March 12, 2024

Lost and Found





தொலைந்து போனதாக ஏன் உணர்கிறேன்?
.
வார்த்தைகளையே விவாகம் செய்து
எழுத்துகளைக் கோர்த்து வீடு கட்டி
அசைகளில் இசைபாடி
ஓசை நயத்தில் நடனமாடி
வார்த்தைகளுக்குள்ளா
ஒளிந்திருந்தது என் ஆன்மா?
.
வரிகளுடன் கைகோர்த்து
அதனுடன் பயணித்து, சுவாசித்து
இறுதியில் அதையே உண்டு
எனதடையாளமாக்கிக் கொண்டு
பயணித்தவள்...
.
சிதறிய சொற்களை மீண்டும்
எடுக்கிறேன்...; தொடுக்கிறேன்...;
சொற்கள் மாறிப்போகிறது.
அதன் நிறம், தரம், எடை, குணம்,
வேறாகிப் போகிறது.
.
தமிழ் எனும் நதியில்
கைசேரும் நுரைகளும்
எனது அடையாளாத்தைப் போலவே
மாறிக் கொண்டே இருக்கிறது
.
ShakthiPrabha
March 12 2024

No comments:

Post a Comment