January 12, 2020

சாக்கிய நாயனார்


.Image result for சாக்கிய நாயனார்"


எல்லா உயிர்களிடத்திலும் அடியவர்களிடத்திலும் பேரன்பு கொண்டவராக திகழ்ந்த சாக்கிய நாயனார், திருச்சங்கமங்கை எனும் ஊரில் வெளாண்குடியில் பிறந்தவர். உயிரின் நிலை, ஜனன - மரண தொடர்ச்சி முதலியவற்றை தினம் சிந்தித்தவராக பல நூல்களை ஆராய்ந்து தகுந்த வழிகாட்டலை தேடும் பொழுது காஞ்சி நகரத்தில் தங்கியிருந்த பௌத்தர்களிடம் தமது சம்சயத்திற்கு தீர்வுண்டென்று எண்ணி பௌத்த மதத்தை தழுவினார். நெடுங்காலம் பல சமயத்து நூல்களை ஆராய்ந்தவராக எதிலும் திருப்தியுறாமல், எம்பெருமான் பெருங்கருணையால் சிவ\நெறி முறைகளையும் ஓதித் தெளிந்தார். சிவ வழிபாட்டில் ஈடுபட்டு நூல்களை ஆராய்ந்ததில் அவருக்கு தேடலின் விடை புலப்பட்டது.
.
*ஜீவனாகிய சித்தும் (chit /jeeva/ soul particle)
*அது செய்யும் வினையும் (deeds / action)
*வினைப்பயனும் (destiny / karma)
*கர்ம-பல-தாதா ஆகிய இறைவனும் (God principle)
-
என்று சைவ சமயத்தில் கூறபட்டுள்ள நான்கு ஆதாரங்களை அறிந்து, பிறவிப்பெருங்கடலை கடத்தற்கு வழிவகுப்பது இத்தத்துவமே என்றுணர்ந்தார் . அல்லும் பகலும் இறைவன் திருவடி மறவாது புத்த மத அடையாளங்களைக் களையாமல், சிந்தனையில் சிவஅன்பு ஒழுக நித்தம் எம்பெருமானை தியானித்திருந்தார்.
.
சிவலிங்கத்தின் தத்துவம் உணர்ந்தவர் தினமும் லிங்கத்தை தரிசித்து வழிபட்ட பின்பே உணவுண்ணும் நோன்புற்றார். ஒரு சமயம் வெட்டவெளியில் சிவலிங்கம் பூசையின்றி கிடந்ததை கண்டார். லிங்கத்தைக் கண்ட மகிழ்ச்சியில் அன்பின் பெருக்கால் அருகிலிருந்த கல்லை எடுத்து அதன்மேல் எறிந்தார். சிறு பிள்ளைகளின் அன்பை பெருமகிழ்ச்சியோடு ஏற்கும் பிரபஞ்சத் தந்தையானவர் அதனை உவப்புடன் மலரென கருதியேற்றார். மறுநாள், முந்தைய தினம் தான் லிங்கத்தின் மேல், செங்கல் எறிந்ததை எண்ணி, இது நிகழ்ந்தது இறைவனின் கருணை என உணர்ந்து அதையே நித்திய வழிபாடாக செய்து வந்தார்.
.
மறந்து போஜனம் செய்யப்போன ஒரு நாள், அடடா மறந்தேனே என்று மிக பக்தியுடன், பதபதைத்து, விரைந்தோடி சிவலிங்கத்தின் மேல் அன்பு மேலிட பஞ்சாட்சர மந்திரம் ஓதி கல்லை எறிந்தார். அக்கல்லானது இறைவனின் திருக்காட்சியை அவர் கண்முன் கொணர்ந்தது. ரிஷப வாகனத்தில் அம்பாள் சமேத இறையனார் ஆகாயத்தில் காட்சியளித்து நாயனாருக்கு பிறவா பேரின்பம் அருளினார்.
.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment