August 06, 2020

மகளெனும் தேவதை (Wrote this for my daughter) (year 2003)

( I wrote this for my daughter: year: 2003)



சிறிய சிப்பிக்குள் கடுகளவு முத்து

உருவாகி, உயிர்பெற்று,
பூமியை முத்தமிட்டு
விவரிக்க முடியாத விந்தைகளில் நீ ஒன்று!
.
என் கையளவு முகம் கொண்டு,
அதற்கேற்ப உடல் கண்டு
உடல் இயக்கும் இயக்கம் தாங்கி
இத்தனை சிறு மேனியிலே
அத்தனையும் அடுக்கப் பெற்ற
அற்புத ஓவியம் நீ
ஒருமுழக் காவியம் நீ
.
பிஞ்சு முகம் பார்த்து
கொஞ்சு மொழி கேட்டு
பஞ்சு உடல் அணைத்து
தஞ்சம் அடைந்திட்டேன் - என்
நெஞ்சம் நெகிழ்ந்திட்டேன்
.

2 comments:

  1. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்

      Delete