June 09, 2019

காணாமல் போனவன்




நகைக்கடைகளில் தினமும் திருதியை
கடற்கரைகளில் அடிக்கடி போராட்டம்
கோவில்களில் நித்திய ஆராதனை
மசூதிகளில் மாறாத பிரார்த்தனை
தேவாலையங்களில் அறிவு போதனை
பல்சுவை விருந்தகங்களில் வழியும் கூட்டம்
பலப்பல கேளிக்கைப் பந்தல்கள்...
கூட்டத்துப் பேரொலிகளால் கைவிடப்பட்ட
யாசகனொருவன் தூரத்தில்
காலிப் பாத்திரத்தில்
கண்மூடி மெட்டிசைத்துக் கொண்டேயிருந்தான்....

No comments:

Post a Comment