October 30, 2022

Lord Ganesha heeded to the plea (cute n short incident) (Deivathin Kural)

 

செவிசாய்த்த வினாயகர்

லால்குடிக்குக் கிட்டே அன்பில் என்று ஒரு ஊர். தேவாரத்தில் அதை அன்பில் ஆலந்துரை என்று சொல்லியிருக்கிறது. அப்பரும் ஸம்பந்தரும் அந்த க்ஷேத்ரத்திற்குக் கிளம்பினார்கள். வழியிலே கொள்ளிடம் குறுக்கிட்டது. ஒரே வெள்ளம் பரிசலா, படகா ஒன்றுமே போக முடியாத வெள்ளம் இப்படி ஆச்சே என்று அவர்கள் அக்கரையில் நின்று கொண்டே ஸ்வாமியிடம் முறையிட்டார்கள்.
.
அப்போது ஸ்வாமி கேட்டுக் கொள்கிறதற்கு முன்னாடி அங்கேயிருந்த பிள்ளையார்தான், "வெள்ளச் சத்தத்தோட யாரோ ப்ரலாபிக்கிற குரலும் கேக்கறாப்ல இருக்கே" என்று காதை அந்தப் பக்கம் கொஞ்சம் சாய்த்து உன்னிப்பாகக் கேட்டார். 'செவி சாய்க்கிறது' என்பதை நிஜமாகவே பண்ணினார் .
.
மஹா பக்தர்களான அப்பர் - ஸுந்தரர்களின் குரல் என்று தெரிந்து கொண்டார். உடனே அப்பாவுக்கு 'ரிலே', 'ரெகமன்டேஷன்' எல்லாம் பண்ணினார். அப்பாவும் உடனே வெள்ளம் வடியும்படிப் பண்ணி அவர்களைக் கோவிலுக்கு வரவழைத்துக் கொண்டார்.
.
அன்பிலாலந்துறையில் 'செவிசாய்த்த விநாயகர்' என்றே அந்தப் பிள்ளையார் விக்ரஹ ரூபத்தில் அழகாகக் காதைச் சாய்த்துக் கொண்டு இருக்கிறார்.
.
Chapter: தேவார கர்த்தர் இருவருக்கு அருள்
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment