January 22, 2019

குறுகிப் போனவை




நின்று நிதானிக்க பொழுதில்லை..
கவிதைகள் ஹைக்கூகளாக
குறுநகை பதித்து விரைந்தோடுகிறது.
குறுங்கதைகள்: குறும்படங்கள்: குறுநாடகங்கள்:
காலம் போன்சாய் வடிவில்
வலைக்குள் குறுகிக் கொண்டது .
நேசிக்க நேரமில்லை...
அன்பை அரைநொடிக் குறுஞ்செய்தியாக்கிய
பிழையால் பிறழும் குறுங்காதல் .
ஒரு வரியில் அறம் போதித்த ஆத்திச்சூடியும்
ஒன்றரை அடியில் உலகை அளந்த குறளும்
தீர்க்கதரிசனத்தில் விளைந்த குறுமுத்துக்கள்

2 comments:

  1. உண்மைதான் ஷக்தி.

    ReplyDelete
  2. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் முயற்சி போல

    ReplyDelete