October 01, 2022

Where does Sri.Lakshmi Reside (Deivathin kural)

 



லஷ்மிக்கு வாஸ ஸ்தானங்கள் ஐந்து.

.
* ஸுமங்கலியின் ஸீமந்தம் என்கிற வகிடு,
* மலர்ந்த தாமரைப் பூவின் உள்பக்கம்,
* யானையின் மஸ்தகம் (தலை),
* வில்வ பத்ரத்தின் பின் பக்க ரேகை ஆகிய நாலோடு
* பசுவின் பின்புறமும் ஐந்தாவதாக மஹாலக்ஷ்மியின் நிவாஸமாக இருக்கிறது.
.
ஒரு கோவினிடம் நிக்ருஷ்டமானது (தாழ்ந்தது) என்று எதுவுமேயில்லை. அதனிடம் ஸர்வமும், ஸர்வாங்கமும் உத்க்ருஷ்டமே (உயர்ந்தனவே). நம் மடம் மாதிரி தர்மபீடங்களில் ப்ரதிதினமும் காலம் கார்த்தாலே நடக்கிற முதல் வழிபாடு கோபூஜைதான் என்பதிலிருந்து கோவுக்குள்ள உத்க்ருஷ்டமான ஸ்தானத்தைப் புரிந்து கொள்ளலாம். பசுவைவிட யானை எவ்வளவோ பெரியதாக இருந்தாலும் கோபூஜைக்கு அப்புறந்தான் கஜபூஜை.
.
Chapter: கோமாதாவும் லக்ஷ்மியும்
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment