November 22, 2022

What is True Secularism ( Deivathin_kural Volume 7 )

சுதந்திர பாரத அரசாங்கமானது மத விஷயமாகப் பின்பற்ற வேண்டிய கொள்கை 'ஸெக்யூலரிஸம்' என்பதாக இருக்க வேண்டும் என்பதே தற்போது அரசியலாரின் கருத்தாக உள்ளது.
.
'செக்யூலரிஸம்' என்பது உண்மையில் யாது என்று தெரிவிக்க வேண்டியுள்ளது. தற்போது எண்ணுவது போல் -"அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்து, அதாவது மதத் தொடர்பே அற்று"- இருப்பதல்ல. மாறாக , அரசாங்கமானது எந்த ஒரு மதத்தையும் 'மட்டும்' சாராது, எல்லா மதங்களையும் ஆதரிப்பதாக இருப்பது தான் சரியான பொருள்.
.
ஒரு நாட்டின் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே சார்ந்து பிற மதங்களை இழிவும் அழிவும் செய்யாது, எல்லா மதங்களையும் ஏற்ற இறக்கமின்றி சம பாவத்துடன் ஆதரித்து, அவை யாவும் பரஸ்பரப் பகையின்றித் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே உண்மையான 'செக்யூலரிஸம்' ஆகும்.
.
இன்று அநேகமாக எல்லா நாடுகளிலுமே பல்வேறு மதத்தினர் கூடி வாழ்வதால், எல்லா மதங்களையும் சமநோக்குடன் ஆதரித்து, அவற்றின் அபிவிருத்திகளுக்கான போஷணையை அரசாங்கங்கள் அளிப்பதே 'செக்யூலரிஸம்' எனப்பெயர் கொண்ட கொள்கைக்குப் பொருத்தமாக இருக்கும்.
.
Symbol of Chakra for Independant India

நமது சுதந்திர பாரதத்தின் கொடிக்கு நடுவில் நடுநாயகமாக பகவானது தர்மஸ்வரூபமான சக்கரம் இடம் பெற்றிருக்கிறது. இக்கொடியின் அமைப்பைத் திட்டமிட்ட தலைவர்களின் கருத்து வேறுவிதமாக இருப்பதாகத் தோன்றினாலும்ட, நாமோ, அவரது காப்பு சுதந்திர பாரதத்திற்கு எப்போதும் உண்டு என்று காட்டு முகமாகவுந்தான் அவரது இத் தர்ம சக்கரம் நமது கொடி நடுவில் இடம் பெறக் கருணை கூர்ந்திருக்கின்றாரென எண்ணுகிறோம்.
.
Chapter: அரசும் மதமும், தர்ம சக்கரம் பகவானின் அருட்சூசகம்
Chapter: உண்மையான 'ஸெக்யூலரிஸம்'
Chapter: அரசு புரிய வேண்டிய மத போஷணை அதனால் அரசு பெறும் லாபம்
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment