February 09, 2010

குரு க்ருபை (சோ-வின் எங்கே பிராமணன் -பகுதி 2)


ஆச்சார்யர்-குரு-வாத்தியார் என்போரின் பேதங்களை நாம் முன்பே கண்டிருக்கிறோம். அச்சார்யன் தம் போதனைப் படி நடந்து முன்னுதாரணமாக இருந்து வழிநடத்திச் செல்பவர். குரு அவரையும் ஒரு படி மேல். அவரையும் கடந்தவர். அவர் பார்வையாலேயே தம் போதனையை போதிப்பவர். i.e. நயன தீட்சை செய்யக்கூடியவர். ஸ்பரிசத்தால் தீட்சை தரவல்லவர். மானச தீட்சை தரும் சக்தி படைத்தவர்.

எல்லோருக்கும் தெரிந்த உதாரணக் கதையொன்றை முன்பே அலசியிருக்கிறோம்.


ஒரு முறை சிறந்த குரு ஒருவர் தம் சிஷ்யனுக்கு பரீட்சை வைத்தார். "நீ மாடும் மேயும் போது பாலைக் கறந்து உண்ணாதே" என்று உத்தரவிடுகிறார். அவன் பிட்சை எடுத்து உண்கிறான். "பிட்சை எடுக்காதே" என்கிறார். திடீரென ஒரு நாள் கிணற்றில் அவன் விழுந்துவிட்ட செய்தி எட்டுகிறது. "உங்கள் ஆணைப்படி நான் பிட்சை எடுக்காமல், எருக்கம்பூவை உண்டு வந்தேன், அதனால் என் பார்வை குன்றிவிட்டது, கண் தெரியாது கிணற்றுள் விழுந்து விட்டேன்" என்றான். எப்பேற்பட்ட குரு பக்தி! என்று மெச்சி, அவனுக்காக அஸ்வினி தேவர்களிடம் வேண்டி பார்வை மீட்டுத் தந்து பின் ஞானமும் உபதேசித்தார்.




(முந்தைய பகுதியிலிருந்து).

"நீ சகல சாஸ்திரங்களையும் கற்றாவன் ஆவாய்" என்று சொன்ன மாத்திரத்தில் அவனுக்கு ஞானோபதேசம் கிடைத்துவிட்டது (குருவில் க்ருபையால்). குருவின் உபதேசம் அவ்வளவு ஷக்தி வாய்ந்தது.

உபதேசிக்கும் வகையில் இன்னொரு வகையும் உண்டு. எதிர்கேள்விகளால் ஞானத் தீ மூட்டி வழிநடத்தி செல்வர். ஸ்வேதகேதுவின் தகப்பனான உத்தாலகர் தம் மகனுக்கு கேள்விக் கணைகளாலேயே உபதேசம் நடத்துகிறார். ஆலமரத்து பழம் கொண்டு வரச் செய்கிறார்.

இதனைப் பிளந்து பார்த்தால் என்ன தெரிகிறது?

விதை!

"விதையை பிளந்து பார்த்தால் என்ன காண்கிறாய்?

சூட்சுமமான பெரிய ஆலமரமே விதைக்குள் இருக்கிறது!

(நீர் கொண்டு வரச் செய்கிறார். பின் உப்பிட சொல்கிறார். )

இப்போது அருந்தும் நீரில் உப்பு நடுவிலா, முதலிலா முடிவிலா உப்பு இருக்கிறது?

அதே போல் ஆன்மாவும் நீக்கமற எங்கும் வியாபித்திருக்கிறது என்று உதாரண விளக்கம் அளிக்கிறார். குறிப்பறிந்து பொருள் கொள்ளல் என்ற முறையில் கேள்விகளாலேயே ஆன்மவிளக்கம் உபதேசிக்கிறார்.

மனிதன் ஒருவனின் கண்ணைக் கட்டி பொருட்களை திருடிக்கொண்டு நடுக்காட்டில் விட்டுவ்ட்டால் அவன் எவ்வாறு திண்டாடி வழிதெரியாது தவிப்பானோ அப்படிப்பட்டது சம்சாரம். கர்மவினையை திருடனுக்கு ஒப்பிடலாம். ஆசை காமம் க்ரோதம் போன்ற குணங்கள் அவன் கண் மறைக்க வழி தெரியாது திண்டாடுகிறான். அப்படிபட்டவனுக்கு துணை கிடைத்து அவனை வழி சேர்ப்போனே குரு எனப்படுபவன்.

போலிகுருமார்கள் பற்றியே அதிகம் கேள்வியுற்று, குருகுலம், குருபக்தி என்பவற்றில் எல்லாம் நம்பிக்கை அற்ற நிலையில் நாம் இன்று இருக்கிறோம். எங்கும் எதிலும் போலிக்களைக் கண்டு சலித்து விட்ட நமக்கு, இறைவனை நாடும் பாதையிலும் போலிசாமியார்களைக் கண்டு நோகும் நிலை தான். அதனாலேயே இப்பாதையில் கால் வைக்க தயங்குபவர்கள் அதிகம்.

கலியுகம் தலைவிரித்தாடும் இக்காலகட்டத்தில் உட்கொள்ளும் உணவு முதல் மருந்துகள் வரை, மருத்துவர்கள் முதல், ஜோதிடர்கள் வரை எங்கும் போலிகள் அதிகமாகிவிட்டன. உறவினில், அன்பினில், வார்த்தைகளில், போலி தன்மை அதிகரித்து உண்மைகள் குறைந்துவருகின்றன. இக்கால கட்டத்திற்கேற்ப குருமார்களும் ஆசிரமங்களும் கூட சில தவறான நோக்கத்துடன் செயல்பட்டுவிடுவதால், இம்மார்க்கமே தவறு என்றோ இதில் செயல்படும் அனைவரும் வேடதாரிகள் என்றோ கூறிவிட இயலாது. போலிகளின் நடுவே நல்ல உணவும், மருந்தும், மருத்துவனும், அன்பும், உறவும் அவ்வப்போது தட்டுப் படுவதைப் போல் சிறந்த குருமார்களும் ஆச்சார்யர்களும் இன்றும் இருந்துவருகின்றனர். பல சன்மார்க ஆசிரமங்கள் உலகளாவிய முறையில் நிறைய சேவைகள் செய்த வண்ணம் உள்ளனர். இவர்களின் தன்னலமற்ற சேவை தொடர்ந்து வருகிறது.

"போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்" என விளம்பரம் செய்வது, தற்கால குருகுலம், குருமார்கள் ஆசிரமங்களுக்கும் சாலப் பொருந்தும்.

"போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள். போலிகளை நாடாதீர்கள்" உண்மையான குருவை எவ்விதம் கண்டு கொள்வது? பண்ட பதார்த்தங்களைப் போல் இதற்கென விதிமுறைகள் கிடையாது. உண்மையை பிரித்துணரும் பக்குவம் வளர்த்துக் கொள்வது தான் வழி. உண்மையான பக்தனுக்கு இது ஒரு பொருட்டே அல்ல. அவன் பிரித்துணரும் பகுத்தறிவு பெற்றவனாக இருப்பான். உண்மையான குருவை எளிதில் கண்டுணர்வான்.

6 comments:

  1. நன்கு உணர்ந்து எழுதுகிறாய் சக்தி!

    ReplyDelete
  2. mikka nandri shy. Thanks for stopping by.

    ashok,

    :)

    ReplyDelete
  3. //ஆசை காமம் க்ரோதம் போன்ற குணங்கள் அவன் கண் மறைக்க வழி தெரியாது திண்டாடுகிறான்.//

    சோதனைகளில் வென்று மீள்வதற்கு இவையெல்லாம் தடைக்கற்கள் போலும்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நன்றி ஜீவி, தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete