February 07, 2020

சிறப்புலி நாயனார்




திருவாக்கூர் எனும் அறமிக்க திருவூரில் அறம் வளர்க்கும் அந்தணர் மரபில் தோன்றியவர் சிறப்புலி நாயனார். இளமை முதல் மாறாத பக்தி கல்யாண சுந்தரனை துதி பாடி வந்தார். அடியார்களுக்கு அமுது செய்விப்பதும், அவர்கள் தேவையறிந்து பூர்த்தி செய்யும் தாராள குணமும் மிக்கவராகினார். மேலும், எண்ணற்ற வேள்வி யாகங்கள் சிவ ஆகம முறைப்படி செய்தும் செய்வித்தும் சேவை புரிந்தார். பஞ்சாக்ஷர மந்திரமோதி பல சிவ தொண்டுகள் செய்து, பிறரிடம் எல்லையில்ல பேரன்பு கொண்டு, இன்சொல் சொல்லி பக்தி வளர்த்தார். பலரும் இவர் மேல் அன்பு பூண்டு இவரை தொழுதற்குறியவராக கண்டனர். பல்லாண்டு சிறப்பாக வாழ்ந்தவர் சிவபதவி அடைந்து பெருமான் திருவடியை நித்தம் சேவிக்கும் பெரும்பேறு பேற்றார்.
.
ஓம் நமச்சிவாய 

No comments:

Post a Comment