March 16, 2018

ஒரு காதல் வந்துச்சோ ( நாடகம் - பகுதி 3 )



காட்சி 4


இடம் 'ஏ' ப்ளாக் கம்யூனிடி ஹால். 


(அடுத்த இரு வாரங்கள் தீவிர ஒத்திகை.)

சுசீலா : இன்டெராக்டிவ் கேமுக்கு ஐடியா குடுங்க

விஜி: பார்வையாளர்கள குலுக்கல் முறையில கூப்பிட்டு, மேட் ஃபார் ஈச் அதர் வெக்கலாம்.

நவீன்(சிரித்துக்கொண்டு): ஹா.... அது ரொம்ப ரிஸ்க்கான விஷயம்

விஜி: அங்க இருகற தம்பதிகள சொன்னேன். அய்ய... ரொம்ப ஜோக் அடிச்சதா நினைப்பு.

குமார்: டேய் நவீன் அடங்கவே மாட்டியா நீ...அதெல்லாம் போர் விஜி. வேற ஏதாச்சும்....

கதிர்: பிரபலங்கள் பேரை குலுக்கி போட்டு, யார் பேரு வருதோ,  அவங்களைப் பத்தி ஒரு participant பேசணும். அதை வச்சு மத்தவங்க அது யாருன்னு கண்டு புடிக்கணம்.

சுசீலா: wow, தட் சௌண்ட்ஸ் குட் கதிர்.

நவீன்: இது எங்க பாட்டி காலத்துல விளையாடுவாங்களாம்

கதிர்: எல்லாம் அப்டிதான்....பழைய மோர்களிய கிண்டி மேல கொத்தமல்லி தழை தூவி, இந்தப்பாரு எங்கூரு Dholka னு சொல்றது தான் இப்ப ட்ரெண்டு.

விஜி: ட்ராமா ரிஹெர்ஸல் எந்த அளவுல இருக்கு...அது ஒரு டைம் ப்ராக்டீஸ் பாத்துடலாம்.

நவின்(கடுப்புடன்): ரிஹர்சல் இருகட்டும். இந்த காஸ்ட்யூம் எங்க வாங்கறீங்க. 'விக்' எல்லாம் அரதப் பழசா இருக்கு. சகிக்கல. நானே ஷாம்பூ போட்டு, அலசிக் குடுத்துட போறேன்.


சுசீலா: ஆ...மா இங்க லோகல் ட்ராமாவுக்கு பக்கத்து கடை காஸ்ட்யூம் போதும். இதுக்காக ஏ.வி.எம் போக முடியுமா? எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணுங்க

குமார்: பாத்துடா பாதி டிராமால தும்மித் தொலைக்காத.


(ஒத்திகையில் மூழ்குகிறார்கள்..)



காட்சி 5

நேரம் எழு மணி. இடம்: ஏபிசி காலனி.

[ ஊரெங்கும் தீபாவளி ஜகஜோதியாய் ஜொலித்துக்கொண்டிருக்கிறது. நடுநாயகமாய் ஒரு ஷாமினா போட்டு, அதன் அருகில் சுமார்  முன்னூறு முதல் ஐநூறு தலைகள்  நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள். ஒப்பனை அறை' என்ற பெயரில் ஒரு சின்ன தடுப்பு]

[ தடுப்புக்கு பின், குறுக்கும் நெடுக்குமாக கதிர், எள்ளும் கொள்ளும் வெடிக்க கோவமாக நடந்து கொண்டிருந்தான். ]

கதிர்: ஏய் நவீன், வாடா. என்ன பண்ணிட்டுருக்க? நேரம் ஆகுதுன்னு ஜனங்க கூச்சல் போடறாங்க பாரு.

நவீன்: மீசை ஒட்ட மாட்டேங்குது, அந்த பாழாப்போன தடித்தாண்டவராயன் கடையில வாங்க வேணாம்னு சொன்னா யாரு கேட்டீங்க. இப்போ பாரு, ஒட்ட மாட்டேங்குது.


கதிர்: தடித்தாண்டவராயன் கடையா? நான் 'ரமணி & கோ'ன்னு இல்லை நினைச்சிட்டு இருக்கேன்.

நவீன்: இப்படி டைமிங்க் இல்லாம மொக்க போட்டா, அப்புறம் நீயாச்சு உன் நாடகமாச்சுன்னு விட்டுட்டுப் போய்டுவேன்.

(நவீன் முன்னால் தடாலென விழுந்து காலையில் தப்பும் தவறுமாக செய்த சூரிய நமஸ்காரத்தை செய்கிறான்)

கதிர்: நவீன், நான் கப்னு வாய பொத்திக்கறேன், மீசையை ஒட்டிட்டு சட்டுபுட்டுன்னு வந்துடு.

[ திரை விலக, அவசரத்துக்கு கிடைத்த ஃபெவிகுவிக்-ல் மீசையை ஒட்டிக் கொண்டு துஷ்யந்தன் மேடையில் குதிக்கிறான். ]

நவீன்: சகுந்தலா என்னை உன்னிடம் கட்டிப்போடும் இந்தக் கருநீண்ட கூந்தலின் ரகசியம் என்ன? [ கூந்தலை மெதுவாய் தொடுகிறான் ]

[ அவள் நகர எத்தனிக்க, கருநீள சவுரி துஷ்யந்தன் அணிந்திருந்த வங்கியில் மாட்டிக்கொள்கிறது.  அவிழ்ந்து விடுமோ என்ற பயத்தில் சகுந்தலா அப்படியே நிற்க, துஷ்யந்தன் சமாளிக்கிறான். ]


சுசீலா(ரகசியமாய்): இப்போதிக்கு கட்டிப்போட்டிருக்கும் ரகசியம், வங்கில 'சவுரி முடி

(இரண்டு பேரும் வசனம் பேசிக்கொண்டே மேடையை விட்டு தத்தித் தத்தி குதித்தோடி விடுகிறார்கள் )

(பார்வையாளர் வரிசையில் சபேசன்-மங்களம் முகத்தில் ஈயாடவில்லை.)

சபேசன்: நம்ம பொண்ணு பரவாயில்லை நல்லா நடிக்கறா.

மங்களம்(வருத்ததுடன்): ஏங்க...யாருங்க துஷ்யந்தனா நடிக்கறது? எங்க அண்ணனோ, அவன் மகன் குப்புவோ இதப் பார்த்திட்டா கல்யாணத்துக்கு சம்மதிக்கவே மாட்டாங்க.


சபேசன்: அட பைத்தியமே. அதான் அவளே குப்பு பப்புவெல்லாம் வேணாம்னு சொல்லிட்டளே. ஆனாலும் என் பொண்ணு  அதிபுத்திசாலி, உங்க வீட்டு சொந்தம்ன்னு சொன்னவுடன் வேணாம்னுட்டா பாரு.


[ மங்களத்தின் முகம், ஏடாகூடமாக கேள்வி கேட்ட டி.வி தொகுப்பாளரிடம் மாட்டிக்கொண்ட இதயத்தெய்வம் அம்மாவைப் போல் கோபத்தில் சீறுகிறது ]


மங்களம்: உங்க அக்கா பையன், பாச்சாவுக்கு இது தேவலை. என்ன பேரோ, பாச்சா தோச்சானிட்டு.

வினோத்: அடடா! உங்க சண்டையை வீட்ல வந்து வெச்சுக்கோங்க. இங்க வந்து நொயி நொயின்னு. எனக்கு வசனமே காதுல விழல.

சபேசன்: எனக்கு சுசீய சகுந்தலாவா பார்த்த பிறகு காதே பஞ்சடைச்சு போச்சு, வசனம் காதுல விழவே இல்லடா

( பாகம் 3 முற்றிற்று)

No comments:

Post a Comment