January 29, 2010

கதோபநிஷத் (சோவின் எங்கே பிராமணன் - பாகம் 2)

spilt milk என்று சொல்வார்கள். நெல்லை அள்ளினாலும் அள்ளலாம் கொட்டிய சொல்லை அள்ள முடியாது. வார்த்தைகளை அளந்து பேசுவதைப் பற்றி படித்தும் கேட்டும் இருந்தாலும் அகக் கண்ணை கோபமோ வருத்தமோ மறைக்கும் பொழுது சூடாகவோ அல்லது தகாத வார்த்தைகளோ வந்து விழுகின்றன. விழுந்த வேகத்தில் அவசரச் புத்திக்கு வருந்துகிறோம். உதிர்த்த ஒரே ஒரு சொல்லால் இழந்த கதைகள், கணங்கள், உறவுகள், மனிதர்கள் பலப்பல. இப்படிபப்ட்ட அனுபவங்கள் எல்லோர் வாழ்விலும் நிரம்பியிருக்கும். அதிக பூஜா பலன் பெற்றவர்கள் உதிர்க்கும் சொற்கள் அவ்வப்பொழுது பலித்தும் விடும்.

நசிகேதஸ் தந்தை வாஜஸ்ரவஸ் மகத்தான யாகம் செய்கிறார். யாகத்தின் போது தானங்கள் வழங்கப்பட வேண்டும். தனது தந்தை உபயோகமற்ற வயது முதிர்ந்த மாடுகளை பேருக்கு தானம் செய்கின்றதை கண்ணுற்று அதைப் பொருக்காத நசிகேதஸ், சற்றே படிப்பனையூட்டும் வண்ணம் "என்னை எவருக்கு தானமாக வழங்கப்போகிறீர்கள்" எனக் கேட்கிறான். மீண்டும் மீண்டும் இதே கேள்விகளால் துளைத்ததும் பொறுமை இழந்த வாஜஸ்ரவஸ் "உன்னை யமனுக்கு தானமாக கொடுத்தேன்" எனச் சொல்ல உடன் யமலோகம் போகிறான் நசிகேதஸ். அவ்வளவு வலிமை வாய்ந்தவை உதிர்க்கும் சொற்கள்!

மூன்று நாட்கள் யமனைப் பார்க்க வாயிலில் காத்திருந்ததால் நல்லாத்மாவை காக்க வைத்ததன் பொருட்டு தன் தர்ம நியாயங்கள் அழிந்து விடுமோ என அஞ்சி நசிகேதஸுக்கு மூன்று வரங்கள் அளிக்கிறான் யமன்.

முதலாவதாக, தன் தந்தையின் மேன்மை உயரும் பொருட்டு வரம் கேட்கிறான்

இரண்டாவதாக, எவ்விதமான யாகங்களும் வேள்விகளும் ஸ்வர்கத்துக்கு இட்டுச்செல்லக்கூடியவை எனக் கேட்டு, அதனைச் செய்யும் முறைகள் மந்திரங்கள் வழிகள் தெரிந்து கொள்கிறான். நசிகேதஸின் அறிவு கூர்மையை மெச்சி யமன் மிகவும் மகிழ்ந்து, குளிர்ந்து, அவனுக்குப் பட்டங்கள் வழங்கி மாலைகள் அணிவித்து மகிழ்விக்கிறான்.

அடுத்ததாக, அவன் கேட்ட வரம் "மரணத்திற்கு பிறகு நிகழும் நிகழ்வு என்ன?" என்பது. மரணத்திற்குப் பின் இருப்பு நிலை தொடரும் என்ற கருத்தும் அதனை மறுக்கும் வண்ணம் மரணத்திற்கு பிறகு இருப்பு நிலை இல்லாதொழியும் என்ற எதிர்மறைக் கருத்தும் நிலவி வருகிறது. தயை கூர்ந்து மரணத்திற்கு பின் என்ன என்ற ரகசியத்தை சொல்லி அருளுங்கள் என்கிறான். திடுக்கிட்டு போகும் யமனோ பல யோகிகளும் முனிவர்களும் கூட சந்தேகிக்கும் கேள்வியை நீ கேட்டு விட்டாய். இந்த ரகசியத்தைத் தவிர வேறு என்னவேண்டுமானாலும் கேள் என்க் கூறி வேறு வகையிலெல்லாம் நசிகேதஸைத் திசைத் திருப்பப் பார்க்கிறான். தன் ஆர்வத்தின் தீவிரம் விட்டகலாத நசிகேதஸும் மீண்டும் அதனையே வற்புறுத்திக் கேட்க, யமன் சொல்லும் விளக்கங்களே "கதோ'பநிஷதமாக உருப்பெற்றது.

4 comments:

  1. படிச்சிட்டேங்க

    ReplyDelete
  2. விரைவில் கதோபநிஷம் தொடரட்டும்.

    ReplyDelete
  3. //spilt milk என்று சொல்வார்கள். நெல்லை அள்ளினாலும் அள்ளலாம் கொட்டிய சொல்லை அள்ள முடியாது.//

    ஆரம்பம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete