September 14, 2016

குருவே பொன்னடி போற்றி



வேடிக்கையிலும்
கேளிக்கையிலும்
விவேகமின்றி உழன்றக்கால்- எம்
கேள்விக்கு பதிலாய்
ஐயம் அகற்றும் பேரொளியாய்
மிக்க கருணையுடன்
தேடி இல்லம் புகுந்து
தடுத்தென்னை ஆட்கொண்ட
சங்கரனே சிவனே
நீயே  தாயுமானாய்
தந்தையுமானாய்
நீயே மாலுமானாய்  - எம்
மாதவனுமானாய்
ஏழேழ் பிறவிக்கும்
அதன் அப்பாலும்
உன் பொன்னடி தொடர்ந்தே
பூஜித்திருப்பேனே
உன் சொற்படி நடந்தே
சேவித்திருப்பேனே

4 comments:

  1. ஏழேழ் பிறவிக்கும்
    அதன் அப்பாலும்
    உன் பொன்னடி தொடர்ந்தே
    பூஜித்திருப்பேனே//


    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளே நமக்கெல்லாம் ஒரே கதி !

    அதனை மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஒரே பெரியவா தான் ....அவர் _/\_ வருகைக்கு மிக்க நன்றி.

      Delete
  2. பெரியவரது எழுத்துக்களைப் படிக்கும் போது நிறையவே கேள்விகள் எழுகிறது சிலவற்றை பதிவாக்கி இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார்.... நம்முள் பல சிந்தனைகளையும் கெள்விகளையும் கிளர்ந்தெழச் செய்வதே மேலொரது பணி.

      Delete