November 09, 2010

திருவிளக்கு வழிபாடு - ( சோ-வின் எங்கே பிராமணன் பகுதியிலிருந்து)


திருவிளக்கு மிகப்புனிதமாகக் கருதப்படுகிறது. நல்ல காரியங்கள் எது நடந்தாலும் விளக்கு ஏற்றுவதை நல்ல சகுனமாக பாவிக்கிறோம். விளக்கை அகமாக பாவித்து அங்கு ஞான ஒளி ஏற்படுவதை உணர்த்துவதாகவும் கொள்ளலாம். விளக்கு சுற்றுபுறத்தை சுத்திகரிக்கவும் செய்கிறது. அகத்தில் இருள் அகற்றி, ஞானத்தை, விவேகத்தை வழங்கும் விளக்கை வழிபட்டு ஸ்தோத்திரம் பல உண்டு. விளக்கேற்ற கற்பூரத்தை திருத்தி திரியாய் செய்து உபயோகிக்கலாம். வெறும் துணியை திரியாக்கியும், உபயோகிக்கலாம் அல்லது துணியில் சந்தனம் தடவி திரியாய் உபயோகப்படுத்தலாம். பஞ்சுத் திரியில் ஏற்றிய விளக்கும் விசேஷம். விளக்கை எந்த நேய் கொண்டு ஏற்றினால் சிறப்பு என்று மறை நூல்கள் குறிப்பிடுகின்றன.


காரம்பசுவின் நெய் கொண்டு ஏற்றும் விளக்கே மிகச் சிறப்புடையகும். உடல் கருப்பாகவும் மடி வெளுப்பாகவும் இருக்கும் பசுவை காரம்பசு என்று கண்டுணரலாம். அதற்கடுத்தபடியாக பசுநெய் கொண்டு விளக்கேற்றலாம். ஆட்டு நெய் கொண்டு விளக்கேற்றுவதும் சிறப்பு. இறுதியாக நல்லெண்ணை விளக்கு சிறப்பிக்கப்படுகிறது. வெப்பம் எண்ணையோ ஆமணக்கு எண்ணையோ எருமை நெய்யிலோ ஏற்றுவது உசிதம் அல்ல. ஒவ்வொரு தெய்வத்திற்கும் வெவ்வேறு நெய்/எண்ணை உசிதம்.

தினசரி வீட்டு வழிபாடுகள் முதல் கோவில் வழிபாடு வரை, விளக்கு இல்லாமல் துவங்குவதில்லை, விளக்கு இல்லாமல் முற்றுபெறுவதும் இல்லை. மின் விளக்கெல்லாம் வந்த பிற்பாடும் பசு நெய், எண்ணை விளக்குகள் ஏற்றினால் தான் திருவிழாக்களும் மங்கல நிகழ்ச்சிகளும் நிறைவு பெறுகிறது. தீபாவளி, கார்த்திகை தீபம் என்று தீபத்திற்கு சிறப்பாய் திருநாளின் பேரில் போற்றிக் கொண்டாடுகிறோம். தீபம் மேல் நோக்கியே இருப்பதால், நம் வாழ்வின் நோக்கமும் உயர்வும் லக்ஷியமும் கூட மேல் நோக்கி உயர்ந்த எண்ணங்களால் இருக்க வேண்டும் என்று பாடம் புகட்டுகிறது திருவிளக்கு.

திருமூலரின் திருமந்திரம், ஐம்புலன்களை வென்றோர் அப்புலன்களையே விளக்காக்கி வழிபடுவதை உணர்த்துகிறது. நம் உடம்பே ஆலயம் என்றால், அங்கு புலனடக்கம் செய்த ஞானி அப்புலன்களையே விளக்காக்கி இறைவனை வழிபடுகிறான். புலன்களை இவ்வாறு ஞானத்தால் எரித்து விடுகிறான் (not in literal sense) என்றும் கொள்ளலாம்.

உள்ளம் பெருங்கோவில்
ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
ஐம்புலன்களும் காலா மணிவிளக்கு

விளக்கு பூஜைகளிலும் தினம் வீடுகளிலும் படிக்கப்படும் திருவிளக்கு அகவல் /ஸ்லோகம் படிக்க : சுட்டுக

2 comments:

  1. //உள்ளம் பெருங்கோவில்
    ஊன் உடம்பு ஆலயம்
    வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
    தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
    ஐம்புலன்களும் காலா மணிவிளக்கு//

    *********

    மிக மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது..

    இது போன்ற திருமூலரின் திருமந்திரம் போன்றவை அழகான தமிழில் விளக்கமுடன் பதிவிடப்பட்டால், பெரும்பான்மையோரை சென்றடையும்

    ReplyDelete
  2. திருவடி தீக்ஷை(Self realization)
    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



    Please follow

    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

    (First 2 mins audio may not be clear... sorry for that)

    (PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




    Online Books
    http://www.vallalyaar.com/?p=409


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    ReplyDelete