November 01, 2014

அன்புள்ள அப்பா.......

நீ இன்றி நான் இன்னும் வாழ்கிறேன். இதோ எழுதக் கூட துவங்கிவிட்டேன். நீ நலமாகவே இருப்பாய் என நம்புகிறேன். உன்னை இறைவனும், நம் குருவும் வழி நடத்திக் கொண்டிருக்கலாம்.

சொல்லாமல் கொள்ளாமல், ஓடியாடி சிரித்தபடியே, கணப்பொழுதில் நீ கடந்து சென்றுவிட்டாயே!.... எங்க்களுக்கு வலித்தாலும், மென்மையான உனக்கு மரணமும் பூ போன்று கொய்துச் சென்றது.

நொடிக்கொரு முறை உன் இருப்பிடத்திலிருந்து தொலைப்பேசிய நீ இன்னும் எப்படி என்னுடனும் அம்மாவுடனும் பேசாமலே இருக்கிறாய்?

உன்னை ஒரு நாள் காண்பேன் என நம்புகிறேன். அது வரை எங்கள் நினைவுகளையும் அன்பையும் நீயும் சுமந்திரு. உனக்கு கோடி முத்தங்கள்.

அன்புடன்,
.........

11 comments:

  1. தெய்வமாக இருந்து காப்பார் அன்புத்தந்தை..1

    ReplyDelete
  2. நன்றி ராஜேஸ்வரி.............. ஆறு மாதம் ஆகியும் ஆறத மனது. நன்றி.

    ReplyDelete
  3. விளையாட்டுப்போல ஆறு மாதங்கள் ஓடிப்போச்சே ஷக்தி ! :(

    அம்மாவுக்கு ஆறுதலாக இருங்கோ, ஷக்தி.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
  4. வாழ்க்கையின் இயல்பு தெரிந்து இருக்கும் உங்களுக்கு. மறதியும் ஒரு வரம். இதுவும் கடந்து போகும்/ ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
    Replies
    1. Life Strikes us so suddenly...... amaam idhuvum kadandhu pogirathu.......edhuvume nilaippathillai polum. nandri sir.

      Delete
  5. இப்பொழுது தான் தெரியும். ஆழ்ந்த அனுதாபங்கள். மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். உங்கள் தாயாரைத் தேற்றுங்கள். காலம் தான் மருந்து. எவ்வளவு சூட்டிகையான அறிவும், மனமும் கொண்டவர்கள் நீங்கள்?.. எவ்வளவு தத்துவ ஞானம் அறிந்தவர்? உங்களுக்குத் தெரியாததா?.. தேற்றிக்கொள்ளுங்கள். உங்கள் தந்தையின் ஆசி என்றும் உங்களிருவருக்கும் உண்டு. அதுவே வழிகாட்டும்.

    ReplyDelete
    Replies
    1. thanks jeevi........அப்பா இரு தினம் முன்பு வரை வேலைக்கு சென்றுகொண்டிருந்தார். இரு நிமிடம் சாதாரணமாக முன்பு வரை பேசிக்கொண்டிருதார். திடீரென....வினாடியில் பூப்போல் கொய்தது மரணம். எவ்வளவு தத்துவம் பேசினாலும் முதல் ஒரு மாதம் பித்து பிடித்தது போல் இருந்தேன். என் தத்துவம் எல்லாம் வெத்தாகி போனது. இப்பொழுது மெதுவாக எழுந்து கொண்டிருக்கிறேன். அப்பா இருக்கிறார். என்றேனும் அவரைக் காண்பேன் என நம்புகிறேன். நன்றி சார்.

      Delete
    2. ஷக்தி ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு.. என் அப்பா இரண்டுவருஷம் முன்பு மறைந்த போது நான் அதிலிருந்து மீள ஒருவருஷம் ஆனது.. கடவுளின் திருவடியில் அவர் ஆன்மா சாந்தியடைந்து இருக்கும் ஆகவே நீயும் மனதை அமைதியாக்கிக்கொள் ஷக்தி. காலம் தான் மருந்து அனைத்துக்கும்.

      Delete
    3. miss him....... a lot........ inime eppo paarpen nu thonum sila neram.

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete