December 19, 2018

சிறு குறிப்பு ஆழ்வார்கள் - பூதத்தாழ்வார்






மல்லிகைப் புதரின் நடுவில் நீலோத்பல மலரில் இவர் அவதரித்தார் என்பது ஸ்தலபுராணம். கௌமோதகீ எனும் கதாயுதத்தின் அம்சமாக ஏழாம் நூற்ண்டில் பிறந்தார். நாலாயிரம் திவ்யப்ரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதி திருவாய்மொழிந்தருளினார். நாராயண ஸ்மரணயைத் தவிர பிறிதொன்றினை அறியார். நொடிப்பொழுதும் திருமாலின் பக்தியில் உருகினார். திருமாலை வணங்கியவனுக்கு மண்ணுலக இன்பமும் விண்ணுலக பதவிகளும் ஒரு பொருட்டல்ல என்றுரைத்தார். சிறந்த பக்திக்கு ஆழ்வார்கள் வாழ்வே சான்று. கடுகளவேனும் அப்படியொரு பக்தி நமக்கும் சித்திக்குமாயின் பிறப்பின் பயனெய்தினோம்.

No comments:

Post a Comment