அம்புஜம் கிருஷ்ணா அவர்கள் எழுதிய கீர்த்தனை - "நீ போய் அழைத்து வாடி" - இன்று காலை கேட்ட போது வாக்கேயக்காரருக்கு என்னே ஒரு அழகான சிந்தனை!! என்று தோன்றியது.
.
இந்த பாடலில் வரும் கோபிகா ஸ்த்ரீ, அவளுடைய தோழியை தூதனுப்புகிறாள். இவளே பகவானை அழைத்திருக்கலாமே! இவளுக்கு அந்தரங்கமான சியாமளன். நீல மேக வர்ணன்.
...
நீராடும் கரையில் நெருங்கிப் பேசி, நித்தமும் பிரியேன் என்று சத்தியமெல்லாம் செய்திருக்கிறான். இவளே போய் அழைக்கலாமே! அவன் என்ன சாதாரணனா? மானுடனா? பரப்பிரமம் இல்லையா, அவனுக்கு எதற்கு தூது ? என்றால்...
..
இங்கு "சகி" என்று சொல்லப்படும் கோபிகை, இன்னொரு ஜீவாத்மாவைக் குறிப்பதாக தோன்றுகிறது. அது பெண்ணாக இருக்க வெண்டுமென்ற அவசியம் இல்லை. Not gender based. எனக்கு நேர்ந்த பேரின்பமெல்லாம், அடியே சகி, உனக்கும் நேரவேண்டாமா? நீ போய் அழைத்து வாயேன்! ... 𝒶𝓷𝒹 ℯ𝔁𝓅𝓮𝓇𝓲ℯ𝓷𝒸𝓮 𝓽𝒽𝓮 𝓷ℯ𝓬𝓉𝓪𝓇 ℴ𝓯 𝓭𝒾𝓿𝓃𝓲𝓉𝔂... என்று பரோபகாரம் பண்ணுகிறாள். ஊருக்கு உபன்யாசம் செய்கிறாள்.
..
ராமானுஜர் தான் அடைந்த அனுபவத்தை ஊருக்கெல்லாம் உபதேசித்து, அவர்களும் க்ஷேமம் பெற வேண்டுமென காருண்யம் கொண்டாரல்லவா, அதை நினைவு படுத்துகிறது.
.
இந்த பாடலுக்கு நடனமணி அற்புதமாக அபிநயமும் செய்தார். இசை, நாட்டிய விருந்து.
..
அந்த நீலமேக சியாமளனிடம் கேட்க ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கின்றன. இரக்கமில்லாத நிகழ்வுகளுக்கு காரணம் கேட்டாலும், ஆயிரம் சமாதானம் சொல்வான், பத்தாயிரமே சொன்னாலும், மனம் புண்ணாகி இருப்பவர்களுக்கு, பக்குவமும் இல்லாத சாதாரணர்களுக்கு, சட்டென ஆறுவதில்லை.
..
Walking out of context....
..
அம்புஜம் கிருஷ்ணா என்று wikiல் தேடிப் பாருங்கள். "கருநாடக-பாடகியாம்". கர்னாடகம் என்றால் பழைய, தொன்றுதொட்டு, 𝖆𝖓𝖈𝖎𝖊𝖓𝖙 𝖘𝖙𝖞𝖑𝖊 𝖔𝖋 𝖘𝖎𝖓𝖌𝖎𝖓𝖌 என்று பொருட்படுத்தலாம். அது என்ன கரு-நாடகம்? உலகமே கருமையான நாடக மேடையன்றோ என்று சொல்ல வருகிறார்களோ?
No comments:
Post a Comment