January 03, 2019

ஆழ்வார்கள் - நம்மாழ்வார்:





அனைவராலும் பிரியத்துடன் நம்மாழ்வார் என்றழைக்கபடும் இவரின் வரலாறு பல வைணவ பெருமக்களும் அறிந்ததே. பிறந்த குழந்தைகளுக்கு உச்சந்தலையில் பூமிக்காற்று பட்டவுடன் தம் ஜன்மாந்திர நினைவுகள், தொடர்புகள் அனைத்தும் மறந்து போகும். அக்காற்று தலையைத் தீண்டுவதாலேயே முதன்முதல் பிறந்த பச்சிளம் பிள்ளைகள் அழுவதாக சொல்லுவதுண்டு. பிறக்கும் க்ஷணத்திலேயே இக்காற்றை வலிமையுடன் வெற்றி கண்டு சடகோபன் என்ற பெயர் பெற்றார். அழுகை அறுத்து, பேச்சறுத்து, பாலுண்ணாமல் இயற்கை உந்துதல்கள் ஏதுமின்றி ஞானத்துடன் ஒளிர்ந்தார். இவர் தோன்றிய இடம் திருக்குருகூர். காரியார் மற்றும் உடைய நங்கைக்கு திருமகனாய் அவதரித்தத இவர் 'விஷ்வக்சேனரின்' அம்சம் என்பது பக்தர்கள் நம்பிக்கை. திருக்குருகூர் அருகேயுள்ள கோவிலில் பதினான்கு ஆண்டுகள் தவம் புரிந்தும் தாமே கற்றுத் தெளிந்தார். மதுரகவி என்பவர் தென்திசையிலிருந்து புறப்பட்ட பேரொளியை தேடி, இறுதியில் அது நம்மாழ்வாரின் ஞான ஒளி என்று தெளிந்தார்..

"செத்தது வயிற்றில் சிறியது தோன்றின் எத்தை தின்று எங்கே கிடக்கும்" என்று மதுரகவி ஆழ்வார் கேட்க முதன் முறையாய் திருவாய் மலர்ந்து

"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதிலுறைத்த நம்மாழ்வாரில் தம் குருவைக் கண்டார் மதுரகவி ஆழ்வார்.

இவர் இயற்றியவை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, பெரியதிருவாய்மொழி ஆகியன. இப்பிரபந்தங்களில் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட பாசுரங்கள் உள்ளன. பெருமாள் கோவிலில் சாதிக்கப்படும் சடாரியை இவரின் திருவருளாக இன்றும் பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.

செத்தது என்பது ஜட உடலைக் குறிக்கும். அவ்வுடலில் சூலுற்று பிறக்கும் ஜீவன் சிறியது. அந்த ஜீவனாகப் பட்டது எதை உண்டு (எதனால் இங்கு ஜீவிக்கிறது என்பது பொருள்) எங்கே இருக்கும், என்பதை கேள்வியாக்கியவருக்கு,

"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதிலுறுத்தார். அதை (அத்தை) என்பது அவரவர் செய்த வினையைக் குறிக்கும். வினையை உண்டு வினைப்பயனாய் பிறந்து அது தீரும் வரை இப்பூவுலகில் ( அங்க்கே கிடைக்கும்) இருக்கும் என்பது பொருள்.

1 comment:

  1. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

    இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

    அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil US
    www.tamilus.com

    ReplyDelete