December 26, 2020

திருப்பாவை பாசுரம் 11 - ( பாசுரத்தில் தேடிய முத்து)

பக்தர்களின் உறக்கம்

Rangoli Credit : Suganthi Ravi;; Picture Source: Internet




குற்றமற்ற கோபாலர்கள் குலத்தில் பிறந்த செல்வச் சீமாட்டி. குணசீலர்களின் பரம்பரை. பெரியோர்கள் சிறந்த குணவான்கள். பசுக்களும் கன்றுகளும் ஜீவனைக் குறிக்கும். அதை மேய்ப்பவன் இறைவன். நமை கண்காணிப்பவன். அப்படிப்பட்ட இடையர் பரம்பரை. வீரப் பரம்பரையாம். பசுக்கூட்டங்களை நல்முறையில் மேய்த்தவர்கள். தமது ஆன்மாவை நல்முறையில் வழி நடத்திச் சென்ற குணவான்கள். புகழ்மிக்க அத்தகைய குடியில் பிறந்த சுவர்ண கொடிபோன்றவள். இவளே ஒரு பாகவதப் பெண்.
.
மயில் போன்ற சாயலும், மெல்லிடையும் உள்ள அழகி. மயிலும் பாம்பும் கூட பெருமாளிடம் மிகுந்த அன்னியோன்னியம் உடையவை. இவளும் உள்ளத்திலும் சிறந்தவள், உருவத்தாலும் செயலாலும், பகவானுக்கு உகந்ததொரு நடத்தையுடையவள்.
.
எத்தகைய குணவானும் சிறப்புடையவனும், சமயத்தில் மோக-மாய வலையில் சிக்குவதைப் போல், சிறந்த புகழுடைய இப்பெண் தூங்குகிறாள்.
.
கண்ணைன் கார்மேக வண்ணனின் பெயரைப் பாடக் கேட்டும் நித்திரை கொண்டுள்ளாயே! அசையாமலும் பேசாமலும் இருக்கும் செல்வச் சீமாட்டியே, இந்த உறக்கம் தகுமா! இனி துயிலெழுதலே முறையன்றோ!
.
***
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம்ஒன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வபெண்டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
***

No comments:

Post a Comment