August 13, 2011

மூழ்காத ஷிப்பே ஃப்ரென்ஷிப்பா



உன் உணர்வுகளைப் புரிந்தவள் நான்
உள் உறங்கும் கனவுகளின்
வண்ணம்அறிந்தவள்.
என் எண்ணத்தை ஓசையாக்கியவன் நீ
துவண்ட சிறகுகளுக்கு உயிரூட்டியவன்.

நம் உறவுக்கு
கயிறு பிணைத்து பெயர்சூட்டலாமென்றேன்
கைவிலங்கால் வேலியிட்டு
காட்டாற்றாய் ஓடும் அன்பை
கட்டுப்படுத்த வேண்டாமென்று
இதயபூர்வமாய் நான் ராக்கி கட்ட வந்த தினத்தில்
நீயோ நடுநடுங்கிப் போய்
தலைதெறிக்க ஓடி ஒளிந்தாய்.

இனிய நண்பனே
நட்பின் மேல் கொண்ட நம்பிக்கை
உறவின் மேல் உனக்கு அற்றுவிட்டதோ?

இன்னமும் நான் உன் தோழியாகவே...


7 comments:

  1. நம்பிக்கை நட்பின் மேல் அற்றுவிட்டதோ என்று இருக்க வேண்டுமோ. ?

    ReplyDelete
  2. thanks gmb sir, appadi kooda irukkalaam :D

    ReplyDelete
  3. ஓஹோ.. நேற்று ரக்ஷாபந்தன் இல்லையா?.. அதற்கான பதிவோ?
    நன்று.

    ReplyDelete
  4. நன்றி ஜீவி. நீங்கள் சொன்ன சிறு மாற்றம் சரியானதாகப் பட்டது. நன்றி :)

    ReplyDelete
  5. ¯ÈÅ¢üìÌ ¿£ þð¼ ¦ÀÂ÷ ¿ðÒ ¬Â¢ý
    «Åɢ𼠦À¡¢¨É ¡ÃȢš÷?

    ReplyDelete
  6. உண்மை தான். அவரவர்க்கு எண்ணங்கள் மாறுபடும் போல. யூனிகோட் எழுத்துருவை உபயோகியுங்கள் @ rama

    ReplyDelete
  7. உறவினுக்கு நீ கொடுத்த பெயர் நட்பு;
    ஆயின் அவன் வைத்த பெயர் எதுவோ யாரறிவார்?

    ReplyDelete