February 21, 2020

சுந்தரமூர்த்தி நாயனார் (பகுதி 1)




சிவ வழிபாட்டு முறையை பின்பற்றும் எவருக்கும் சுந்தரர் எனும் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பு மிகவும் குறைவு.
.
ஆசிரியர், அரசன், தாய், மூத்தவர்கள் போன்ற உயர்ந்தோரை தமிழகராதியில் குரவர் எனக் குறிப்பிடுவதுண்டு.
.
சமயக்குரவர்கள் என்று போற்றபடும் நால்வருள் ஒருவர் சுந்தரர் எனும் சுந்தரமூர்த்தி நாயனார். இவரது இயற்பெயர் நம்பியாரூரர். இசைஞானியார் சடையனார் எனும் திருத்தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவரைப் பெற்ற பேறுக்கே இருவரும் நாயன்மார்களாக உயர்ந்தனர் என்பதை முன்பே பார்த்தோம்.
.
சுந்தரர் பெயருக்கேற்ப அகத்திலும் புறத்திலும் மிகுந்த அழகராக இருந்தார். அவர் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த போழுது அவரது அழகின் மனம் பறிகொடுத்த அரசர் நரசிங்கமுனையரையர் தாமே சுந்தரரை வளர்க்க பிரியப்பட்டு தம்பதிகளின் சம்மதம் பெற்று , பல கலைகளையும் கல்விகளையும் கற்பித்து சிறந்த முறையில் வளர்த்தார்.
.
பருவ வயதின் போது சடங்கவி சிவாச்சாரியாரின் புத்திரிக்கும் சுந்தரருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தின் போது சிவனார் வயோதிக வேடத்தில் தோன்றி திருமணம் நடவாமல் தடுத்தாட்கொண்டார். சுந்தரர் பரம்பரையே தமக்கு அடிமைப்பட்டுள்ளதாக சான்றுரைத்து திருவெண்ணை நல்லூரின் திருவருட்டுறைக் கோவிலில் சென்று அந்தர்தியானமானார். அசாரீரி ஒலித்து சுந்தரர் தமைப்பாடவே இப்பிறவி எடுத்ததை நினைவூட்டியது. பித்தன் எத்தன் என்றெல்லாம் வன்மையான சொற்களில் நிந்தனா-ஸ்துதி பாடியதில் உளம் மலர்ந்த இறையனார். சுந்தரரை 'வன்றோண்டன்' என்று அன்போடு அழைத்து, பித்தன் என்ற அழைத்த சொல்லையே முதலடியாக எடுத்துக்கொடுத்தார். அவர் பாடிய முதல் திருப்பதிகம் "பித்தா பிறைசூடி" என்றமைந்தது.
.
(சுந்தரர் தொடர்வார்)
.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment