September 20, 2016

இருபது மழைக்காலங்கள்



ஒரு மழைக்காலத்துக் குடையின் கீழ்
பூத்த முதல் புன்னகை
வசந்த கால வரவேற்பறையில்
சிந்திய கனவுக் கோலங்கள்
வலிகளை கடந்து விட்டதாய்
இறுமாந்த நேரத்தில்
நீர்வீழ்ச்சியென நினைவுகள்
நிரம்பித் தெரித்தோடும்.
அன்று நீர்த்தூவி வாழ்த்திய மழை
பிரிந்த போது பெய்யவில்லை.
பிரிந்தவர் கூடுவதும்; கூடுபவர் பிரிவதுமாய்
சுழலும் வாழ்க்கை.
இருபது மழைக்காலங்கள்
வந்து சென்றன.
மறுபடியும் சந்தித்தால்
மழை பெய்யும்.
.
.
அதன் பின் ஓயாது.

3 comments:

  1. Not to be Published - A small correction to be made [ ஒ = ஓ ]

    அதன் பின் ஒயாது. = அதன் பின் ஓ-யா-து.

    ReplyDelete
  2. //அன்று நீர்த்தூவி வாழ்த்திய மழை
    பிரிந்த போது பெய்யவில்லை.//

    தமிழ்நாட்டில் வெயில் தாங்க முடியவில்லை. ஜீவ நதியாம் காவிரியில் தண்ணீர் இல்லாமல் பிரச்சனையோ பிரச்சனைகள்.

    அதனால் யாரும் யாரை விட்டும் பிரியாமல் அடிக்கடி ஓயாமல் ஒரே குடைக்குக் கீழே சேர்ந்தே இருக்கணும். மழை கொட்டோ கொட்டெனக் கொட்டணும். அதுதான் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடும்.

    இதனை வலியுறுத்திச் சொல்லியுள்ள கவிதைக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். :)

    ReplyDelete
  3. எனக்கெல்லாம் இருபது மழைக்காலங்களில் சிந்திய கனவுக் கோலங்கள் மிகக் குறைவாகவே தோன்றுகிறது அதிலும் வலிகள் குறைவு அது பற்றிய நினைவுகளும் குறைவுமழை பெய்தால்தால் புன்னகையா சில நேரங்களில் ஏந்தான் மழை பெய்ததோ என்று தோன்றலாம் ஏதோவலி உங்களை இப்படி எழுத வைத்ததோ. புரியவில்லை.

    ReplyDelete