December 16, 2019

சத்தி நாயனார்


Image result for சத்தி நாயனார்"

வரிஞ்சையூரில் வேளாளர் பரம்பரையில் அவதரித்த சத்தி நாயனார், கைலாச நாதனின் திருவடிகளையே எண்ணி கசிந்துருகுபவராக இருந்தார். அடியார்களை பணிந்து வணங்கி மரியாதை செலுத்தியவரானார்.
.
எவரேனும் கொடும் அபராதமாகிய சிவனடியார்களை நிந்திப்பதை துணிந்து செய்தால் அவரது நாவை தம் குறடால் பற்றி அறிவார். இதனால் இவருக்கு சத்தி நாயனார் என்று பெயர் ஏற்பட்டது. தமது ஆயுட்காலம் தொட்டும் இப்பணியை வழுவாதும் அன்புடனும் செய்திருந்து, இறுதியில் இறைவன் நிழலைப் பற்றி இன்புற்றார்.
.
ஓம் நமச்சிவாய
.
,
(குறிப்பு: சில அடியார்கள் கதைகளை படிக்கும் போதும் கேட்கும் போதும் சற்று வேறுபட்ட சிந்தனை ஏற்படலாம். சிவ அபராதம் செய்வதோ அல்லது அடியார்களை நிந்திப்பதோ கொடும் அபராதமாக கருதப்படுவதால் இதனை தவறியும் செய்யும் ஜீவனுக்கு பெரும் பாபச்சுமை ஏற்பட்டுவிடும். அப்பாபச் சுமையிலிருந்து விடுவித்தும், கொடும் வினையை கழிப்பதாலும் இறைவன் அடியின் அருகாமைக்கு அந்த ஜீவனை கொண்டு சேர்ப்பதாலும் இத்தகைய செயல்கள் அன்போடு செய்யப்படும் தொண்டு என்று கருதப்படுகிறது. அதனால் அவர்கள் இறைவனுக்கு தொண்டு செய்பவர்கள் ஆகிறார்கள் என்பது கருத்து. ) 

No comments:

Post a Comment