December 21, 2020

திருப்பாவை பாசுரம் 6 - (பாசுரத்தில் தேடிய முத்து )

விழித்தெழு.. பிள்ளாய் விழித்தெழு


Rangoli Credit : Suganthi Ravi;; Picture Source: Internet




பறவைகளுக்கு அலாரம் தேவையில்லை. நேரத்திற்கு ஓய்வெடுத்து, அதிகாலை இனிய நாதம் எழுப்பி, வைகரை விடியலை கானம் பாடியே வரவேற்கும். உறங்கும் நமக்குத்தான் பொழுதே தெரிவதில்லை. ஆழ்ந்த உறக்கம். பிறப்பு-இறப்பு சுழற்சியில் மாட்டிக்கொண்டு எழும்ப வேண்டும் என்ற எண்ணமே இல்லாத புத்தி தெளிவற்ற மயக்கம்.
.
சங்கம் ஊதியதும் இறைவனே நமை ஆட்கோள்ள வாவென்றே அழைப்பதை உணர்வதில்லை. உறங்கிக் கொண்டிருக்கிறோம்.
.
பிள்ளையே எழுந்திரு என்றே அன்னை நமை உறக்கத்திலிருந்து எழுப்புகிறாள். பூதகியின் முலைப்பால் உண்டு அவளை சமஹாரம் செய்தவன். சகடாசுரனை பிஞ்சுக் கால்களால் உதைத்து சமஹரித்தவன். அறிவாளிகளான யோகிகளும் முனிவர்களும் ஹரியென்றே தொழுது பணியும் நமது நாதன்.
.
அவனைப் பணிந்தால் நமதுள் விதையூன்றியிருக்கும் அசுரர்களும் க்ஷணத்தில் நமை நீங்குவர். துயர் நீங்கும். உறங்காதே! விழித்தெழு. ஹரி ஓம் என்றே துதித்தெழு.
.
*******
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
*******

No comments:

Post a Comment