஒன்று விஞ்சும் இப்பாடல்கள் இறைவனை இப்படியும் சென்றடையலாம் என்று நமக்குணர்த்தும் முன்னோடி. கோபிகையாக தன்னை வரித்து உருகிய பாடல்கள். இதனை செவியுற்ற பெருமானும் உருகாதிருப்பானோ! ஆண்டாளுக்கு தக்க பருவம் வந்த பொழுது, கண்ணனையே திருமணம் கொள்ளும் எண்ணத்தில் தளராதிருப்பதை அறிந்த பெரியாழ்வார் கலக்கமுற்றார். அவர் கனவில் தோன்றிய கண்ணன், ஸ்ரீரங்கத்துக்கு ஆண்டாளை திருமணக்கோலத்தில் அழைத்து வர ஆணையிட்டான். திருமணக்கோலத்தில் அரங்கன் கருவறைக்குள் புகுந்தவள் அவனுள் ஒன்றெனக் கலந்தாள் என்ற கண்டவர்கள் சான்றுரைக்கின்றனர் .

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத மதுசூதனன் அவள் கைத்தலம் பற்றி தன்னுடனே அழைத்துக் சென்று விட்டான்.

எப்படிப்பட்ட வாழ்கை வாழ்வதென்று சொல்லாமல் சொல்லிய ஆண்டாள் நம் மனதையும் ஆண்டாள் அன்றோ!


January 16, 2019

பெரியாழ்வார்




மல்லிநாடு என்றழைக்கப்பட்ட ஸ்ரீவல்லிப்புத்தூரில், முகுந்தபட்டருக்கும் பதுமவல்லிக்கும் பிறந்தவருக்கு விஷ்ணுசித்தர் என்று பெயர் சூட்டினர்.

ஸ்ரீவல்லிப்புத்தூரில் கோவில் கொண்டுள்ள வடபத்ரசாயிக்கு அன்றலர்ந்த நறுமலர்கள் சேகரித்து, பூமாலையாக்கி சூட்டுவதை பெரும்பணியென்று ஏற்றிருந்தார் விஷ்ணுசித்தர்.

மதுரை நகர் மன்னவன் திருவீதியுலா வருங்கால், ஒரு வேதியரை நல்வார்த்தை கூறக்கேட்க, அவரும், இரவுக்கு பகலிலும், முதுமைக்கு இளமையிலும், மறுமைக்கு இம்மையிலும் நிதி திரட்டவேண்டும் என்று திருவாய் மொழிந்தார். இதன் சந்தேகத்தை தீர்க்கும் வண்ணம் அவை அமைச்சர், பரத்திலுருக்கும் தலைவனுக்கே வாழ்வை அர்பணித்திருக்க வேண்டுமென்று அறிவுறுத்தியதாக உரைத்தார். இறைவன் கனவில் வந்து ஆணையிட்டபடி, மன்னனை அணுகிய விஷ்ணு சித்தர், பரத்திலுருக்கும் முதல்வன், ஸ்ரீ நாராயணனே என்று நிரூபித்து பொற்கிழி வென்று வந்தார் .

யானை அம்பாரியில் வீற்றிருந்து பொற்கிழியுடன் உலா வருவதை களிக்க , நாராயணன் ஸ்ரீலக்ஷ்மியுடன் வானத்தே உதிக்க, அவன் பேரிழில் கண்டு, பெற்றோருக்குரிய கவலை தொற்றிக்கொள்ள, எங்கே அவனுக்கு கண்பட்டு விடுமோ என்று திருபல்லாண்டு பாடி வாழ்த்தியமையால், ஆழ்வார்களில் எல்லாம் பெரியோன் ஆகவே பெரியாழ்வார் என்று பெருமாளால் அன்புடன் அழைக்கப்பட்டு, பின்பு அதுவே அவர் திருப்பெயராகிப் போனது.

நாலாயிரப் பிரபந்தத்தில் இவர் பகவானை குழந்தையென பாவித்து பாடிய பல்லாண்டே முதல் பாடல்களாக அமைந்திருக்கிறது. ஆண்டாளை கண்டெடுத்து செவ்வன வளர்த்து, பெருமாளுக்கே அர்பணித்து, அவனை மருமகனாக ஏற்கும் பெறும் பேறு பெற்ற பெரியாழ்வார்.

January 09, 2019

மதுரகவியாழ்வார்


 ( நின்றிருப்பவர் மதுரகவியாழ்வார். அமர்ந்து திருவாய் மொழிந்தவர் நம்மாழ்வார்) 


பாண்டிய நாட்டின் திருக்கோளூர் எனுமிடத்தில் ஒன்பதாம் நூற்றாண்டு பிறந்தவர் மதுரகவியார். நம்மாழ்வாருக்கு முன் பிறந்தவர். பின்னரும் வாழ்ந்தவர். செவிக்கும் உள்ளத்துக்கும் இனிக்கும் கவிதைகள் படைத்தமையால் காரணப்பெயராக மதுரகவி என்றழைக்கபட்டார். உலக விஷயங்களில் நாட்டமில்லாதவராகவும், நாராயண பக்தி கொண்டவராகவும் சிறு வயது முதல் தம் பாதையை வகுத்துக் கொண்டார். வடமொழிப் புலமையும் கைவரப் பெற்றிருந்தார். வட நாட்டு யாத்திரைக்கு சென்றவரை பேரொளி ஒன்று ஈர்த்தது. ஒளியின் திசையை கண்டுணர்ந்து அதனைத் தொடர்ந்தவர் நம்மாழ்வாரை அடைந்தார். தமது ஆறாத் தாகத்தை கேள்வியாக்கினார். நம்மாழ்வாரின் திருவாய் மொழிந்த விடையே பெருந்திருப்தி அளித்து நம்மாழ்வாரை குருவாக ஏற்கப்பணித்தது. தத்துவங்கள் யோக ரகசியங்கள் அனைத்தும் குருவிடம் கற்றுத்தெளிந்தார். "கண்ணி நுண் சிறுத்தாம்பு" என்ற பதிகத்தை தம் குருவுக்கு பாமாலையாக்கினார். அதில் பதினொரு பாசுரங்கள் உள்ளன. இவை திவ்யப்ப்ரபந்தத்தில் இடம் பெற்றுள்ளன.

நம்மாழ்வாரின் முதன்மை சீடராக திகழ்ந்து அவர் புகழ்பரப்பினார். குருவின் மீது கொள்ளும் பெரும் பக்திக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தார். திருவாய்மொழியை நெறிப்படுத்தினார். நம்மாழ்வாரை உயர்த்திப் பிடிப்பது சிறப்பன்று- அவரும் பக்தரே அன்றி பகவான் அல்ல என்று சங்கப்புலவர்கள் ஆட்சேபிக்க, அவர்களின் செருக்கை நம்மாழ்வார் புகழ் பாடும் "கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்" பாசுரத்தின் முதலடியைக் கொண்டே வீழ்த்தினார்.

குருவுக்கு செய்யும் சேவையில் இறைவனைக் கண்டார். பாசுரங்களால் இறைவனைப் பாடி, குருவையும் துதித்தே இம்மையில் உய்ந்து மறுமையில் பரமனடி பற்றினார். பக்தர்கள் இவரை கருடனின் அம்சமாகக் கொண்டாடுகின்றனர்.

குலசேகர ஆழ்வார்




ஒவ்வொரு ஆழ்வாரும் வெவ்வேறு தனித்துவத்துடன் விளங்கினாலும் நாராயண பக்தி ஒன்றெ அனைவரையும் ஓரிழையில் இழைத்து ஆழ்வார்கள் என்ற மாலையில் பூக்களாக திகழ்ச் செய்கிறது.
கேரளாவிலுள்ள கருவூரில் (கொல்லிநகர்) ஸ்ரீராமனின் அவதார நட்சத்திரமான புனர்பூசத்தில் அவதரித்தார். கௌஸ்துப மணியின் திருவம்சமாக கொண்டாடப்படுகிறார். வாழ்ந்த காலம் எட்டாம் நூற்றாண்டு என நூலேடுகள் உரைக்கின்றன.
புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்து முறையே ராமபக்தியே தம் பிறப்பின் இலக்காக வாழ்ந்தவர். சங்க கால சேரர் . சந்திர குலத்து அரச வம்சத்தவர். சிறந்த முறையில் நீதி வழுவாமல் ஆட்சி செலுத்தி தமது எல்லையையும் விரிவு படுத்தியவர். பகவானின் பக்தியுடன் அவர் அடியார்களிடமும் அளவிலா பணிவும் கொண்டிருந்து, உதவிகள் புரிந்து வந்தார். பொறாமையுற்ற அமைச்சர்கள் பாகவதர் மேல் திருட்டுப் பழியை சுமத்த, தானும் பாகவதன் என்பதால் தனக்கும் அப்பழி சேரும் என்றுரைத்து பக்தர்களின் பேரில் களங்கமில்லை என்பதை விஷப்பாம்புள்ள குடத்தில் தமது கையை தீண்டுதற்களித்து, துணிவுடன் பக்தர்களைக் காத்தார்.
இராமன் தனியே அரக்கர்களுடன் போரிட்ட கதையை கேட்டதும் எம்பிரானுக்கு என்ன நேருமோ என்று கலக்கம் கொண்டு தம் படையனைத்தையும் திரட்டி கடற்கரையில் முற்றுகையிட்டு "ராட்சசர்கள் எங்கே எங்கே" என்று முழக்கமிட்டு, ராமனுக்கு உதவி செய்ய நின்ற வேளையில், ஸ்ரீராமபிரான் சீதாதேவி, லக்ஷ்மணன் சஹிதம் குலசேகர ஆழ்வாருக்கு காட்சி அளித்து ஆட்கொண்டதாக வரலாறு.
இறைவன் காட்சி கிட்டியபின், அரச போகத்தை வெறுத்து துறவு பூண்டார். பெருமாளுக்கு தாசன் என்றதால் இவரையும் குலசேகர பெருமாள் என்று அழைக்கலாயினர். இவர் எழுதிய பிரபந்த மொழியும் 'பெருமாள் திருமொழி' என்றாயிற்று. தமிழ் மொழி மட்டுமின்றி வடமொழி நன்கு அறிந்தவர். வட மொழியில் 'முகுந்தமாலை' என்ற நூல் இவரால் இயற்றப்பட்டது. சேரகுலவல்லி என்ற தம் மகளையும் அரங்கனுக்கே மணமுடித்தார்.
பல க்ஷேத்திரங்களை தரிசித்தவர், மன்னார் கோவிலில் பெருமாளை தரிசித்து அங்கேயே முக்தி அடைந்தார்.

January 03, 2019

ஆழ்வார்கள் - நம்மாழ்வார்:





அனைவராலும் பிரியத்துடன் நம்மாழ்வார் என்றழைக்கபடும் இவரின் வரலாறு பல வைணவ பெருமக்களும் அறிந்ததே. பிறந்த குழந்தைகளுக்கு உச்சந்தலையில் பூமிக்காற்று பட்டவுடன் தம் ஜன்மாந்திர நினைவுகள், தொடர்புகள் அனைத்தும் மறந்து போகும். அக்காற்று தலையைத் தீண்டுவதாலேயே முதன்முதல் பிறந்த பச்சிளம் பிள்ளைகள் அழுவதாக சொல்லுவதுண்டு. பிறக்கும் க்ஷணத்திலேயே இக்காற்றை வலிமையுடன் வெற்றி கண்டு சடகோபன் என்ற பெயர் பெற்றார். அழுகை அறுத்து, பேச்சறுத்து, பாலுண்ணாமல் இயற்கை உந்துதல்கள் ஏதுமின்றி ஞானத்துடன் ஒளிர்ந்தார். இவர் தோன்றிய இடம் திருக்குருகூர். காரியார் மற்றும் உடைய நங்கைக்கு திருமகனாய் அவதரித்தத இவர் 'விஷ்வக்சேனரின்' அம்சம் என்பது பக்தர்கள் நம்பிக்கை. திருக்குருகூர் அருகேயுள்ள கோவிலில் பதினான்கு ஆண்டுகள் தவம் புரிந்தும் தாமே கற்றுத் தெளிந்தார். மதுரகவி என்பவர் தென்திசையிலிருந்து புறப்பட்ட பேரொளியை தேடி, இறுதியில் அது நம்மாழ்வாரின் ஞான ஒளி என்று தெளிந்தார்..

"செத்தது வயிற்றில் சிறியது தோன்றின் எத்தை தின்று எங்கே கிடக்கும்" என்று மதுரகவி ஆழ்வார் கேட்க முதன் முறையாய் திருவாய் மலர்ந்து

"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதிலுறைத்த நம்மாழ்வாரில் தம் குருவைக் கண்டார் மதுரகவி ஆழ்வார்.

இவர் இயற்றியவை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, பெரியதிருவாய்மொழி ஆகியன. இப்பிரபந்தங்களில் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட பாசுரங்கள் உள்ளன. பெருமாள் கோவிலில் சாதிக்கப்படும் சடாரியை இவரின் திருவருளாக இன்றும் பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.

செத்தது என்பது ஜட உடலைக் குறிக்கும். அவ்வுடலில் சூலுற்று பிறக்கும் ஜீவன் சிறியது. அந்த ஜீவனாகப் பட்டது எதை உண்டு (எதனால் இங்கு ஜீவிக்கிறது என்பது பொருள்) எங்கே இருக்கும், என்பதை கேள்வியாக்கியவருக்கு,

"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதிலுறுத்தார். அதை (அத்தை) என்பது அவரவர் செய்த வினையைக் குறிக்கும். வினையை உண்டு வினைப்பயனாய் பிறந்து அது தீரும் வரை இப்பூவுலகில் ( அங்க்கே கிடைக்கும்) இருக்கும் என்பது பொருள்.

December 31, 2018

திருமழிசை ஆழ்வார்




ஸ்ரீமன் நாராயணனின் சுதர்சனசக்கரத்தின் அவதாரமாக கொண்டாடப்படுகிறார் திருமழிசை ஆழ்வார். பார்கவ முனிவருக்கும் அவர் பார்யாளுக்கும் புத்திரனாக பிறந்தாலும் பிண்டமாக ஜனன உரு கொண்டிருந்து, பின்னர் இறையருளால் கைகால் வரப்பெற்று அழகிய குழந்தை உருவானது. திருவாளன் என்பவரால் வளர்க்கப்பட்டார். இவர் தம் பெருமை அறிந்த ஒரு வேளாளர் தம்பதியினர் அன்றாடம் பாலமுதளித்து வந்தனர். அன்புடன் அளித்த பாலமுதை உண்டு அவர்களின் முதுமை நீக்கி இளமையருளினார். அவர்கள் பிள்ளையான கணிக்கண்ணனை தம் சீடராக்கிக்கொண்டார்.

கணிக்கண்ணனை பல்லவ மன்னன் ஊரை விட்டு ஒதுக்கி வைக்க, சீடனில்லா ஊரில் தாமும் இருக்கவேண்டாமென அவருடன் புறப்பட்டார் ஆழ்வார். கூடவே அங்கு பள்ளி கொண்ட பெருமாளை நாகப்பாயைச் சுருட்டி தங்களுடன் வரப் பணித்தார். பின்னர் தவறிழைத்ததற்கு அம்மன்னனும் மிக்க வருந்தி இருவரையும் அழைக்கவே, கூடவே பெருமாளையும் தம்முடன் மீண்டும் அழைத்து வந்தார் வீட்டார். அவர் சொன்ன வண்ணம் பெருமாள் செய்ததால், சொன்ன வண்ணம் செய்த பெருமாள். ஒரு இரவு தங்கியிருந்த இடம் ஒர் இரவு இருக்கையாகி பின்னர் ஓரிக்கையானது.

சைவம், சமணம் பௌத்தம் என்ற வழிவகைகளையும் ஆராய்ந்தவர், இறுதியில் பேயாழ்வாரை தமது ஆசிரியர் ஆக்கிக்கொண்டு வைணவம் தழுவினார். மற்ற மூவரும் ஹரியையும் ஹரனையும் சமமெனக் கருதி பாடல் இயற்றியிருந்தாலும், இவரே பெருமாளை உயர்த்திப் பிடித்தவராவார். இவர் எழுதிய நான்முகன் திருவந்தாதி மற்றும் திருச்சந்த விருத்தம் திவ்யபிரபந்தத்தில் இடம்பெற்றுள்ள முத்துக்கள்.

December 19, 2018

ஆழ்வார்கள் - சிறுகுறிப்பு - பேயாழ்வார்




திருமயிலை கிணற்றில் சிவந்த அல்லிமலரில், மஹாவிஷ்ணுவின் நந்தகம் என்ற வாளின் அம்சமாக தோன்றியவர். திவ்யப்பிரபந்த பாடல்களில் மூன்றாம் திருவந்தாதி இவர் புகழைக் கூறும். சிவனும் ஹரியும் ஒன்றென இவர் தரிசித்ததாக கூற்று. சைவ வைணவ ஒற்றுமைக்கு வித்திட்ட பெரும்பங்கும் இவருக்கு உண்டு. இறைவன்பாற் கொண்ட பக்தியால் அழுதும் சிரித்தும் பிதற்றியும் (உலகத்தோர் பார்வைக்கு) ஆடியும் பாடியும் மகிழ்ந்திருந்ததனால் பேயாழ்வார் என்று அழைக்கப்பட்டார். "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்" எனும் பாசுரத்தில் தாயாரையே முதலில் கண்டதாகவும் அவரையே திரு என்று விளிப்பதாக ஆன்றோர் வாக்கு.
நிகழ்வு:
முப்பெரும் ஆழ்வார்களான முதலாழ்வார்கள் மூவரும், திருக்கோவிலூரில் ஒரு சிறு மண்டபத்தில் மழைக்கு அண்டினர். ஒருவர் படுக்கவும், இருவர் அமரவும், மூவர் நிற்கவும் இடம் போதுமானதாக இருந்த அச்சிறு மண்டபத்தில் நாலாமவராக இறைவன் நெருக்கி நின்று இவர்களுக்கு காட்சி தந்தருளினார். இறைவனுக்கு அவ்விடத்திலேயே மூவரும் பாமாலை சூட்டி மகிழ்ந்தனர்.

சிறு குறிப்பு ஆழ்வார்கள் - பூதத்தாழ்வார்






மல்லிகைப் புதரின் நடுவில் நீலோத்பல மலரில் இவர் அவதரித்தார் என்பது ஸ்தலபுராணம். கௌமோதகீ எனும் கதாயுதத்தின் அம்சமாக ஏழாம் நூற்ண்டில் பிறந்தார். நாலாயிரம் திவ்யப்ரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதி திருவாய்மொழிந்தருளினார். நாராயண ஸ்மரணயைத் தவிர பிறிதொன்றினை அறியார். நொடிப்பொழுதும் திருமாலின் பக்தியில் உருகினார். திருமாலை வணங்கியவனுக்கு மண்ணுலக இன்பமும் விண்ணுலக பதவிகளும் ஒரு பொருட்டல்ல என்றுரைத்தார். சிறந்த பக்திக்கு ஆழ்வார்கள் வாழ்வே சான்று. கடுகளவேனும் அப்படியொரு பக்தி நமக்கும் சித்திக்குமாயின் பிறப்பின் பயனெய்தினோம்.

December 17, 2018

ஆழ்வார்கள் - பொய்கையாழ்வார்

 



பன்னிருவரில் முதலாமவர். காஞ்சிபுரத்தில் திருவேக்கா எனும் ஊரில் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில் பொய்கையில் அவதரித்ததால்  காரணப்பெயர் பெற்றார். அந்தாதியாக பல பாடல்கள் பெருமாள் பேரில் பாடியுள்ளார். அவை நாலாயிரம் திவ்யப்ரபந்தத்தில் ‘முதல் திருவந்தாதி’யாக விளங்குகிறது.

 

பொய்கையாரின் பிறப்பு ஏழாம் நூற்றாண்டு நிகழ்ந்துள்ளது. பன்னிருவரில் முதன்மையானவராக அடையாளம் காட்டப்படுகிறார். காஞ்சியிலுள்ள திருவெக்காவில் பொய்கையில் அவதரித்ததால் பொய்கை என்றே அழைக்கபட்டார். பெருமானின் பாஞ்சஜன்யத்தின் அம்சமாக கருதப்படுகிறார். 

 

நூறு பாடல்கள் கொண்ட 'முதல் திருவந்தாதி' எனும் தொகுப்பு அந்தாதியாக பாடப்பட்ட தனிச்சிறப்பை பெற்றது 

 

பொய்கையாழ்வார் இறைவனை புலன்களைக் கொண்டு துதிக்கிறார். 

*காது என்றும் பெருமானின் புகழை கேட்க பிரியப்படுகின்றன.

*கண்கள் அவனையே மட்டுமே காண விழைகின்றன,

*நாசி அவனுக்கு இட்ட துளசியை மட்டும் நுகர துடிக்கின்றன,

*கால்கள் அவன் குடிகொண்டுள்ள தலத்திற்க்கே செல்ல விரும்புகிறது.    

*நாவானது இறையின் பெயரை மட்டுமே பாடி மகிழ விழைகிறது,  என்று புலன்கள் அனைத்தும் இறை சேவைக்கே உள்ளதென துதிக்கிறார். 

ஐம்பூதங்களின் வடிவாகவும், மெய்ஞானமாகவும், அறமாகவும் ஞானத்தின் வேள்வியாகவும் பரம்பொருளை உணர்ந்து போற்றுகிறார். 

 

"புத்தியால் சிந்தியாது ஓதி உருவெண்ணும் 
அந்தியால் - ஆம்பயன் அங்கென்?"

என்று வலியுறுத்துகிறார். 

 

அதாவது சிந்தனையால், ஆழ்ந்த நோக்குடன் உள்முகமாய் பெருமாளை துதி செய்து உருவேற்றுவதை விடுத்து,  மந்திரத்தால் உருவேற்றி சந்தியாவந்தனம் முதலிய சடங்குகளைச் செய்வதால் என்ன பயன்?! என்று சடங்கு சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை வழங்க மறுத்து, மனத்தால் இறைவனை நினைக்கும் குணத்தை முன்னிறுத்துகிறார்.

திருக்கோவிலூரில், பொய்கையாழ்வார் பெருமாளின் தரிசனம் பெற்றது உன்னத நிகழ்வாகும். பக்தவத்ஸலனான விஷ்ணு, தம் அடியவர்க்கு அருளும் பொருட்டு, நிகழ்த்திய  திருவிளையாடல் பெரும் நெகிழ்ச்சிக்குரிய சம்பவமாக குறிக்கப்பட்டுள்ளது.  க்ஷேத்திரங்கள் பல தரிசித்து கொண்டே வந்து திருக்கோவிலூர் வந்தடைகிறார் பொய்கையாழ்வார். திருக்கோவிலூரில் உலகளந்த பெருமானாய் விஷ்ணு கோவில் கொண்டுள்ளார்.

 

பெருக்கெடுத்தோடும் தென்பண்ணை ஆற்றைக் கண்டதும் பெருமானின் பாற்கடலுடன் ஒப்பிட்டார் ஆழ்வார். பெருமாளின் திருவுருவம் நினைந்து பக்திப் பெருக்கெடுக்க உருகுகிறார். உடனே பச்சைமாமலை போல் மேனியுடன் மணிமாலைகள் அணிந்த மார்புடன் எழிலே உருவான திருமாலை தரிசிக்கிறார். பரவசத்தில் உருகி, நேரம் கடப்பதை அறியாமல் அங்கேயே நின்று விடுகிறார். 

தன் இயல்புக்கு திரும்பிய ஆழ்வார், இரவாகிப் போனதை உணர்கிறார். பலத்த காற்றும் பெருமழையும் சூழ, அருகே தென்பட்ட ஆசிரமத்துக்கு செல்கிறார். மிருகண்டு முனிவரால் அமைக்கப்பட்டிருந்த அவ்வாசிரமத்தில் யாரும் தென்படவில்லை.  

ஒருவருக்கு படுக்க இடம் அளவெடுத்தாற்ப் போல் இருந்தமையால், களைப்பாறி சற்றே ஓய்வெடுக்க முற்பட்டார். அங்கே திருமாலின் திருவுளப்படி, பூதத்தாழ்வாரும் வந்து சேர்ந்தார். மழைக்கு ஒதுங்க இடம் வேண்டி, ஆசிரமக்  கதவைத் பூதத்தாழ்வார் தட்டுகிறார்.  இருவருக்கு உட்கார இடமிருப்பதால், இருவருமாக அமர்ந்தபடி பரந்தாமன் பாடல்களில் லயித்திருந்தனர். 

மீண்டும் கதவு தட்டப்பட்டு, பேயாழ்வாரும் அங்கு வந்து இணைகிறார். மூவருக்கு நிற்க மட்டுமே இடம்.  ஒருவரை ஒருவர் இனம் கண்டு கொள்ள முடியாத காரிருள். மூப்பெரும் ஆழ்வார்களை ஒருங்கே இணைத்த இறைவன், தம் திருவிளையாடலைத் தொடர்ந்தார். 

நிற்க தாராளமாய் இடமிருந்தும், மூவரும் நெருசலுக்கு உட்பட, தம்முடன் இன்னும் ஒரு நபர் இருப்பதை உணர்ந்தனர். மூன்று பேர் மட்டுமே நிற்க முடிந்த இடத்தில் எப்படியோ நான்காமவரும்  இருக்கக் கண்டனர். மின்னலொளியில், நான்காம் நபரின் திருமுகம்..

திவ்யமான பேரழகுடன் விளங்கியதைக் கண்டனர். உடனே இறைவனை உணர்ந்து பாடல்கள் பல பாடி துதித்தனர். 

 

பொய்கையாழ்வார் பாடல்

தம்முடன் தங்கியிருந்த இறைவனைக் காண,  இருள் விலகி, கதிரவனின் வெளிச்சம் வேண்டி,   பொய்கை ஆழ்வார் இவ்வுலகை திருவிளக்க்காகவும், ஆழ்கடலை நெய்யாகவும், கதிரவனின் ஒளியை திரி கொண்ட தீபமாக பாவித்து


வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று

எனப் பாடி துதித்தார்.

(இருளை நம் அறியாமை மற்றும் பந்த பாசத்திற்கும், சுடரை முக்திக்கும் பக்திக்கும் ஒப்பிட்டு விளக்கலாம்.)

பொய்கை ஆழ்வார் அந்தாதி வடிவில் பாடிய  நூறு பாசுரங்களில் திருவரங்கத்து பெருமானைக் குறித்தும் பாடியுள்ளார்.

அரங்கனுக்கும் ஆழ்வாருக்கும் உள்ள தொடர்பு இன்று நேற்றல்ல. கர்ப்பகாலம் தொட்டே இருந்திருக்கிறது. அதற்கு முன்பும் இருந்திருக்கிறது. தாயின் கர்ப்பத்தில் தோன்றிய சான்றுகள் இல்லாத பொய்கையில் பிறந்தவருக்கு ஏது கர்ப்ப காலம்?! 

கர்ப்பகாலம் என்பது காலத்தின் முன்னோடியாக படைத்தலுக்கு முன் இருந்த ஒடுக்க காலத்தை குறிப்பிட்டிருக்கிறார் போலும். 

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர்வண்ணனைநான்
இன்றுமறப்பனோ ஏழைகாள் –அன்று
கருவரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கணடேன்
திருவரங்கமேயான்  திசை  

என்கிறது ஆழ்வார்  பாசுரம்                   

ஒன்றுமே மறக்கவில்லை. எப்பொழுதும் அவர் மறக்கவில்லை என்ற உறுதிகூறுகிறார். கர்ப்பகாலம் தொட்டே இருந்த சம்பந்தம். காலத்தின் சக்கர சுழற்சிக்கும் அப்பாற்பட்டு நிற்கும் உறவு.

என்னால் இந்த அழகனை எப்படி மறக்க முடியும்! எப்படிப் பட்ட அழகனை? ஓத நீர்வண்ணன்- ஆழியில் வெள்ளப் பெருக்கெடுக்க ஏற்படும் குளிர்வண்ணம் கொண்டவனை ஒரு போதும் மறந்து அறியேன். கர்ப்பத்தில் இருக்கும் காலத்தேயே மறந்தறியாதவன்,  இன்று மறப்பேனோ! 

அன்று தொட்டே கைதொழுதேன், கண்டேன். திருவரங்கத்து உறை கொண்டிருக்கும் அவனை நோக்கி கை கூப்பித் தொழுதேன்.

திருவரங்கத்தில் சயனத் திருக்கோலத்தில் ஆழிமேல் பள்ளி கொண்ட பெருமானை, கருவரங்கத்து உள்ளே ஏறக்குறைய அதே போல் சயனித்த நிலையில் கைகூப்பி நின்று, பக்தன்,   தன்னை குழந்தையாக பாவித்து பாடுவது பாசுரத்தின் அழகு.

 

August 10, 2015

ஆழ்வார்கள் - பகுதி 4 (பூதத்தாழ்வார்)






முதல் மூன்று ஆழ்வார்களுள் இரண்டாம் ஆழ்வாராக போற்றப்படுபவர் பூதத்தாழ்வார். இவரும் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மஹான். மூன்று ஆழ்வார்களும் ஒரே காலத்தவர். ஒருவரை ஒருவர் பாராமலே, திருக்கோவிலூரில் ஒன்றாகப் இறைவனின் வடிவழகைக் கண்டு பாடல்கள் பாடி, முறையே திருவந்தாதிகளாக அருளிச் சென்றனர். 
.

அவிட்ட நட்சட்திரத்தில், பல்லவ ராஜ்ஜியத்திலன் பகுதியான மாமல்லபுரத்தில் பிறந்த பூதத்தாழ்வார், கௌமோதகி என்னும் கதையின் பிறப்பம்சமாக வணங்கப்படுகிறார். ஸ்தலசயனப் பெருமாள் கோவிலின் அருகில் குருக்கத்தி என்னும் மாதவி மலரில் அவதரித்தாக சான்றுகள் கூறுகின்றன. கடல்மல்லை என்று குறிப்பிடப்படும் தொண்டைநாட்டு நகரம் இவரது அவதாரப் பெருமையை சுமந்துரைக்கிறது. 
.

பூதத்தாழ்வார் அருளியது இரண்டாம் திருவந்தாதி ஏறக்குறைய நூறு பாடல்கள் நிரம்பப்பெற்றது. திருக்கோவிலூரில் எம்பெருமான் அழகில் மயங்கி பக்திப் பெருக்கில் வெளிப்படுகிறது. பொய்கை ஆழ்வாரைத் தொடர்ந்து, இவரது பாசுரம். 
.
அன்பே தகளிய ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானச் தமிழ் புரிந்த நான் 
.
எனப் பாடிப் போற்றுகிறார்.
.
.அன்பையே விளக்காக்கினும் போதவில்லை போலும். அன்பை அகழியாக்கிவிடுகிறார். பெரும் அன்பை அகழியில் வழியவிட்டு இறைவன் பால் உள்ள ஆர்வத்தையே நெய்யாய் உருக்கி, அவர்பால் இன்புற்று உருகும் அறிவை-சிந்தையை, திரியாக்கி, ஞானம் எனும் சுடர் விளக்கை நாரணனுக்கு ஞானத் தமிழின் துணை கொண்டு ஏற்றுகிறார்.
.
.
(மேலும் பார்ப்போம்)
.