December 19, 2018

அப்பூதி அடிகள்




Image result for அப்பூதி அடிகள்


திருநாவுக்கரசரின் சமகாலத்தவர். நாவுக்கரசரையே தமது மானசீக ஆசானாக, இறைவனாகவே வரித்து குருபக்தியில் சிறந்து விளங்கினார். நாவுக்கரசரின் பெயரில் அன்னதானங்களும் நற்பணிகளும் செய்து வந்தார். ஒரு சந்தர்பத்தில் தமது இல்லத்தில் உணவருந்த நாவுக்கரசரை பணித்தார். 

விருந்தளிக்கும் வேளையில் அப்பூதி அடிகளின் மகனை அரவு தீண்டி விட, தம்மை அண்டியவர்களுக்கு துக்கம் நேர்ந்து விடக்கூடாதென்று, இறைவனிடம் மன்றாடி, சிவபெருமான் கருணையால் அப்பூதி-அடிகள மகனை உயிர்பித்து, அவரை புத்திரசோகத்திலிருந்து, நாவுக்கரசரே மீட்டெடுத்தாக புராணம். அப்பூதி அடிகளும் அவர் மனைவியும் நாவுக்கரசரின் புகழ்பாடியே இறைவன் திருவடி சேர்ந்தனர். பகவானைக் காட்டிலும் அடியவர் தொண்டே சிறந்தது என்ற கருத்தை மெய்பித்தார். அப்பூதி அடிகள் அந்தணர்  குலத்தில் பிறந்து கிருஹஸ்தாசிரமத்தில் செவ்வனே கடமையாற்றியவர்.

.

ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment